முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்வைத்தேடி- 4

தோட்டத்தொழிலாளர்களும் கங்காணிகளும் அயர்ந்து உறங்கும் பின்னிரவில் அந்த ஜோடி, குழந்தைகளின் வாய்களில் துணி திணித்து கட்டி (பயந்து ஓசை எழுப்பினால் கதை முடிந்தது!), அவர்களுக்காக காத்திருந்த கள்ளத்தோணியை நோக்கி ஓசையின்றி நகர, இயற்கை உபாதையின் உந்துதலால் கண்விழித்த வயதான கங்காணியின் கண்ணில் பட, வெடித்தது துப்பாக்கி. அவர் காலில் குண்டு பாய, மயங்கி விழுந்தவர் மீண்டும் கண்விழித்தபோது கால் கட்டுடன் சிறையில் இருந்தாராம். குழந்தைகளுடன் தப்பியோடிய அவரது மனைவி பித்துப்பிடித்துப்போய் அவரைக்காணாமலே மரித்தாளாம். மரிப்பதற்கு முன் அவளது குழந்தைகளிடம் அவர்களின் தகப்பன் கருநீல வால் பொன்கழுத்து பறவையை கண்டதால்தான் இப்படி ஆயிற்று என்றும், அன்று முதல் அவர்கள் அந்தப்பறவையை பார்ப்பதையே தவிர்க்கவேண்டுமென்றும் சத்தியம் வாங்கிக்கொண்ட பின்பு இறந்துபோனாளாம்.  அவன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்; 'ஏன் இந்தப்பறவை தொடர்ச்சியாக தலைமுறை தலைமுறையாக, தொலைதூர பூமியில் வாழும் எங்கள் பார்வையில் பட்டுக்கொண்டேயிருக்கிறது? அது என்னதான் சொல்ல முயல்கிறது?' அடுத்த சில நாட்களில் இந்த நிலத்தில் வாழும் தன் இன மக்களில் மிக மிக வயதா...

வாழ்வைத்தேடி - 03

  கோழிக்கிறுக்கல் போல கையெழுத்தில் அவனது அப்பா அவரது மூதாதையர்களின் வாழ்வு குறித்து அவ்வப்பொழுது எழுதிய குறிப்புகள் அவை. ஏதோ ஒரு புரியாத மொழி பேசும் தேசத்துக்கு தோட்டத்தொழிலாளியாக அப்பாவின் முப்பாட்டன் வந்தது, வியர்வையும் ரத்தமும் சிந்தி பயிர் வளர்த்தது, சக மனுஷி ஒருத்தியை காதலித்தது, கடி மணம் செய்தது, சொந்த மண்ணுக்கு அவளுடன் தப்பியோட முயன்று குண்டடி பட்டு சிறையில் கிடந்தது, பின்பு வெளியே வந்து குடும்பம் வளர்த்ததில் தொடங்கி முப்பாட்டன் வாழ்வின் முதன்மையான சம்பவங்கள் வரை அவருக்கு தோன்றியபோதெல்லாம் ஒரு ஒழுங்கற்ற வரிசையில் எழுதி வைத்திருந்ததை வாசித்தான். அந்தக்குறிப்புகள் அவனை அலெக்ஸ் ஹேலியின் வேர்கள் என்கிற நெடுங்கதையோடு ஒப்பிட வைத்தது (Roots: The Saga of an American Family, by Alex Haley) குறிப்பேட்டை புரட்டிக்கொண்டே வந்தவன் ஒரு குறிப்பை வாசிக்கையில் ஒரு மெல்லிய அதிர்வை உணர்ந்தான். அது, அவனது முப்பாட்டன் கண்ட பொன் கழுத்து கருநீல வண்ண வால் பறவை பற்றியது! அவர் சீரமைத்துக்கொண்டிருந்த தோட்டத்தில் ஒரு பொன் அந்தி மாலைப்பொழுதில் அன்றைய பணி முடித்து தங்குமிடம் திரும்ப ஆயத்தமாகையில் எங்கிருந...

