முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வலைக்கு வெளியே துள்ளும் எதுவோ! - 2

கேரளத்து எழுத்தாளர் நகுலனை அவர் வீட்டில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சந்தித்து உரையாடியதை நகுலன் இறந்தபின்பு பதிவிட்டிருந்தார் இந்த தலைப்பில். நகுலன் வீட்டில் அவர் கண்ட பூனையும் அதில் இடம் பெற்றதாய் நினைவு... கண்ணன் வீட்டிலும் யாருமில்லை...இல்லை இல்லை...யாரோ இருக்கிறார்கள் ஆனால் கண்ணன் இல்லை. கண்ணனை உங்களுக்குத்தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. ஒரு சராசரி மனித வாழ்வுதான் அவரது வாழ்வும். படிப்பு, வேலை, காதல், திருமணம், குழந்தை, குழந்தை படிப்பு, வேலை, திருமணம், பேத்தி,பேத்திக்கு முடியிறக்கி காது குத்து என ஐம்பத்தைந்து வயதில் கடமைகளை முடித்து, வாழ்வின்  வட்டத்திலிருந்து விடுபட்டு போய்விட்டார் நட்சத்திரங்களிடம். என்னேரமும் புன்னகை அணிந்தவர், இவரிடம் உதவி பெறாதவர் இங்கு குறைவே. ஓயாது வேலை, இறை பணி என இறுதி ஆண்டுகளை இறுதி என்று தெரியாமலே... முதல் நாள் வங்கியில் அவரது இருக்கைக்கு முன்னால் நெடிய வரிசை. எப்போது அங்கு சென்றாலும் அவரை சந்திப்பதும், என்ன வேலை இருந்தாலும் நிறுத்தி என்னோடு அன்போடு உரையாடுவதுமாய் வழக்கம். 'நாளை பார்க்கலாம்' என்று அன்றுதான் முதல்முத

பொத்தல்களால் நெய்த சேலை!

ஆடை என்பது மானம் காப்பது. அளவு, அழகு, எளிமை, வலிமை என்பவை எல்லாம் இதற்கு அப்புறம்தான்.  இழைத்து இழைத்து நெய்த ஆடையில் ஒரு ஓட்டையோ கிழிசலோ இருந்தால், 'சும்மாக்குடுத்தாக்கூட வேணாம்' என்பதாகவே உலகப்பொது மனநிலை. நம்மைப்போலவே நம் நாட்டிற்கும் ஒரு ஆடை உண்டு. அது இன, மொழி, வரலாறு, புவியியல் எல்லைகளைத்தாண்டிய ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது.  நாடு தாண்டியும் விரிந்து உலகம் முழுவதற்குமான ஒரே ஒரு ஆடை, வேற்றுமைகள் அனைத்தையும் அணைத்து மானம் காக்கும் அந்த ஆடை, உலகம் முழுவதும் Moral Fabric என்ற ஒற்றைப்பெயராலே அறியப்படுகிறது.  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று என்றோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவன் மகிழ்ந்து கூவியபோது அதில் பொத்தல்களோ. கிழிசல்களோ இல்லை. இடைப்பட்ட காலத்தில் அவரவர் சக்திக்கு அவரவர் இட்ட பொத்தல்கள்தான் எத்தனை? ஒரே ஒரு நாளில், ஒரே ஒரு நிலப்பரப்பில் இன்று மட்டுமே புதிதாய் எத்தனை பொத்தல்கள்? 'ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை' 'மருத்துவக்கல்லாரி மாணவி தொங்கினார்' 'நீரில் மூழ்கிய நண்பனை காப்பாற்றாமல் மரண நிமிடங்களை வீடியோ எட

என் பெயர் தெரியுமா?

