முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கும்மோணம் - Game ஸ்டாப் - 2

'இதனால் நம்ம ஏரியா அரை டவுசர்கள் சங்கம் நம் வீதி வாழ் அரை டவுசர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதென்றால்... ஜீன் மாதம் தொடங்கி மறு வருடம் மே மாத இறுதி வரை (பள்ளி விடுமுறை நீங்கலாக) தினந்தோறும் மாலையில் கீழ்க்கண்ட ஏதாவதொரு விளையாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென சங்கம் முடிவெடுத்துள்ளது!' பளிங்கி விளையாட்டு, பம்பரம், புளியாங்கொட்டை, கிட்டிப்புள், ஐஸ் பாய் (கிறுக்கு புடிச்ச வெளிநாட்டுக்காரனுங்கோ நம்ப கேம ஐ ஸ்பைன்றாணுங்கோ!!) - அதாகப்பட்டது, கும்மோணத்து 'கல்லா மண்ணா?' விளையாட்டு. அப்பால செவன் ஸ்டோன்ஸ், ஹவர் சைக்கிள்! இதில் முதலிரண்டு விளையாட்டுகளை ஏற்கனவே பாத்தாச்சி. எனவே கிட்டிப்புள்ளிலிருந்து தொடங்குவோம். ஒண்ணரை அடி நீள குச்சி ஒண்ணு, அரை அடி நீள குச்சி ஒண்ணு. இந்த அரையடி நீள குச்சியோட எதிரெதிர் முனைகளை ஜோராய் கூராய் சீவி வைத்துக்கொள்ளவும். ஷாட் பூட் த்ரீ போட்டு யார் முதலில் ஆடுவது யார் அடுத்தது என வரிசை நிர்ணயம் செய்யவும். தரையில் சின்னதாய் ஒரு நேர்கோட்டு பள்ளம் செய்து அதில் குறுக்காக முக்காலடி குச்சியை (புள்) வைக்கவும். நீளமான மற்றொரு குச்சியை (கிட்டி) அதனருகில் உள் பக்கத்...

கும்மோணம் - லாஸ்ட் ஸ்டாப்!

"தனி மனிதர் விளையாட்டுகள் எல்லாம் விளையாட்டே அல்ல!" இதுவே எங்கள் தாரக மந்திரம்.  கும்மோணத்தில் நாங்கள் விளையாடிய விளையாட்டுக்கள் எல்லாமே குழு விளையாட்டுக்கள்தான், சைக்கிள் ஓட்டுவது உட்பட! கருவிகளும் அதிகம் தேவையில்லை, விலையும் மலிவு, அல்லது இலவசமாகவே கிடைக்கும் கருவிகளே! 1. புளியாங்கொட்டைகளை ஒரு கையளவு எண்ணி சம அளவில் எடுத்துக்கொள்ளவும். 2. இரண்டு அல்லது இரண்டு+ ஆட்டக்காரர்கள் அவசியம்.  3. ஒரு இடத்தை 'நிற்குமிடமாக' மார்க் செய்து, அதில் இருந்து சில அடி தூரத்தில் உங்கள் சக்திக்கு தகுந்த அளவில் ஒரு முழு வட்டம் வரையவும். மையத்தில் ஒரு அடையாளமிடவும். 4. முதல் ஆட்டக்காரர் ஒரு கொட்டையை மட்டும், 'நிற்குமிடத்திலிருந்து' வட்டத்து மையப்புள்ளியை இலக்காக கொண்டு தூக்கிப்போடவும். 5. விழுந்த இடத்தை மார்க் செய்யவும். 6. இப்படி எல்லா ஆட்டக்காரர்களும் முறை வைத்து தூக்கிப்போட்டு மார்க் செய்தபின் யாருடைய மார்க் மையப்புள்ளிக்கு மிக அருகில் உள்ளதோ அவரே ஆட்டத்தை தொடக்க அனுமதிக்கப்படுவார். 3. அவர் எல்லோரது புளியங்கொட்டைகளையும் சேர்த்து, வட்டத்துள் கொட்டைகளை பரவலாக தூவி விடுவார். 4. அத...