வாழ்வைத்தேடி - 02

முந்தைய வருடம்தான் விபத்தொன்றில் பெற்றோரை இழந்திருந்தான். அவர்களைத்தவிர அந்த தொலைதூர பூமியில் அவனுக்கு உறவென யாருமில்லை, நாய் / பூனை வளர்ப்பதில் அவனுக்கு ஆர்வமுமில்லை. நிலவின் வீச்சு மெல்ல மெல்ல கூடத்தொடங்கியது. நதிக்காற்றின் குளிரும் கூடியது. நேரம் கடந்தது பற்றிய உணர்வின்றி அப்பறவையையே பார்த்துக்கொண்டிருந்தான். பின்னிரவு நேரத்தின் ஏதோ ஒரு நொடியில் பறவையின் இசைக்குரல் தாலாட்டில் சற்று கண்ணயர்ந்தான்.  விழித்து நோக்குகையில் மேசையில் பறவையில்லை. அது அமர்ந்திருந்த இடத்தில் அது இட்டுச்சென்றிருந்த எச்சம் மட்டும் நிலவில் ஒளிர்ந்தது. அவன் ஒரு ஒளிப்படக்கலைஞன். தனது ஒளிப்பட கருவியின் வழியே அந்த எச்சத்தை படமாக பதிவு செய்துகொண்டான். பின்னர், யாருமற்ற தன் வீட்டை நோக்கி, யாருக்காக போவது என சிந்தித்தவண்ணம் பின்னிரவின் நிலவொளியில் நனைந்தபடி மெல்ல, மிக மெல்ல நடந்தான். வீடடைந்தான், தனது ஒலிப்பதிவுக்கருவியில் பதிவு செய்திருந்த பறவையின் கானத்தை ஒலிக்கவிட்டு... எப்பொழுது என அறியாமலே உறங்கிப்போனான். அதுபோன்றதொரு ஆழ்ந்த உறக்கம் அவனது பிள்ளைப்பருவத்திற்கு பிறகு அன்றுதான் வாய்த்தது. பறவையின் கானம் மனதெங்கு...

வாழ்வைத்தேடி - தொடர் - 01

கடினமான மலை முகட்டின் மீது ஏறி நின்றான். காலடியில் கோடிக்கணக்கான வருடங்களாக இயற்கை உருவாக்கியிருந்த பாறைகள் இருள் நிலவில் பளபளத்தன. பாறைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித காலடிச்சுவடுகள் கண்டான். 'நமக்கு முன்னே எத்தனை எத்தனை பேரை தாங்கியிருக்கும் இந்தப்பாறை!' என வியந்தான். மலை முகடு முடியும் சரிவில் இருந்து தொடங்கிய கானகத்தின் கனத்த இருள் நிலவு வெளிச்சத்தைக்கூட உள்நுழைய விடாத அளவு காட்டின் மீது கவிழ்ந்திருந்தது. ஓசையற்ற இரவை துளைப்பது போல அவ்வப்போது பறவைகளின் ஓசை, விலங்குகளின் ஓசை எழும்பி அடங்கியது. கடலில் அலை போல கானக இருளில் ஓசைகள் என எண்ணி ஓசையின்றி நகைத்தான். எதற்காக இங்கு வந்திருக்கிறான்? என்ன வேண்டும் அவனுக்கு? பல ஆயிரம் மைல்கள் தாண்டிய நிலப்பரப்பொன்றில் பல்லாண்டு அமைதியாக வாழ்ந்தவன், பெரிய விருப்பங்கள் எதுவுமில்லாது நாட்களை கழித்தவன், எப்படி இங்கு வந்தான்? அந்த நிலத்தில் ஒரு கடுமையான பனிப்பொழிவு தின நிலவு இரவில் ஆட்களற்ற ஒரு நதிக்கரையில் தன்னோடு தானே உணவு அருந்திக்கொண்டிருந்தவனுக்கு இதுபோன்ற ஒரு கானகப்பரப்பு இருப்பது பற்றியோ அதில் அவன் தேடவேண்டியவை பற்றியோ எவ்வித உணர்வு...