ஒரு கதை சொல்லட்டுமா? ஜேம்ஸ் பாண்டும் V. V. S. லக்‌ஷ்மணும் விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில். பாண்ட் கரம் நீட்டி தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார், 'My name is Bond, James Bond'. நம்ம ஆளு லக்‌ஷ்மண், கரம் குலுக்கிக்கொண்டே சொல்கிறார், 'My name is Laxman, Sai Laxman, Venkata Sai Laxman, Veer Venkata Sai Laxman'. கரத்தை உதறி விடுபட்டு நம் ஜேம்ஸ், air hostess ஐ நோக்கி ஓடுகிறார், 'Sweetie, give me a seat anywhere else but NOT here!' அப்படி என்னதான் இருக்கிறது பெயரில்? பெயர் என்னவாக இருந்தால் போதும்? கவிக்கோ அப்துல் ரகுமான் 'பெயரில் நான் முடங்கிப்படுக்கக்கூட இடமில்லை' என்று ஒரு கவிதையில் எழுதியதாய் நினைவு... முன்னொரு காலத்தில் நம் வாழ்வின் எல்லைகள் சிறியதாய் இருந்த காலத்தில், நமை இன்னாரென  'இனம்'காண (ஊர், குலம், வம்சம், வீரம், பால்பேதம், இத்யாதி) பெயர் அவசியமாயிருந்தது, ஒரு திறவுகோல் போல. கதவுகள் பல மாறி, எல்லைகள் விரிந்து, நாவிதனும் சிற்றப்பனானதெல்லாம் நடந்துமுடிந்தபின்னரும் பெயர் எதற்கு? பெயரில்லாவிட்டாலும் நாம் ந

சே, காந்தி!

சங்கிலித்தொடராய் வாழ்ந்து முடியும் நம் வாழ்வை தடம் புரட்டும் விதமாய் ஒற்றை மனிதர்கள் அவ்வப்போது தோன்றுவதுண்டு.  சென்ற நூற்றாண்டின் இரு பெரும் ஆளுமைகள் - உலக அரசியலில்! இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைத்தது புவியை உருட்டும் நெம்புகோல்?  அடிமைத்தனத்திற்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராய் இருவரும் உயர்த்தியது போர்க்கொடிதான், கத்தியோடு ரத்தமோடு ஒன்றும் கத்தியின்றி ரத்தமின்றி ஒன்றும். வழி என்னவானாலும் போர் போர்தானே. தென்னமெரிக்காவில் ஒரு நாட்டில் பிறந்து இன்னொரு நாட்டின் ஆயுதப்புரட்சியில் தலைவனுக்கு உறுதுணையாய் நின்று, வென்று, ஆட்சிப்பொறுப்பு பெற்று அமைச்சரான பின் அவன் ஓய்வெடுக்கவில்லை...'இந்த மக்கள் மட்டும் சுதந்திரமாக இருந்தால் போதுமா? அடுத்த நாட்டின் மக்களும் என் மக்கள்தானே'! நானும் கூடடையும் பறவையல்லவே. பறக்கவேண்டிய தூரமும் வானமும் நிறைய நிறைய' என நலிந்தோரை நாடி, எதிர்ப்புக்குழு திரட்டி ஆயுதமேந்திப்போராடியவன்,  ஒரு மருத்துவன் - மானுடம் காக்க அவன் தேர்வு செய்த வழி அது.  இந்தியாவில் பிறந்து, தென்னாப்பிரிக்காவில் நலிந்தோர் உரிமைக்குப்போராடி வென்ற வழக

தலைவனற்ற சமுதாயம், ஒப்பிலாதொரு புதுமை!

மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கினத்திலும் உடல்/மனவலிமை சார்ந்த சமுதாயக்கட்டமைப்புகள், தலைமைகள் இருந்தே தீரும். சிறுநீ்ர் கொண்டு எல்லை வகுக்கும் மிருகங்களுக்கும், படை கொண்டு எல்லை வகுக்கும் மனிதருக்கும் இதுவே. பறவைகள் சமுதாயத்தில் குழு மனப்பான்மை தாண்டி தனி ஆளுமைகள் இல்லை என்றே சொல்லலாம். எந்த வித தலைமையும் இன்றி, என் கடன் பணிசெய்து நிற்பதே என்று காலத்திற்கும் இயற்கையோடு இணைந்து ஏனைய அனைத்தையும் வளர்க்கும் பேருயிர் மரம் மட்டுமே.  மாமரத்தோப்பில் தலைவனேது? பனைமரக்காட்டில் தலைவியேது?! எல்லைகள்தான் ஏது? ஒரு மரத்தின் அடியில் எது வளர்ந்தாலும் அதற்கு சங்கடமில்லை. இவைதான் வேண்டும், இவை வேண்டாம் என பாகுபாடு கிடையாது. தன்னை இறுக்கும் கொடியினங்களைக்கூட மரம் அறுத்ததாய் சுவடுகளில்லை. இறுக்கத்திற்கும் எல்லை காட்டி அவற்றினூடே வளர்வது மட்டுமே அவற்றிற்கு தெரியும். வண்டு துளைத்த மரம்கூட வாழுமட்டும் வண்டுக்கு விருந்தோம்பல் செய்தபின்னேதான் மாளும்!  கடும் வெயிலில் நீரின்றி வாடினாலும் கண்ணீர் விடும் ஒற்றை மரமாவது கண்டதுண்டா யாரேனும்?! கலீல் கிப்ரான் எழுதிய Prophet இலிருந்து திருமணம் குறி

