உங்க்குலு ஏன் அவ்வாறு 'லியோபோல்ட்!'
'லியோபோல்ட்!'
'லியோபோல்ட்!' என முணுமுணுத்தவண்ணம் கதறி அழுதான்?
யார் அந்த லியோபோல்ட்?
தெரிந்துகொள்ள ஒரு வரலாற்றுப்பயணம் செய்வோம் வாருங்கள்.
இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் அமைந்துள்ள பெல்ஜியத்தின் பரபரப்பான பிரஸ்ஸல்ஸ் நகரில், "மொனுமெண்டல் அர்கேட் டு சின்குவாண்டினேர்" (Monumental Arcade du Cinquantenaire) என்ற நினைவுச் சின்னம் நிற்கிறது. இது மனிதர்களின் துண்டிக்கப்பட்ட கைகளைக் கொண்டு கட்டப்பட்டதாகும். ஒரு விதத்தில் பெல்ஜியம் நாடு இன்றைய பெல்ஜியம் நாடாக வளர்ந்ததற்கும் அந்த துண்டிக்கப்பட்ட கைகளே மூலதனம்!
அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆர்வம் தூண்டுகிறதா? விளக்குகிறேன்...
சுதந்திரப் போராட்ட வீரர்கள், தனி நாடு, காலனியாதிக்கம், ஜனநாயகம், பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் என பெல்ஜியம் நாடு அத்தனையையும் பார்த்திருக்கிறது. இதற்கு அமைதியான சாட்சியாகவும், ஒரு வகையில் கட்டாய நிதியாதாரமாகவும் இருந்தது காங்கோ குடியரசு (DRC).
டச்சு நெதர்லாந்திடமிருந்து பெல்ஜியம் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, காங்கோ குடியரசு இயற்கையின் வளம் நிறைந்த ஒரு சக்தியாகத் திகழ்ந்தது.
காங்கோ நதி, உலகின் இரண்டாவது நீண்ட நதி, பல மில்லியன் கிலோமீட்டர்கள் நீளும் இந்த நதியின் முக்கிய நிலப்பரப்பு காங்கோ நதிப்படுகையும், காங்கோ நாடும். இந்த பதிவில் இருக்கும் படத்தை சற்று உற்று நோக்கினால் காங்கோ நதி எப்படி இந்த நிலப் பரப்பை பிண்ணிப்பிணைத்திருத்திருக்கிறது என்பதை உணரலாம்...
இந்த நதியால் செறிவூட்டப்பட்ட காங்கோ நாட்டு காடுகள், உலகின் மிகப்பெரிய காடுகளான அமேசான் காடுகளுக்கு பின்னர் இரண்டாமிடத்தில் இருக்கும் காடுகள், நம் உலகின் இரண்டாவது நுரையீரல் என அழைக்கப்படும் காடுகள். இந்த படுகையிலும் காடுகளிலும் வாழும் எண்ணற்ற அரிய உயிரினங்கள் இந்த நிலப்பரப்பை ஒரு பெரும்பொக்கிஷமாக மாற்றியிருந்தன. நம் உலகின் இன்றியமையாத பல்லுயிர் பெருக்க மையங்களுள் (Bio diversity Hotspot) இதுவும் ஒன்று. குறிப்பாக காங்கோ படுகை, நம் உலகு அன்றாடம் வெளித்தள்ளும் கரியமில வாயுவை பூமிக்கு அடியில் சேமித்து வைப்பதில் மிகப்பெரிய பங்காற்றி நம் பூமி இன்றும் நாம் வாழத்தகுந்த இடமாக இருப்பதற்கு ஒரு தலையாய காரணமாக இருக்கிறது.
1830-இல் பெல்ஜியம் ஒரு சுதந்திர நாடாக மாறியபோது, வலிமைமிக்க காங்கோ நதியைச் சுற்றியுள்ள அந்த தொலைதூர ஆப்பிரிக்க நிலப்பரப்பு மக்களுக்கு, தங்களுக்கு வரப்போகும் ஒரு மிகப்பெரிய ஆபத்தைப்பற்றிய விஷயம் எதுவும் தெரிந்திருக்கவில்லை. தங்கள் எதிர்காலம் இரண்டாம் லியோபோல்ட் (Leopold II) என்ற பெல்ஜிய மன்னரின் கைகளில் பகடைக்காயாக மாறப்போகிறது என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
யார் இந்த லியோபோல்ட்? அவருக்கு அறிமுகமில்லாத ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பின் தலைவிதியை எப்படி அவரால் மாற்றி எழுத முடிந்தது? உங்க்குலு ஏன் அவரது பெயரை மறுபடீ மறுபடி உச்சரித்து அப்படி அழுதான்?
உங்க்குலுவின் தாயகம் காங்கோ!
தொடரும்.

ஐரோப்பியர்களின் கட்டற்ற கொடுமைகளை அனுபவித்து சிதைந்த ஆப்பிரிக்க நாடுகளின் கண்ணீர் சரித்திரத்தில் காங்கோவும் ஒன்று என அறிவேன். 🙏. அடுத்த அத்தியாயம் படிக்க காத்திருக்கிறேன்
பதிலளிநீக்கு