முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கும்மோணம் - Game ஸ்டாப் - 2

'இதனால் நம்ம ஏரியா அரை டவுசர்கள் சங்கம் நம் வீதி வாழ் அரை டவுசர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதென்றால்... ஜீன் மாதம் தொடங்கி மறு வருடம் மே மாத இறுதி வரை (பள்ளி விடுமுறை நீங்கலாக) தினந்தோறும் மாலையில் கீழ்க்கண்ட ஏதாவதொரு விளையாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென சங்கம் முடிவெடுத்துள்ளது!'


பளிங்கி விளையாட்டு,

பம்பரம்,

புளியாங்கொட்டை,

கிட்டிப்புள்,

ஐஸ் பாய் (கிறுக்கு புடிச்ச வெளிநாட்டுக்காரனுங்கோ நம்ப கேம ஐ ஸ்பைன்றாணுங்கோ!!) - அதாகப்பட்டது, கும்மோணத்து 'கல்லா மண்ணா?' விளையாட்டு.


அப்பால

செவன் ஸ்டோன்ஸ்,

ஹவர் சைக்கிள்!


இதில் முதலிரண்டு விளையாட்டுகளை ஏற்கனவே பாத்தாச்சி. எனவே கிட்டிப்புள்ளிலிருந்து தொடங்குவோம்.


ஒண்ணரை அடி நீள குச்சி ஒண்ணு, அரை அடி நீள குச்சி ஒண்ணு. இந்த அரையடி நீள குச்சியோட எதிரெதிர் முனைகளை ஜோராய் கூராய் சீவி வைத்துக்கொள்ளவும்.


ஷாட் பூட் த்ரீ போட்டு யார் முதலில் ஆடுவது யார் அடுத்தது என வரிசை நிர்ணயம் செய்யவும்.


தரையில் சின்னதாய் ஒரு நேர்கோட்டு பள்ளம் செய்து அதில் குறுக்காக முக்காலடி குச்சியை (புள்) வைக்கவும்.


நீளமான மற்றொரு குச்சியை (கிட்டி) அதனருகில் உள் பக்கத்தில் தொட்டு நிறுத்தி, ஒரு கையால் கிட்டியின் உச்சியை இறுகப்பற்றி, மறு கையால் கிட்டியின் அடிப்பகுதியை பலமாய் சாய்வாய் தட்டவும்.


உயரப்பறக்கும் சிறு குச்சியை மற்ற இரண்டாவது ஆட்டக்காரர், ஜான்ட்டி ரோட்ஸ் போல பாய்ந்து பிடிக்கவும். பிடித்தால் முதல் ஆட்டக்காரர் அவுட்!


பிடிக்கமுடியாவிட்டால், ஆட்டக்காரர் அந்த கிட்டியை தரைப்பள்ளத்தின் குறுக்காக வைக்கவும்.


இரண்டாமவர், புள் விழுந்த இடத்தை அடையாளமிட்டு, அந்த இடத்தில் நின்றவண்ணம் புள்ளை தூக்கி தரையில் கிடக்கும் கிட்டியை குறி பார்த்து அடிக்கவும்.


அடித்தால், ஆட்டக்காரர் அவுட். இல்லையென்றால்...! ஐயகோ!


புள் விழுந்த, அடையாளமிட்ட இடத்தில் புள்ளை இப்போது கிட்டியாளர் அதன் ஒரு முனையை மீண்டும் தட்டி, காற்றில் உயரும் புள்ளை பலம் கொண்டமட்டும் ஆட்டத்தின் தொடக்கப்புள்ளியின் எதிர்திசையில் பறக்குமாறு தாக்கவும். அடிபட்ட புள் பறந்து பறந்து, வெகுதூரம் சென்று தரையிறங்கும். 


இப்போது கிட்டியாளர் புள்ளின் ஒரு முனையை மறுபடி  தட்டி, காற்றில் உயரும் புள்ளை பலம் கொண்டமட்டும் ஆட்டத்தின் தொடக்கப்புள்ளியின் எதிர்திசையில் பறக்குமாறு தாக்கவும். அடிபட்ட புள் மீண்டும் பறந்து பறந்து, வெகுதூரம் சென்று தரையிறங்கும். 