நாலாம் தமிழ் - 3

மொழியின் உன்னதம் அறிய இலக்கணம் தேவையா? பழத்தின் சுவை அறிய தாவரவியல் அறிவு தேவையா?! அவ்வையைச்'சுட்ட' பழம் வேறு எந்த மொழியிலாவது உண்டா?! மற்ற மொழிகளைத்தழுவும் நம் ஆர்வம் தமிழ்மீது குறைய நாமே காரணம்... தாய்மொழியின் சுவையறியாதவர் வேற்று மொழியின் சுவை தேடி ஓட முதற்காரணம், அறியாத வயதில் நம் பள்ளி வகுப்பில் நடமாடும் கடுந்தமிழும், அதற்கு மாற்றாய், புது மொழியாய் எளிமையாக்கப்பட்ட வேற்றுமொழிகளின் அணிவகுப்பும்! கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி என தமிழ்ச்சங்கத்தலைவன் முழங்கிய கடுந்தமிழ்ப்பாட்டுக்கு விளக்கமும் கடுந்தமிழில் கற்பவர் ஒருபுறம், மிக எளிமைப்படுத்தப்பட்ட French, German மொழி கற்பவர் மறுபுறம், தேர்வு எழுதுகையில் எளிமைக்குத்தானே கூடுதல் மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு? மதிப்பெண் பின்னேதானே நம் சிறார்களை ஓடப்பழக்குகிறோம்? I wonder how we provide distorted playing fields for kids and expect them to choose the toughest of these fields in the name of 'love of the tamil language'? சேலை உடுத்தியவரை காண்பது அழகு. சேலை உடுத்துவது கடினம் என்பதாகத்தான்

நாலாம் தமிழ் - 2

எனக்கு இன்னும் பல பேர் இருக்கு! நாலாம் தமிழ் - 1 இல் 'மெல்லத்தமிழ் இனி சாகாது ப்ரோ' என்று எழுதியிருந்தேன். பாரதி, மெல்லத்தமிழ்...என்று சொன்னது சாபமாயல்ல, கோபமாய், அதுவும் யாரோ தமிழின் ஆளுமைத்திறனை ஏளனம் செய்யப்பயன்படுத்திய சொற்றொடரை சினந்து, தமிழரை திசையெங்கும் சென்று உலக மொழிகளில் (தமிழில் இல்லாத) உன்னதங்களை கண்டுபிடித்து தமிழில் சேர்க்கவைப்பதற்காக சொன்னது. பழகு தமிழ் தவிர மற்றவை வழக்கொழிந்து போய்க்கொண்டிருப்பதை உணர்ந்ததால் என் கணிப்பு 'மற்ற மூன்று தமிழ் மாண்டாலும் பழகு தமிழ் மட்டுமாவது தப்பி, தழைத்தோங்கும்' என்பதே! வர்ணபேதமற்ற உலகில் மூன்று தமிழ் மட்டுமே இருந்திருக்கவேண்டும். மக்களும் அவற்றையே 'பழகி'யிருக்கவேண்டும். என்று சிலருக்கு அது மறுக்கப்பட்டதோ அன்றே நாலாம் தமிழ் முளைத்திருக்கக்கூடும்... எந்த மொழியுமே நாப்பழக்கம். எந்த வர்ணம் தன் உணர்வுகளை மொழி மூலம் அதிகமாக பழகுகிறதோ அந்த மொழியே ஊட்டமாய் வளரும். உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்க முடிந்தால் மட்டுமே எந்த மொழியும் போற்றப்படும், பழகப்படும். இயல் இசை நாடகத்தமிழால் 'மெர

