முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆனந்தம் - Language no bar!


எத்தனையோ காலேஜ் மூவீஸ் வந்திருக்கு. இதில் என்ன special ஆ இருக்கப்போவுது என்ற நினைப்புடன்தான் படம் பார்க்கத்தொடங்கினேன். 

வகுப்புத்தோழர்கள் இத்தனை ரகளையாய் இன்டஸ்ட்ரியல் விசிட் செய்வதையே முழு நீள திரைப்படமாய்! வியக்கவைக்கிறார் வினீத் சீனிவாசன். மலையாளத்தில் இவர் ஒரு தனி இடம். Pulse of the youth ஐ finger tips  ல் வச்சிருக்கார் இவர்!
நட்பு, காதல், ஊடல், ஆடல், பாடல் என ஹம்ப்பியில் ஆரம்பித்து கோவாவில் முடியும் ஜாலி பயணம் இது. ஊசிப்பையன், டாட்டு பொண்ணு, சீரியசான டூர் ப்ளானர், ராக் ஸ்டார் அண்டு லவர் கேர்ள், லைவ் வயர் மாதிரி ஹாபி போட்டோகிராபர் இன்னும் பலர், இறங்கி அடிக்கிறார்கள்.

சமீப மலையாள படங்கள்போல் இதிலும் lecturer காதல், மலர் டீச்சரிடம் வழியும் ஜாவா lecturer போலின்றி இவர் வேறு ரகம். ஆனாலும் ரசிக்கவைக்கிறார் Sunset பார்த்து!
டிவோர்ஸ் போன்ற கடினமான ஒன்றையும் கதை அழகாய் தாண்டிச்செல்கிறது.
Sun Down இல் முடிகிறது படம். இது சேட்டன்ட தேசத்து சினிமாவுக்கு Sun Rise காலம்.

நல்ல சினிமா, தெரியாத மொழியிலும் ரசிக்கவைக்கிறது. Amazing energy level!

Note 1: Adolescent innocence - இப்படத்தில் வெளிர்க்கொணர்ந்திருப்பது போல தமிழ்ப்படங்களில்...ஹீம்!

Note 2: அருண் என்கிற வருண் - ப்ரித்விராஜ் போல, ராஜ்குமார் ராவ் போல ஒரு அற்புத நடிகனாக வருவார். Arun, get ready for Stardom Man!

Note 3: Natural Acting ல அக்கட பூமிச்சேட்டன்களையும் சேச்சிகளையும் அடிச்சிக்க ஆளே இல்லை. குப்பி, தாடிக்காரன், அந்த காதல் ஜோடி...மெர்சல் சேட்டன்ஸ் and சேச்சிஸ்! (எல்லோரும் புதுமுகங்கள் என்று எண்ணுகிறேன்).

உங்களோட அடுத்த ஹாலிடே ட்ரிப் ஹம்ப்பிக்கா இல்லை கோவாவுக்கா? !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்