இந்த தாக்குதல், கிட்டியாளர் புள்ளுடன் கனெக்ட் ஆனால் தொடரும். அவர் புள்ளை அடிக்கத்தவறினால் அவரது ஆட்டம் அந்த இடத்தில் முடியும்.  ஆட்டம் முடிந்தால், ஐயகோ ஐயகோ! 


இரண்டாவது ஆட்டக்கார் அங்கிருந்து தொடக்கப்புள்ளி வரை ஒற்றைக்காலில் நொண்டியடித்துக்கொண்டே புள்ளை கொணர்ந்து சேர்க்கவேண்டும். இடையில் சாலையில் நடக்கும் மனிதர்கள், விரையும் சைக்கிள்கள், மாட்டு வண்டிகள் எதிலும் மோதிக்கொள்ளாமல், இரண்டாவது காலை தரையில் ஊன்றாமல் அவர் புள்ளை கொண்டுவந்து சேர்த்தால் அவரது 'தண்டனை' முடியும். தப்பித்தடுமாறி இரண்டாவது காலை எங்காவது ஊன்றிவிட்டால்... Oh My God!! கிட்டியாளர் அந்தப்புள்ளியில் இருந்து மறுபடி புள்ளை அடித்து விரட்டுவார். எங்காவது ஒரு இடத்தில்  அவர் 'வீசி, அடிக்காமல் விட்டால்', அந்த இடத்திலிருந்து தொடக்கப்புள்ளி வரை மறுபடி நொண்டியடித்தல் தொடரும்!!!! 


வெற்றிகரமாக தொடக்கப்புள்ளியை அடைந்தால், சாதித்த பெருமையில் முதல் கிட்டியாளர் ஓய்வு பெறுவார்.

நொண்டியடித்து முடித்த இரண்டாம் ஆட்டக்காரர், இப்போது புதிய கிட்டியாளர்! அவர், தண்டனையால் உள்ளே கிடந்து மறுகும் கோபத்தை, மூன்றாவது ஆட்டக்காரருக்கு கடத்த

ஆயத்தமவார்.

ஆட்டம் இறுதி ஆட்டக்காரர் நொண்டியடித்து முடிக்கும் வரை தொடரும். இயற்கை சீற்றத்தினாலோ அல்லது வீட்டார் சீற்றத்தாலோ ஆட்டம் பாதியில் தடைபட்டால்... தடைபட்ட இடத்தை வீதியில் ஆடையாளமிட்டு, மறுநாளில் அந்த இடத்தில் இருந்து ஆட்டம் தொடரும். 'நாளையும் நொண்டியடிக்கணுமே' என்கிற கவலையில் ஒரு அரை டிக்கட்டு நைசாக இரவு உணவுக்குப்பின் வீட்டிலிருந்து நழுவி, அடையாள இடத்தை மாற்றி (தண்டனை தூரத்தை குறைப்பதற்காக) எழுத துடிக்கும், ஆனால் வேறு அரை டவிசர்களின் கண்களில் அந்தச்செயல் சிக்கிக்கொண்டால்... கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு எல்லா ஆட்டங்களில் இருந்தும் குற்றவாளி விலக்கிவைக்கப்படுவார்!!!


இருக்கிறதே மொத்தம் நலு பசங்கதான்னாலும் ரூல்சு ரூல்சுதான் ராசா!!!


கிட்டிப்புள்ளோட ரூல்ஸ் தெரியாத மூத்த பொடிப்பசங்களுக்கெல்லாம் அந்த விளையாட்டு ஒரு ஜிஜீபீன்னு தோணும். ரூல்ஸ் தெரிஞ்சவனுங்க... ஓடிடுவானுங்க :-) 


'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித விளையாட்டா என்ன?' அப்டீன்னு எழுத நினைத்தேன். ஆனால் அந்த சொற்றோடர், செவன் ஸ்டோன்சுக்கு இன்னும் பொருந்தும் எனத்தோன்றியதால் தவிர்த்துவிட்டேன் :-) 


விளையாட்டு தொடரும்.


பேரன்புடன்,

பாபுஜி

PC: diptiart in Tumblr

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...