வலைக்கு வெளியே துள்ளும் எதுவோ! - 1

எப்போதாவது உங்கள் எண்ண ஓட்டத்தை, வேற்று மனிதர் போல 'தள்ளி இருந்து' கவனித்ததுண்டா? எந்தவித இலக்கணத்திற்கும் உட்படாமல், கோர்வையாக இருக்கவேண்டிய அவசியமின்றி, கால தேச அளவீடுகளை கடந்ததாகவே அது எப்போதும் அதன் போக்கில் செல்லுமல்லவா. அத்தகையதுதான் எனதும். அந்த எண்ணவோட்டத்தின் சில துளிகளை, random stream of consciousness, தொடர்ந்து உங்களோடு பகிர ஆவல். இப்போது இந்த நொடியில் கனவு பற்றி பகிரத்தோன்றுகிறது... இரண்டு வயது குழந்தை,  நள்ளிரவில் தூக்கம் கலைந்து எழுந்து ஒரே அழுகை...'அந்த அங்க்கிள் என்னை ஊஞ்சல்லேந்து தள்ளி விட்டாரு'....எந்த அங்க்கிள், எந்த ஊஞ்சல் என்று எவ்வளவு முயன்றும் விடை கிட்டவில்லை. எங்கள் கண் பார்வையிலேதான் பார்க்கில் ஊஞ்சல் விளையாட்டு...எங்களுக்குத்தெரிந்து யாரும் அவளை கீழே தள்ளவில்லையே... கனவாக இருக்கும் என முடிவு செய்து, கனவென்பதே என்னவென்று தெரியாத சிறு குழந்தைக்கு என்ன சொல்லிப்புரியவைப்பது?... ஏதோ சமாதானம் சொல்லி தூங்கச்செய்தோம்.  எனக்கும் கனவுகள் ஏராளமாய் வரும்...நெடுஞ்சாலையல் டைனோசார் துரத்துவது போலவும், ஆட்டோவில் தப்பியோடி, விமா

பித்தும் சித்தும் தரிகிட தரிகிட!

தன்னுள்ளே கரைந்து தானே யாதுமாய் யாதும் தானேயாய் அண்டத்தில் பிண்டமாய் என்றெல்லாம் நாமுரைக்க, இதேதும் உணராது அலைபவனை நகைத்து 'நம் ஆளல்லவே' என வெறுப்புமிழ்ந்து கல்லெடுத்து மிருகமெறிய விளையாட்டில் பங்கெடுத்து அவனும் திருப்பியெறிந்தான். அடிபட்டு ஊளையிட்டு பித்தம் தலைக்கேறி ஏனை மிருகம் கூட்டி முச்சந்தியில் கட்டியடிக்க, மாள்வது தெரியாமலே மரித்தான் அவன். சிரித்தது அண்டம். பிண்டத்திலொன்று போனாலும் வருவது அண்டத்திடமே!

நிஜமா!

நிஜமா? 'போர்வையெல்லாம் கடிச்சிருக்கு! கொல்லாம விடுறதில்லை' கையில் கம்புடன் அம்மா. கதவிடுக்கில் சுண்டெலி. ஒரு நொடி இரக்கத்தில் உயிர் பிழைத்து தப்பியோட, மற்றொருநாள் அப்பா சட்டை, அக்கா தாவணி... பாத்திரக்காரனுக்கு மகிழ்ச்சி, அம்மாவுக்கும்கூடத்தான். எனக்கொரு சந்தேகம், புதுவித கூட்டணியோ?!

மந்திரமாவது நீரு!

