ஏழு கல்லுல எத்தனை அடி!! மன்னார்குடியில் எங்கள் லைன் வீட்டு வாசலில் தொடங்கும் தெரு, கணபதி விலாஸ் பள்ளி தாண்டியும் நீளும். அதில்தான் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களின் பட்டப்பகல்களிலும் செவன் ஸ்டோன்ஸ் ஆட்டம் பொறி பறக்கும். ஏழு கற்கள், அடிக்கல்லானது அளவில் சற்று பெரியது, அடுத்தடுத்த கற்கள் அளவில் கொஞ்சம் கொஞ்சமாய் சிறுத்துப்போய் ஏழாவது கல்லை உச்சியில் அடுக்கி நிமிர்ந்தால் குத்துமதிப்பாய் கோபுரம் போல தோன்றும். சாட் பூட் த்ரீ போட்டு இரண்டு அணி தலைவர்கள், எந்த அணி கற்களை பந்தால் அடித்து கலைக்கவேண்டும், எந்த அணி அவர்களை மீண்டும் கோபுரம் கட்ட விடாது துரத்தி துரத்தி பந்தால் அடிக்கவேண்டும் என தீர்மாணிக்கும். சாட் பூட் த்ரீயில் கெலித்த அணி பந்தை எறிந்து கல் கோபுரத்தை கலைத்துவிட்டு ஓட வேண்டும். மற்ற அணி அந்த பந்தை பொறுக்கி எடுத்து, கலைத்த அணி வீரர்கள் மீண்டும் கோபுரம் கட்ட முயல்வதை அடித்து தடுக்கவேண்டும், அதாவது அடுக்க முயல்பவரை பந்தால் தாக்கி தலைதெறிக்க ஓடவிடவேண்டும்! பந்தடியிலிருந்து தப்பித்து கோபுரமாய் ஏழு கல்லையும் அடுக்கி விட்டால் அது இமாலய சாதனை!! அடின்னா அடி அப்படி துரத்தி துரத்தி அட...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!