எங்கே செல்லும் இந்தப்பாதை?...

நேற்றுக்கும் நாளைக்கும் இடையிலான பொழுதில் எல்லையிலா பெருவாழ்வு வாழ எத்தனை கனவுகள்? இந்தப்பொழுதிலும் கனவு மயக்கத்தில் நமை வீழ்த்த எத்தனை எத்தனை முயற்சிகள்? இன்றைய உலகை இன்றே நுகர்ந்து தீர்க்கும் பேராசையை நமக்குள் விதைத்து, தூப தீபம் காட்டி வளர்ப்பவரும் நம் போல மனிதர்தானே? வேகம் வேகம் செயல்வேகமென முழங்கிக்கொண்டு இதோ, ஆந்திராவின் நர லோகேஷ் பல நூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில், ட்ரில்லியனை தொடும் பெருங்கனவில் இன்றைய உலகை மொத்தமாய் நுகரத்துடிக்கும் பெருவணிகங்களுக்கு கம்பள வரவேற்பு தந்து பூரண கும்ப மரியாதை செய்கிறார். பக்கத்து மாநிலங்களுக்கு ஏற்கனவே வயிறு எரியத்தொடங்கிவிட்டதாக நகைக்கிறார். எரியப்போவதென்னவோ ஆந்திர ஆகாயம்தான், காணாமல் போகப்போவதென்னவோ ஆந்திர நிலத்தடி நீர்தான் என சிறுபிள்ளைத்தனமாக எண்ணுவோருக்கு ஒரு செய்தி, நாம் எல்லோருக்கும் ஒற்றை ஆகாயம், ஒற்றை பூமியே விதித்திருக்கிறது. பூமியின் தகவல்களை நிலவில் நாளை சேமித்து பூமிக்கே விற்க இன்றே கனவுகள் காணத்தொடங்கிவிட்ட பெருநிறுவனங்களுக்கு தற்காலிக நிறுத்தம்தான் நம் போன்ற நாடுகளின் இயற்கை வளங்கள். 'மொத்தமாய் உறிஞ்சிவிட்டு உறிஞ்ச...

கு. டு ரா. ரைட் ரைட் - 09

கும்மோணத்து சினிமாவும் காமிக்சும், பாப்பின்சும் நானும்! நான் படித்தது கிருஸ்துவ பள்ளி என்பது உங்களுக்கு நினைவிலிருக்கும். பள்ளியில் கலை விழாக்கள் சிறப்பாக நிகழ்த்துவது போலவே திரைப்படங்களும் காண்பிப்பார்கள். அவ்வப்போது மதிய நேரம் வெள்ளித்திரை கட்டி கூடுமானவரை கிருஸ்துவ அடையாளங்கள் கொண்ட திரைப்படங்களை காட்டுவார்கள். அப்படித்தான் ஒரு முறை ஸ்வாதி நட்சத்திரம் காட்டினார்கள். இன்னொருமுறை முத்துராமன், 'ஆனந்தமானது, அற்புதமானது, நானந்த மருந்தை கண்டுகொண்டேன்' என பாடிச்சென்றார். (புனித அந்தோணியார் படம் என்பதை பிற்காலத்தில் அந்த பாடலை வைத்து இணையத்தில் தேடி கண்டுபிடித்தேன்.) பின்னொரு நாளில், 'மான்களும் சொந்தம் தேடையில் இந்த மானிடன் செய்த பாவம் என்னவோ!' என திருடன் சிவாஜி ஞான ஒளி படத்தில் ஏசுவிடம் மன்றாடினார். அவரை எப்படியாவது பிடிக்கவேண்டும் என மேஜர் சுந்தர்ராஜ போலீஸ் முயற்சிப்பார். இடையில் ஒரு நாள் கப்பல் ஒன்று கடல் கொந்தளிப்பில் சிக்கி, வெள்ளைக்கார மாலுமிகள் அன்னை வேளாங்கன்னியால் கரை சேர்ந்தனர். இந்த களேபரங்களுக்கு இடையில் ஒரு அநாதை சிறுவன் அன்பைத்தேடி அலையும் கதை மனசை பிழிந்தது. அ...