நம் உலகின் ஆதி மழைத்துளியில் முளைத்த தாவரம், பெருகி தாவரங்களானதும், மரம், செடி, கொடி என்று பல்கிப்பெருகியதும், பூச்சிகளை உண்ணும் ஆற்றல் பெற்றதும் (Non vegetarian plants) என்றோ எவ்வாறோ நடந்த விந்தையாகட்டும்... நம் எண்ணக்குவியல் இங்கு விந்தை மீதல்ல. அந்த முதல் துளி மீது!  அந்த நீர்த்துளி கண்ட, காணும், காணப்போகும் காட்சிகளை ஒரு நொடியேனும் நம்மால் உணரமுடிந்தால் அதுவே பேரின்பம்... அன்றும் இன்றும் என்றும் அசுவத்தாமன் போல மரணமின்றி அலையும் ஆற்றல் அதற்கு எங்கிருந்து என்ற கேள்விக்கும் போகவேண்டாம். அசுவத்தாமன் உதிரத்தையும் அவன் பாவங்களையும்கூட அது கழுவியிருக்கலாம்...  என்று விழுந்தாலும் எங்கு விழுந்தாலும் விழுந்த இடத்தில் உயிர் முளைக்கவைக்கும் பேராற்றலை புரிந்து கொள்ள நாம் என்ன செய்தோம்? அருவியென்றோம், ஓடையென்றோம், ஆறென்றோம், கடலென்றோம், இடையில் ஏரியென்றும், ஏந்தலென்றும், ஊருணியென்றும், குளமென்றும் தேக்கியது போக.  அப்படி தேக்கியவரெல்லாம் காற்றில் கலந்து பலகாலமானபின்பு, நம்மைச்செதுக்கிய நீரென்ற பேருயிரை மறந்து, இன்று அதனை நம் கைக்கருவியாக பாவிக்கிறோம்...ஆழிசூழ் உலகில், ஆழி நிரப்பிய குடுவைகள

காடு உறங்கும் வீடு

அலாவுதீனின் அற்புத விளக்கு தேய்த்தால்தான் பூதம் வரும். தேய்க்காமலே வரும் பூதம் சொல்லட்டுமா? மண் சருகு கல்லிடுக்கில் பெரும்பார பூமி சுமந்து நித்திரையிலும் காரியத்தில் கண்ணாய் காற்று வெயில் மழை நாடிபிடித்து உயிர் ஜனிக்க நேரம் குறித்து பூமியின் ஓட்டில் ஓட்டையிட்டு எட்டி உதைத்து வெளிப்பட்டு வான் நோக்கி துளிரையும் கீழ்நோக்கி நீர்தேடி வேரையும் வழியவிடும் உயிராற்றல் வந்ததெப்படி விதைக்குள்?  எது எப்பக்கம் என யார் சொல்லித்தந்தார் அதற்கு? அச்சிறு பைக்குள் உயிர்பூதம் அடைபட்டது எப்படி?  அப்பூதம் வெளிவரும் அற்புத  கணத்தை கண்டதுண்டோ யாரேனும்? யாரும் ஏவாமலே வான்வளர்ந்து கடல் மணலை எண்ணுமோ? நட்சத்திரங்களைப்பொறுக்குமோ? பூ தரும் காய் தரும் கனி தரும் ஏராளமாய் நிழல் தரும் உயிரனைத்தும் சுவாசிக்க தன் உயிர் கசியும் பெரும்பூதம் அப்பூதம்  பூதத்துலெல்லாம் தலை!

ஆனந்தம் - Language no bar!

