முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாலாம் தமிழ்!


ஒரு கிராமத்தான் பையன் தமிழ் படிக்க பட்டணம் போனானாம்.

பல வருச படிப்பாம்.

முடிச்சதும் திரும்ப, ஊரே கூடி வரவேத்துதாம்.

மேள தாளமாம், மாலை மேல மாலையாம்.

களைச்சிப்போன பையன் அம்மையையும் அப்பனையும் பாத்து 'அன்னாய், தாதாய், அயற்சி மிக்கது. அடிசில் புக்கி அயனம் கொணர்க' என்றானாம். அதுதான் அவன் அன்னக்கி முதலும் கடைசியுமா பேசினதாம்!. 

'எலேய், புள்ளய பட்டணத்துக்கு படிக்க அனுப்பிச்ச லச்சணமா இது?! அவனுக்கு பட்டணத்து பேய் புடிச்சிருக்குலே, புடிச்சி மரத்துல கட்டுங்கலே!' என்று கட்டி ஒதச்சு பிரிச்சி மேய்ஞ்சி தோலுரிக்க, ரெண்டு நாள் பசியில நொந்து நூலாயி, பாக்க வந்த அம்மை, அப்பன்கிட்ட தீனமா முனகுனானாம், 'அம்மை, வவுறு பசிக்கி, சோறு குடு'ன்னு. இதத்தான அவன் ரெண்டு நாளு முன்னாடியுஞ்சொன்னான்!!?

இயல் இசை நாடகமென்று முத்தமிழோடு முடிந்திருந்தால் இன்றும் யாம் அத்தமிழிலிலேயே அடிசில் வடிப்போம்.

முத்தமிழின் வர்ண பேதங்களுக்குள் சிக்கி இன்றும் நமை அன்னாய் தாதாய் என வதைபடாமல் காத்தது, காப்பது நான்காம் தமிழ், 'பழகு தமிழ்'. கண்ணதாசன் பார்த்திபன் மகனை விளித்த தமிழ் (google 'பழகும் தமிழே பார்த்திபன் மகனே' for more).

வாங்க, பழகலாம் என உற்றமும் சுற்றமும் பழகிய, பழகும், இயல்பான, நடைமுறைத்தமிழே இந்த நான்காம் தமிழ்.

'எப்படி இருக்கீக மக்கா?',
'ஏனுங்க சௌக்கியங்களா?'
'நல்லா கீரியா மா!'
'பங்காளீ! எப்புடிறா இருக்க!'

இதுபோல பழகும் மொழியை எழுதும் மொழியாகவும் வடிக்கும் திறமை வாய்ந்தது, யாமறிந்த மொழிகளிலே தமிழ் மட்டுமே! 

எழுத்தைக்கொண்டே எந்த ஊர் / க்காரன் / க்காரி என படிப்பவரை இனம்கானச்செய்யும் வசதி (GI tag) வேறெந்த மொழியிலும் உண்டா!
You can't bring the slang of a region when you write in any other language. I wld love to be proved wrong!

முத்தமிழுக்கு இடமளித்த சங்கப்பலகை பழகு தமிழை ஏன் ஏற்கவில்லை?
நாலாம் வேதமென அதர்வணமே ஏற்றுக்கொள்ளப்பட்டபிறகும்?!
(அதர்வண வேதம் வாழ்வியல் வேதம், மற்ற மூன்றும் இறை நோக்கிய வேதங்கள். சுருங்கச்சொல்லின் அதர்வண வேத அடிப்படை நம் பழகுதமிழ் போன்ற 'பழகு சமஸ்க்ருதம்'. அதனால்தான் மூன்றாய் மட்டுமே இருந்த வேதம் நெடுங்காலம் கழித்தே நான்கானதாம், by popular demand, grudgingly though!)

எத்தனையோ தலைமுறையை விட்டு ஏன் 'நாலாம் தலைமுறை' நாவிதனை சிற்றப்பனாக்க தமிழ் உதவிற்று?

ஊறிப்போன வர்ணபேதங்கள் காரணமாக இருக்கலாம். நான்காம் வர்ணத்திலிருந்து வந்த வேதம் அதர்வணமாயிற்று அங்கே, பழகு தமிழோ இப்போதுதான் இயல், நாடகக்கட்டமைப்புகளை உடைத்து வெளியேறியிருக்கிறது இங்கு. இசை...well..பாடறியேன் படிப்பறியேன் என்று 'எட்ட'ப்பார்த்தது இன்று டி. எம். கிருஷ்ணா என்ற ஒற்றை மனிதனின் முயற்சியால் நான்காம் வர்ணத்தை மெருகூட்டத்தொடங்கியிருக்கிறது, '
கர்னாடக இசை சேரியிலா?' என்ற எதிர்ப்பையும் மீறி. ஒன்று போதுமா இந்த நாட்டுக்கு!

மெல்லத்தமிழ் இனி சாகும் என்றது முத்தமிழுக்கு மட்டுமே பொருந்தும். நான்காம் தமிழ் சாகாது ப்ரோ! நான்காம் தலைமுறையா நாம இருப்போம் ப்ரோ!!

துணுக்கு:

ஆசியக்கண்டத்தில் நான்கு என்ற எண் ஆகவே ஆகாதாம்! சீன ஜப்பானிய பட எழுத்துகளில் நான்கு என்ற வார்த்தை மரணத்தை குறிக்குமாம்!  ஆகவே கட்டிடங்களில் நான்காவது மாடியே கிடையாதாம்!

நாமதான் 'நெருப்புன்னு சொன்னா வாய் சுட்டுடுமா?!'ன்னு கேக்கிறவங்களாச்சே!

கிருத்துவர்களுக்கு பதின்மூன்று (13) ஆகாதாம். Triskaidecaphobia!. 'கடைசி விருந்'தில் ஏசுவை 13 ஆவது சீடன் யூதாசு காட்டிக்கொடுத்ததனால்.

 'பாஸ், பதிமூணு...ஒண்ணும் மூணும்...கூட்டிப்பாத்தா நாலு வருது பாஸ்!'
:-)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்