மல்லிகை மனம்

  எனது நகரின் ஒரு பிரபலமான பழக்கடை அருகே அவரை பார்த்தேன். பின் ஐம்பதுகளில் வயது இருக்கலாம். ஏழ்மை உடுத்திய உடலுடன் நடைபாதையில் ஒரு சிறு மேசை மீது பூக்கூடை வைத்து விற்றுக்கொண்டிருந்தார். சொற்பமாக சில ஞெகிழி பைகள் அவரது காலருகில். 'பூ என்ன விலைம்மா?' என்றேன். அவர் சொல்லத்தொடங்கும் முன்னரே அவருக்கு அருகிலிருந்து ஒரு குரல், 'அண்ண, இங்க வாங்குங்கண்ணே' என ஒரு இள வயது பெண். அவரும் அதே பூக்களை விற்றுக்கொண்டிருந்தார். மெலிதான புன்முறுவலுடன் 'அவங்ககிட்டதான் கேட்டேன்மா, அங்கேயே வாங்கிக்கிறேன்' என்றேன். வயதானவரின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. பூக்கள் வாங்கும்போதுதான் கவனித்தேன், அவர் கொண்டு வந்நிருந்த பூப்பந்து அப்படியே இருந்ததை (அன்று வியாபாரம் டல்). என் வீட்டிற்கென கொஞ்சம் வாங்கிக்கொண்டு, 'மிச்சத்தையும் வித்தாதான் வீட்டுக்கு போக முடியுமா?' என்றேன். ஆமாமென்றார். 'இவ்ளோ நேரமாச்சே, இனிமேல யாரும் வாங்க வருவாங்களா?' என்றேன். கவலையுடன், "இல்லை"யென தலையசைத்தார். 'மிச்சத்த நானே வாங்கிக்கிறேன், தாங்க' என்றதும் ஒரு நிமிடம் புரியாமல் விழத்தவர், மிக ...

கும்மோணம் டு ராம்நாட் ரைட் ரைட்! - 08

மாமாங்கம்! துறு துறு குழந்தைகளை ஷாப்பிங் அழைத்துச்சென்ற இடங்களில் சமாளிப்பது எப்படி என இந்த துறையில் விற்பன்னரான திருத்துறைப்பூண்டி லேட். சீனிவாசன் தாத்தாவிடம் கேட்டபோது அவர் சொன்னது: (அவருக்கு ஆறு குழந்தைகள்; அவரது அண்ணனுக்கு 12! அண்ணனை விடுத்து இவரிடம் கேட்டதன் காரணம் படிக்கையில் விளங்கும் :-) 'நீ டவுசர் போட ஆரம்பிச்ச டைம் அது. நியாபகம் இருக்கா? கும்மோணம் மாமாங்கத்தில என் கைய பிடிச்சிட்டு குதிச்சி குதிச்சி வருவ... கூட்டமான கூட்டம், எக்கச்சக்கமான கடைங்க... நீ என்ன பண்ணின, ஒரு கூலிங் க்ளாசு கடையில ப்ரேக் போட்டு நின்ன. சும்மாதான் நிக்கிறியோன்னு கொஞ்சம் அசந்தனா, அந்த நேரம் பாத்து ஒரு கண்ணாடிய பாத்து கைய நீட்டி, தாத்தா அது வேணும் தாத்தா... வாங்கித்தாங்க தாத்தா...ன்னு கேட்ட.  சின்னப்புள்ள, ஆசையா கேக்குற... சரின்னுட்டு கடைக்காரன பாத்து, என்ன வெலப்பான்னு கேட்டேன். அவன் என்னடான்னா இருபத்தஞ்சு ரூபாங்கறான் கடங்காரன் (இன்றைய மதிப்பில் இரண்டாயிரம்)! நான் ஒண்ணுமே சொல்லாம ஹா ஹா ஹா ன்னு சிரிச்சிட்டு, 'அங்கே இன்னொரு கடைல டெல்லி அப்பளம் விக்கிறாங்க! வாழை இலை சைசுக்கு! போலாம் வா'ன்னு கண்ணை ...