எத்தனையோ காலேஜ் மூவீஸ் வந்திருக்கு. இதில் என்ன special ஆ இருக்கப்போவுது என்ற நினைப்புடன்தான் படம் பார்க்கத்தொடங்கினேன்.  வகுப்புத்தோழர்கள் இத்தனை ரகளையாய் இன்டஸ்ட்ரியல் விசிட் செய்வதையே முழு நீள திரைப்படமாய்! வியக்கவைக்கிறார் வினீத் சீனிவாசன். மலையாளத்தில் இவர் ஒரு தனி இடம். Pulse of the youth ஐ finger tips  ல் வச்சிருக்கார் இவர்! நட்பு, காதல், ஊடல், ஆடல், பாடல் என ஹம்ப்பியில் ஆரம்பித்து கோவாவில் முடியும் ஜாலி பயணம் இது. ஊசிப்பையன், டாட்டு பொண்ணு, சீரியசான டூர் ப்ளானர், ராக் ஸ்டார் அண்டு லவர் கேர்ள், லைவ் வயர் மாதிரி ஹாபி போட்டோகிராபர் இன்னும் பலர், இறங்கி அடிக்கிறார்கள். சமீப மலையாள படங்கள்போல் இதிலும் lecturer காதல், மலர் டீச்சரிடம் வழியும் ஜாவா lecturer போலின்றி இவர் வேறு ரகம். ஆனாலும் ரசிக்கவைக்கிறார் Sunset பார்த்து! டிவோர்ஸ் போன்ற கடினமான ஒன்றையும் கதை அழகாய் தாண்டிச்செல்கிறது. Sun Down இல் முடிகிறது படம். இது சேட்டன்ட தேசத்து சினிமாவுக்கு Sun Rise காலம். நல்ல சினிமா, தெரியாத மொழியிலும் ரசிக்கவைக்கிறது. Amazing energy level! Note 1: Adolescent innocenc

...தவமாவது அன்பு

செய்க தவம்! இரண்டு வயது சிறுமி. தினம் காலை ஏழு மணி - ஒரு நாற்காலியில், கையில் கரடி பொம்மையும் பள்ளி பையும் வைத்துக்கொண்டு. தனியே. பெற்றோர் இருவரும் வேலைக்கு ஏழு மணிக்கு சென்றபின், ஆட்டோவுக்காக பதினைந்து நிமிடங்கள் தனியே, gated community உள்ளே. ஆட்டோக்காரர் பதறியடித்து ஏழேகாலுக்கு வந்து சிறுமியை பள்ளிக்கு அழைத்துச்செல்வார் - ஒருநாள் கூட அந்த gated community யில் அந்நேரத்தில் யாருமே நடமாடுவதில்லையாம். பனிரெண்டு மணிக்கு பள்ளி முடியும், traffic சிக்கலில் லேட்டானால் அவரே பள்ளிக்கு போன் செய்து உள்ளேயே காக்கவைக்கச்சொல்லி, சென்று அழைத்துச்செல்வார் இன்னொரு பள்ளிக்கு. நாலு மணிக்கு அந்தப்பள்ளியும் மூடப்படும். மீண்டும் அவரே அழைத்துச்சென்று எட்டரை மணி வரையில் டியூஷனில் விடுவதாய் ஏற்பாடு. மனம் கேட்காமல் அவர் பல நாட்கள் அச்சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று மனைவியின் மேற்பார்வையில் தன் குழந்தையுடன் விளையாடவிடுவார் (பெற்றோர் அனுமதி உண்டு). இரவு ஒன்பது மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைப்பார். மறுதினம் காலை ஏழு மணிக்கு மீண்டும் அந்தக்குழந்தை கரடி பொம்மையுடன் தனியே

நாலாம் தமிழ்!

ஒரு கிராமத்தான் பையன் தமிழ் படிக்க பட்டணம் போனானாம். பல வருச படிப்பாம். முடிச்சதும் திரும்ப, ஊரே கூடி வரவேத்துதாம். மேள தாளமாம், மாலை மேல மாலையாம். களைச்சிப்போன பையன் அம்மையையும் அப்பனையும் பாத்து 'அன்னாய், தாதாய், அயற்சி மிக்கது. அடிசில் புக்கி அயனம் கொணர்க' என்றானாம். அதுதான் அவன் அன்னக்கி முதலும் கடைசியுமா பேசினதாம்!.  'எலேய், புள்ளய பட்டணத்துக்கு படிக்க அனுப்பிச்ச லச்சணமா இது?! அவனுக்கு பட்டணத்து பேய் புடிச்சிருக்குலே, புடிச்சி மரத்துல கட்டுங்கலே!' என்று கட்டி ஒதச்சு பிரிச்சி மேய்ஞ்சி தோலுரிக்க, ரெண்டு நாள் பசியில நொந்து நூலாயி, பாக்க வந்த அம்மை, அப்பன்கிட்ட தீனமா முனகுனானாம், 'அம்மை, வவுறு பசிக்கி, சோறு குடு'ன்னு. இதத்தான அவன் ரெண்டு நாளு முன்னாடியுஞ்சொன்னான்!!? இயல் இசை நாடகமென்று முத்தமிழோடு முடிந்திருந்தால் இன்றும் யாம் அத்தமிழிலிலேயே அடிசில் வடிப்போம். முத்தமிழின் வர்ண பேதங்களுக்குள் சிக்கி இன்றும் நமை அன்னாய் தாதாய் என வதைபடாமல் காத்தது, காப்பது நான்காம் தமிழ், 'பழகு தமிழ்'. கண்ணதாசன் பார்த்திபன் மகனை விளித்த த

