முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சே, காந்தி!

சங்கிலித்தொடராய் வாழ்ந்து முடியும் நம் வாழ்வை தடம் புரட்டும் விதமாய் ஒற்றை மனிதர்கள் அவ்வப்போது தோன்றுவதுண்டு. 

சென்ற நூற்றாண்டின் இரு பெரும் ஆளுமைகள் - உலக அரசியலில்! இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைத்தது புவியை உருட்டும் நெம்புகோல்? 


அடிமைத்தனத்திற்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராய் இருவரும் உயர்த்தியது போர்க்கொடிதான், கத்தியோடு ரத்தமோடு ஒன்றும் கத்தியின்றி ரத்தமின்றி ஒன்றும்.

வழி என்னவானாலும் போர் போர்தானே.

தென்னமெரிக்காவில் ஒரு நாட்டில் பிறந்து இன்னொரு நாட்டின் ஆயுதப்புரட்சியில் தலைவனுக்கு உறுதுணையாய் நின்று, வென்று, ஆட்சிப்பொறுப்பு பெற்று அமைச்சரான பின் அவன் ஓய்வெடுக்கவில்லை...'இந்த மக்கள் மட்டும் சுதந்திரமாக இருந்தால் போதுமா? அடுத்த நாட்டின் மக்களும் என் மக்கள்தானே'! நானும் கூடடையும் பறவையல்லவே. பறக்கவேண்டிய தூரமும் வானமும் நிறைய நிறைய' என நலிந்தோரை நாடி, எதிர்ப்புக்குழு திரட்டி ஆயுதமேந்திப்போராடியவன்,  ஒரு மருத்துவன் - மானுடம் காக்க அவன் தேர்வு செய்த வழி அது. 

இந்தியாவில் பிறந்து, தென்னாப்பிரிக்காவில் நலிந்தோர் உரிமைக்குப்போராடி வென்ற வழக்குரைஞன், 'என் வேரிலேறும் கரையானை என்ன செய்வது?' என்று தாய்மண் திரும்பியவன், 'அன்பையும், ஒத்துழையாமையையும்கூட வலிமையான ஆயுதமாக்கலாம்' என உலகம் கண்டிராத மாபெரும் யுத்தத்தை நம் மக்கள் மனதில் விதைத்து வளர்த்து அவர்களை விடுவித்தான் 300 ஆண்டுகால அடிமைத்தளையிலிருந்து.

இவர்களது அணுகுமுறை சரியா தவறா என்ற விவாதம் நமக்கு வேண்டாம்.

மானுடத்தின் தடத்தை மாற்றியமைத்ததில் இவர்களின் பங்களிப்பு மறக்கக்கூடிய ஒன்றா?

தடம் வேறானாலும் இவர்கள் இருவரையும் இயக்கியது ஒன்றுதானே!

இருவரையும் என்ன செய்தோம்?

துப்பாக்கி கொண்டு துளைத்தோம்.

புதைத்தோம். 

சிலைகள் வைத்தோம். 

(அவர் வாழ்வின் செய்தியை) மறந்தோம்.

இன்று உலகெங்கும் 'புரட்சி' என்ற, (உச்சரிக்கும்) எவருக்கும் விளங்காத சொல்லுக்கு மட்டுமே, சொல்லளவில் மட்டுமே, ஏகபோக உரிமையாய் ஒருவன், அதற்கு மட்டுமே பயன்படுகிறான். 

இன்னொருவனோ இப்போது சுத்தம் என்ற சொல்லுக்கு மட்டுமே இங்கு ஏகபோக உரிமையாளனாய், இவனும் ஒரு உருவக அளவில்மட்டுமே பயனிலிருக்கிறான்.

தனியொரு நாட்டைப்பிணைத்த தளைகள்  நெடும் வணிகச்சங்கிலிகளாய் உருமாறி உலகம் முழுவதையும் பிணைத்து...இதோ, ஆயிற்று பல வருடம். 'சே, என்ன வாழ்க்கையிது?' என சிந்திக்கக்கூட நேரமின்றி நிகழ்கால சே குவேராக்களும் காந்திகளும் நுகர்வோர் கலாசாரத்தின் பெருவேக ஓட்டத்தில் மிதிபட்டு நசுங்கிக்கொண்டிருக்கிறார்கள். பிழைக்குமா மானுடம்?

We as humankind have drastically reduced their significance into just romantic notions, nothing more, nothing less.

What is Atlantis to us anyway?!




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்