LOKAH CHAPTER 1: CHANDRA ஒரு Copy Cat!

லோகா - பகுதி 1 - சந்த்ரா - திரைப்பார்வை ஒரு வழியாக OTT யில் வெளியானபின்புதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்யாணி ப்ரியதர்ஷன் தூக்கி சுமந்திருக்கும் பளு பெரியது. முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். கதையின் களமும் அது உருவாக்கப்பட்ட விதமும் வாவ்! சொல்லவைக்கின்றன. சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவுட்டில் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையை மாற்றி, நம் மண்ணில் இன்றும் வாழும், பயமுறுத்தும் கதைகளையும் அவற்றின் கதை மாந்தர்களையும் அவர்களது கதைகளின் நீட்சியையும் நமது நவீன உலகத்துடன் பொருத்தி இப்படி ஒரு மெகா ஹிட்டு தர மலையாள சினிமாக்களால் மட்டுமே முடியும்! மின்னல் முரளி ஒரு முன்னோட்டமென்றால் இந்த லோகா உலகம் ஒரு தேரோட்டமாய்! மண்ணோடு பிணைந்த கதைகள், தொழில் நுட்ப உத்தி, திரையாக்கம், நடிப்பு, இசை என அனைத்திலுமே வேற லெவல் என்று மனதார வாழ்த்தி ரசித்து மகிழலாம் :-) ஆனால் எனக்கு ஒரே ஒரு குறை மட்டுமே: 2014  இல் வெளியான SPRING என்கிற திரைப்படத்தின் கருவை முழுதாக தழுவி லோகா பட சந்த்ராவை உருவாக்கி இருக்கிறோம் என Acknowledgement Card போட்டிருந்தால் கூட மகிழ்ந்திருப்பேன். அக்கட பூமியில் இப்படி காப்பியடித்து ...

தீர்ப்பு மணியையே திருடிட்டாய்ங்களே!

தீர்ப்பு மணியையே திருடிட்டாய்ங்களே கனம் கோர்ட்டார் அவர்களே! "ஏகப்பட்ட கடன், நிரந்தர வருவாய் தரும் வேலை கிடைக்கல, தொழில் செய்ய முதலீடு கிடைக்கல. கூட்டுற, கழுவுற, அள்ளுற வேலைக்குதான் நாங்க லாயக்குன்னு இந்த சமூகம் எங்கள எட்ட நிறுத்தி வேடிக்க பாக்குது. நாங்களும் உங்க மதந்தான், உம்பட சாமிதான் எம்பட சாமியும் என்று இறைஞ்சி ஓய்ந்துவிட்டோம்"  என சென்னை புறநகர்ப்பகுதி குரல். "ஏகப்பட்ட கடன், நிரந்தர வருவாய் இல்ல, தொழில் முதலீடு சொந்தக்காரனே தரமாட்டேன்றான், நெசவு தொழில விடவேண்டியதாய்டுச்சு அம்பா" என்று மதுரை சௌராஷ்ட்ர குரல். திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, குத்தாலம், கும்மோணம், பாண்டி, மேட்டுப்பாளையம், குன்னூர், தோவாளா, விழுப்புரம், கிணத்துக்கடவு... தமிழகம் மட்டுமல்ல, நம் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் ஒலிக்கும் இந்தக்குரல், ஒரு உடலின் சில உறுப்புகளை ஏனைய உறுப்புகளே ஒதுக்க முயல்வதால் எழும் அவலக்குரல். 'பல ஆயிரம் அல்லது சில லட்சம் தரோம், பழைய கடன அடைங்க. புதுசா தொழில் செய்யவும் பணம் தாரோம். வேற்றுமைப்படுத்த மாட்டவே மாட்டோம்' என யாரேனும் சொன்னால் இவர்கள் என்ன செய்வ...