நழுவும் மொழி - முன்னுரை

கம்ப்யூட்டர் பற்றி புத்தகங்கள் மூலமே அறிந்த ஒரு தலைமுறை இன்று புத்தக வாசிப்பை மறந்துகொண்டிருக்கிறது வெகுவேகமாய், கம்ப்யூட்டரில் படிப்பது சாத்தியமென்றாலும். 'யு நோ? என்க்கு எது படிச்சாலும் ரெண்டு பேஜுக்குள்ள இருக்கணும். இல்லேன்னா இன்ட்டரஸ்ட் போய்டும். ப்ளஸ், who has time for reading books?!' என தோள்குலுக்கி நகர்ந்தாலும், புத்தகங்கள் வாங்குவது மட்டும் குறையவில்லை. யார் படிக்க? மொழி என்பது முதலில் தாய்மொழி. அது தொப்புள்கொடி உறவு. மூளை வளரும் முதல் மாதங்களில் எந்தக்குழந்தையும் அதிகம் கேட்பது தாயின்மொழி. அது 'தாய்மொழி'யாக இருந்தவரையில் குறையொன்றுமில்லை. தாய்க்கே தாயின் மொழி கற்கும் விருப்பம் குறைந்து (I hate Tamil, what with such difficult grammer...கூறுகெட்ட எதிர்மறை nonsense!. You know, French is the most romantic language in the world...and...easiest to learn!') வேற்று மொழிகளை சீராடும்போதுதான் தொப்புள் கொடி பாழடைகிறது. எனது அனுபவத்தில் நான் உணர்ந்தது இதுவே 'அடிப்படை தாய்மொழியிலென்றால் பன்மொழியும் சுலபமாய் பின்பயிலலாம்'. A true polyglot is one

நழுவும் மொழி - ஒன்று - செம்மீன்!

என்ன மனுஷன்யா இந்த 'தகழி'! அறுபது வருடங்களுக்கு முன் எங்கோ சுழன்றடித்த கடலுக்குள் என்னை இப்ப சட்டுனு இழுத்துட்டுப்போய்ட்டானே! தகழி சிவசங்கரன்பிள்ளை. 44 வயதி்ல், அதுவும் இருபதே நாட்களில் எப்படி செய்யமுடிந்தது இவனால் இப்படியொரு பெருங்காரியம்!!!! மரக்கானும் மரக்காத்தியும் உப்புக்காற்றும் கண்ணீர் உப்பும், அரையனும், அரையத்தியும், காசும், காதலும், சமுதாயக்கட்டமைப்பின் விசித்திரங்களுமாய் அவர் வரைந்த கேரளக்கடற்கரை கிராமத்து காவியம் இன்னும் ஈரமாய் உப்பு சொட்ட என் மனதில்... காயலாம், காயாமலும் போகலாம்.    அலைகடலில் தோணியில் அவர் வீசிய தூண்டிலில் விருப்பமுடன் சிக்கி், கதையை அவர் நகர்த்திய பாதையில் ஆனந்தமான பயணம்! நாலாம் மதத்துக்காரனின் சிறுவனும் வலையனின் சிறுமியும் விளையாடினால் தவறு சொல்லாத அந்தக்கடல்புறத்தில், வளர்ந்தபின்னான அவர்களின் இடையேயான காதல் நிகழ்வுகளை அவரவர் உணர்வின் வழி /ஆதாயத்தின்வழி இறுதிவரை நகர்த்திச்செல்கிறார் தேர்ந்ந மரக்கானைப்போல்! அதுவும் அந்த இறுதிப்பயணம்! Timeless!!! பெண்களின் நுட்பமான உணர்வுகளை, அக்கால ஆண்களின் மனநிலையை, அவை கா

