முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொத்தல்களால் நெய்த சேலை!


ஆடை என்பது மானம் காப்பது. அளவு, அழகு, எளிமை, வலிமை என்பவை எல்லாம் இதற்கு அப்புறம்தான். 

இழைத்து இழைத்து நெய்த ஆடையில் ஒரு ஓட்டையோ கிழிசலோ இருந்தால், 'சும்மாக்குடுத்தாக்கூட வேணாம்' என்பதாகவே உலகப்பொது மனநிலை.

நம்மைப்போலவே நம் நாட்டிற்கும் ஒரு ஆடை உண்டு. அது இன, மொழி, வரலாறு, புவியியல் எல்லைகளைத்தாண்டிய ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது. 

நாடு தாண்டியும் விரிந்து உலகம் முழுவதற்குமான ஒரே ஒரு ஆடை, வேற்றுமைகள் அனைத்தையும் அணைத்து மானம் காக்கும் அந்த ஆடை, உலகம் முழுவதும் Moral Fabric என்ற ஒற்றைப்பெயராலே அறியப்படுகிறது. 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று என்றோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒருவன் மகிழ்ந்து கூவியபோது அதில் பொத்தல்களோ. கிழிசல்களோ இல்லை. இடைப்பட்ட காலத்தில் அவரவர் சக்திக்கு அவரவர் இட்ட பொத்தல்கள்தான் எத்தனை?

ஒரே ஒரு நாளில், ஒரே ஒரு நிலப்பரப்பில் இன்று மட்டுமே புதிதாய் எத்தனை பொத்தல்கள்?

'ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை'

'மருத்துவக்கல்லாரி மாணவி தொங்கினார்'

'நீரில் மூழ்கிய நண்பனை காப்பாற்றாமல் மரண நிமிடங்களை வீடியோ எடுத்து வலைபரப்பிய பதின்பருவ, 'நீரில் மூழ்கிய' (சாராயம்), நட்புகள்'

'ஏழு வயது சிறுமியை...எழுபது வயது நபர் கைது'

'சாலை விபத்தில் இறந்தது தோரணவாயிலால் அல்ல, அமைச்சர் விளக்கம்'

'வனப்பகுதியிலிருந்து 300 கானகப்பழங்குடியினர் தடியடி நடத்தி அப்புறப்படுத்தப்பட்டனர்'

'தில்லியில் மழையினால் மாசு குறைந்து இப்போது அதன் சாலைகள் கண்களுக்குத்தெரிகின்றன'

'கோதாவரியை காவிரிக்கு கொண்டுவருவோம்'

'நூடுல்சில் சாம்பல், விகிதத்திற்கு அதிகமாக இருந்ததால் அபராதம் 50 கோடி'
...
அறத்தையும் அன்பையும் மட்டுமே ஊடும் பாவுமாய் கொண்டு (Warp and Weft) நேரத்தியாக நம் ஆன்மத்தறியில் நெய்த ஆடை, இன்று கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது கந்தலாய்...

உடுக்கை கிழித்தவர் மனங்களோ இன்னும் வேகமாய் காரியத்தில் கண்ணாய்!

14 கோடி கரங்கள் இருந்தென்ன பயன்? இடுக்கண் களைய முனையும் கரங்கள்தான் எத்தனை?

பொத்தல்களால் மட்டுமே நாங்கள் நெய்த இந்த ஆடைக்கு நிகர் ஏது என இறுமாந்து நிர்வாணமாய் நாம். This old cloth, supposed to be re"new"ed constantly by all of us, is not just for Emperors; it is for commons too :-(

போதாது...இந்த கிழிந்த ஆடைக்குள் ஒடுங்கும் ஒவ்வொரு மனதிலும் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே பெரும் மாற்றம் சாத்தியம். 

ஊடும் பாவும் இப்பொழுதுகூட கிட்டியவண்ணமே உள்ளன, தேடும் கரங்களுக்கு.

தேடுவோம் வாருங்கள்!




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்