ஒரு மகளிர் மருத்துவமனை. பரபரப்பான நாளொன்றின் முன் பகல் வேளையில் காத்திருப்போர் இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன. எங்களது இருக்கைக்கு முந்தைய வரிசையில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். எங்களை விட பல வயது சிறியவர்கள். குழந்தைப்பேறு தொடர்பான ஆலோசனைக்காக வந்திருந்தனர் என அவர்களது கைகளில் இருந்த காகிதக்கோப்பு சொல்லாமல் சொல்லிற்று. எளிய தோற்றம் இருவருக்கும். அன்று மிகுந்த கூட்டம் என்பதால் கத்திருக்கும் நேரம் நீண்டுகொண்டிருந்தது. அவர்கள் இருவரும் உரையாடல் எதுவுமின்றி அழைப்புக்காக காத்திருந்தனர். சிறிது நேரம் கடந்ததும் அது நிகழ்ந்தது. அந்தப்பெண் மெல்ல அவனது தோளில் தலை சாய்த்துக்கொண்டாள். அவனது தோள் கோடு அப்படியே நிமிர்ந்திருந்தது. நான் அவர்களை கடந்து சென்று அந்த காத்திருப்பு அறையின் ஓரமாய் நின்றிருந்த ஒரு அலமாரியில் அடுக்கியிருந்த புத்தகங்களை துழாவத்தொடங்கினேன். The Last Lecture, The Monk and ... எனத்தொடங்கும் ராபின் ஷர்மாவின் நூல், ரேஷ்மி பன்சலின் சில நூல்கள், நடிகர் சிவக்குமார் எழுதிய நூல் ஒன்று என கதம்பமாய் குவிந்திருந்த நூல்களின் இடையில் 'Appa' என்கிற தலைப்பிட்ட ஆங்கில நூல் ஒன்று...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!