கபிலன் வீட்டில் பூக்கள் உண்டு

என் வீட்டு தோட்டத்தில் ஓரமாய், மௌனமாய் அவள், நான் பார்க்கும்போதெல்லாம் நின்றுகொண்டே. வாய் நிறைய சிரிப்பவள் அஞ்சாறு மாசமா இப்படி இருக்காளே என்று நாளாக நாளாக என்னுள் ஒரு வேதனை.  எப்படி கேட்பது, எங்கு தொடங்குவது, நான் பேசுவது அவளுக்குப்புரியுமா, புரிந்தாலும் கேட்பாளா என்றெல்லாம் குழப்பம். தனியே சில முறை ரிகர்சல் பார்த்துவிட்டு ஒரு நாள் வெட்கம் பிடிங்கித்தின்ன (first time ங்க!), பேச ஆரம்பித்தேன் (யாராவது பாத்துட்டா நம்மளப்பத்தி என்ன நினைப்பாங்க என்ற யோசனை வேற...). முதல் முயற்சி தோல்வி. அடுத்த சில முயற்சிகளும் அப்படியே... இப்படி நாட்கள் நகர்கையில், என் வெட்கம் விலகி எங்கோ ஒரு புள்ளியில் ஆத்மார்த்தமாக பேச ஆரம்பித்தேன். நெடுநாள் மௌனத்தை ஒரு நாள் கலைத்து அவள் கேட்ட ஒற்றைக்கேள்வியால் நிலைகுலைந்தேன்; 'ஏன் வெட்டின?' குற்ற உணர்வுடன் பதில் சொல்ல முயன்றேன், 'நான் பண்ணலம்மா, வேணும்னு பண்ணலம்மா...உறவினர் கேட்டதினால ஒரு ஆள வச்சி வெட்டினேன்'. 'ஏவினது நீதான?' '...ஆமாம். தெரியாம தப்பாயிடுச்சி...' 'உங்க இனமே அப்படித்தானே? ஒரு வார்த

நூல் சுமக்கும் பறவை

காற்றைக்கிழித்து வில்லாய் வளைந்து  நெளிந்து வாலாட்டி வானேறி நூல்பிடித்த கர அசைவில்  சூட்சும பலத்தில் அலைந்து  திரிந்து அற்புதங்கள்  காட்டி  சிலபல நூல் அறுத்து  மோட்சம் தந்து தானும்  ஒருநாளில் அறுபட்டு விடுபட்டு சென்றடையும் பெரும் சூட்சுமக்கரத்தில் கல்பகோடி பட்டங்கள் காலகாலமாய். எப்போது எதை அறுப்பது   எதை விடுப்பது என எதுவோ எங்கோ சுண்டினும்  என் பறத்தல் எனக்கே எனக்காய்... பறத்தல் சுகம், நூலற்ற பொழுதிலும்!

சருகென வீழ்வோம் வா!

உதிரும் சருகும் உதிரமாகும்  பல்லுயிர்க்கு. எஞ்சியதும் விதைசேரும். சருகின் உரசலில் உயிர் முளைக்கும் உறங்கும் விதையில். என்று முளைக்கும் எவை முளைக்கும் என்றறியா சருகுக்கு தெரிந்தது ஒன்றே, 'ஏதாவது முளைக்கும், உயிர் தழைக்கும்'. விதையாக வீழ்பவர் முளைக்கவும் சருகுதவும். நல் எண்ணம் செயல் சிந்தனை முற்றி முற்றி உதிரட்டும், வாழ்வு எங்கும் தழைக்கட்டும், தேவ சருகொன்றின் பாதம் பட்டு அன்று அகலிகை முகிழ்த்ததுபோல்!

என் கிளையில் மழை பூக்கும்!

காற்றுக்கு குரல் தரும் நீருக்கு மோட்சம் தரும் நெருப்புக்கு உருவம் தரும் நிலத்திற்கு வளம் தரும் வானுக்கு வளி சேர்க்கும் ... எல்லார்க்கும் எல்லாம் தரும் வரம் மரம் தாவரம்!