முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

...தவமாவது அன்பு


செய்க தவம்!

இரண்டு வயது சிறுமி.

தினம் காலை ஏழு மணி - ஒரு நாற்காலியில், கையில் கரடி பொம்மையும் பள்ளி பையும் வைத்துக்கொண்டு.

தனியே.

பெற்றோர் இருவரும் வேலைக்கு ஏழு மணிக்கு சென்றபின், ஆட்டோவுக்காக பதினைந்து நிமிடங்கள் தனியே, gated community உள்ளே.

ஆட்டோக்காரர் பதறியடித்து ஏழேகாலுக்கு வந்து சிறுமியை பள்ளிக்கு அழைத்துச்செல்வார் - ஒருநாள் கூட அந்த gated community யில் அந்நேரத்தில் யாருமே நடமாடுவதில்லையாம்.

பனிரெண்டு மணிக்கு பள்ளி முடியும், traffic சிக்கலில் லேட்டானால் அவரே பள்ளிக்கு போன் செய்து உள்ளேயே காக்கவைக்கச்சொல்லி, சென்று அழைத்துச்செல்வார் இன்னொரு பள்ளிக்கு.

நாலு மணிக்கு அந்தப்பள்ளியும் மூடப்படும்.

மீண்டும் அவரே அழைத்துச்சென்று எட்டரை மணி வரையில் டியூஷனில் விடுவதாய் ஏற்பாடு.

மனம் கேட்காமல் அவர் பல நாட்கள் அச்சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று மனைவியின் மேற்பார்வையில் தன் குழந்தையுடன் விளையாடவிடுவார் (பெற்றோர் அனுமதி உண்டு).

இரவு ஒன்பது மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைப்பார்.

மறுதினம் காலை ஏழு மணிக்கு மீண்டும் அந்தக்குழந்தை கரடி பொம்மையுடன் தனியே...

மனம் நொந்து, பெற்றவர்களிடம், 'பணம் சம்பாதிக்க செலவிடும் தேரத்தை பாசத்திற்கும் ஒதுக்கலாமே' என்றால், 'இந்த வயதில்தான் சம்பாதிக்கலாம். ஒற்றைச்சம்பளம் வாழ்க்கைக்குதவாது. எல்லாம் இவளுக்காகத்தானே' என்று பதில்.

தாங்க இயலாது, 'குழந்தையின் அன்பை இப்பவே டெஸ்ட் பண்ணிப்பாக்கலாம் வாங்க!' என்று அழைக்க, 'எங்க பொண்ணு அவ, பாக்கலாம்!' என பெற்றோர்...

இரு தரப்பும் சற்று எட்ட நின்று குழந்தையின் பேரை சொல்லி கூப்பிட, குழந்தை ஓடி வந்து 'மாமா!' என்று ஆட்டோக்கார ரின் காலை கட்டிக்கொண்டது...

ஒரு வருடம் கடந்து இன்றும்   தனியேதான் காலையில் ஆட்டோ மாமாவை எதிர்பார்த்துக்காத்திருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்