முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் பெயர் தெரியுமா?

ஒரு கதை சொல்லட்டுமா?

ஜேம்ஸ் பாண்டும் V. V. S. லக்‌ஷ்மணும் விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில்.

பாண்ட் கரம் நீட்டி தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார், 'My name is Bond, James Bond'. நம்ம ஆளு லக்‌ஷ்மண், கரம் குலுக்கிக்கொண்டே சொல்கிறார், 'My name is Laxman, Sai Laxman, Venkata Sai Laxman, Veer Venkata Sai Laxman'. கரத்தை உதறி விடுபட்டு நம் ஜேம்ஸ், air hostess ஐ நோக்கி ஓடுகிறார், 'Sweetie, give me a seat anywhere else but NOT here!'

அப்படி என்னதான் இருக்கிறது பெயரில்?

பெயர் என்னவாக இருந்தால் போதும்?

கவிக்கோ அப்துல் ரகுமான் 'பெயரில் நான் முடங்கிப்படுக்கக்கூட இடமில்லை' என்று ஒரு கவிதையில் எழுதியதாய் நினைவு...

முன்னொரு காலத்தில் நம் வாழ்வின் எல்லைகள் சிறியதாய் இருந்த காலத்தில், நமை இன்னாரென  'இனம்'காண (ஊர், குலம், வம்சம், வீரம், பால்பேதம், இத்யாதி) பெயர் அவசியமாயிருந்தது, ஒரு திறவுகோல் போல.

கதவுகள் பல மாறி, எல்லைகள் விரிந்து, நாவிதனும் சிற்றப்பனானதெல்லாம் நடந்துமுடிந்தபின்னரும் பெயர் எதற்கு?

பெயரில்லாவிட்டாலும் நாம் நாமாகத்தானே இருப்போம்?

Blossom Bobbykutty என்ற பெயர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எந்தக்கதவின் திறவுகோல் இந்தப்பெயர்?! 

யாரைச்சுட்டுகிறோம் என்ற அடையாளப்படுத்துதல் தவிர வேறொன்றும் அறியாப்பெயரில் எப்படி ஏறிற்று இத்தனை சுமைகள்? ஏற்றிய நமக்கே மறந்துபோகுமளவுக்கு நெடுங்காலமாய் சுமக்கிறோம்!

பெயர் இருந்தால்மட்டும் போதுமா என்றால் அதுவும் இல்லை...A1,A2, Clerk, Typist, Commissioner, மஞ்சள் காம்பவுண்டு வீட்டுக்காரர் etc... என வேலை/இடம் சார்ந்த அடையாளக்குறியீடுகள், சில இடங்களில் பெயர்களை அவசியமற்றதாக ஆக்குகின்றன.

நிகர் உலகில் எந்திரங்கள் பேசும் மொழியிலும் பெயர் உண்டு. IP address எனும் ஒரு அடையாளக்குறியீடு!

மனிதர்கள் தவிர ஏனைய உயிர்கள் பெயர்கள் தேடுவதில்லை. அவற்றிற்கு தேவையுமில்லை. மனிதர் போல இன, மொழி, புவியியல், வரலாற்று எல்லைகள் அவற்றிற்கு பொருந்தாதல்லவா? ஆனாலும் அவை இனம் காணும் அழகை கண்டதுண்டா?

உறவுகளை சொல்லி அழைக்கும் பொதுப்பெயர்கள் எல்லா வீடுகளிலும் இன்னும் உள்ளன. சித்தப்பா, மாமா, சித்தி, பாட்டி என்று ஒரு விதம்; முன்னு, பண்ட்டி, டிங்கு என்று இன்னொருவிதம். நம் கற்பனையே இதன் எல்லை.

உங்கள் பெயர் உங்களுக்கு போதுமானதாய் இருக்கிறதா? எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும்?

உயிர்களை இணைப்பதற்காய் நாம் உருவாக்கிய இந்த பெயரமைப்பை உயிர்களை 'இனம் கண்டு' அழிக்கவும் பயன்படுத்துவது நாம்தானே!

மனிதன் என்ற ஒற்றைப்பெயரில் அடங்கும் நம் பெயர் புரியுமா ஏனைய உயிர்களுக்கு?

பெயரில்லா உலகம் நமக்கு பேரச்சம் தரும் என்று அஞ்சி, கண்ணில் படும் அனைத்துக்கும் பெயர் வைத்தே தீருவேன் என்று 600 கோடி மக்களும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம்; ஆனாலும் என் பச்சை உன் பச்சையல்ல என்பதாகத்தான் இருக்கிறது பெயர்! (நான் கிளியையும் நீங்கள் பாக்குமர இலையையும் நம்தம் பச்சைக்கு ஆதாரமாக்கினால்!).

இப்பொழுதுதான் ஆதார்/Social Security Number வரை வந்திருக்கிறோம். ஏனைய உலகும் ஆதாரில் இணைந்தால் நமக்கு பெயரென மிஞ்சுவதென்னவோ Unique Reference ஒன்றுதான் (எண், எழுத்துக்களால் அமைந்த ஒரு தொடர் வாக்கியம்)!

அத்தகைய உலகம் எப்படி இருக்கும் என தெரிந்துகொள்ள ஆசையா?

ஐன் ராண்ட் (Ian Rand) என்ற உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரின் குறுநாவல் Anthem கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தேடுங்கள், நிகர் உலகின் பெருங்கடல் (Internet) திறந்தே கிடக்கிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்