முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலைவனற்ற சமுதாயம், ஒப்பிலாதொரு புதுமை!

மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கினத்திலும் உடல்/மனவலிமை சார்ந்த சமுதாயக்கட்டமைப்புகள், தலைமைகள் இருந்தே தீரும். சிறுநீ்ர் கொண்டு எல்லை வகுக்கும் மிருகங்களுக்கும், படை கொண்டு எல்லை வகுக்கும் மனிதருக்கும் இதுவே. பறவைகள் சமுதாயத்தில் குழு மனப்பான்மை தாண்டி தனி ஆளுமைகள் இல்லை என்றே சொல்லலாம்.

எந்த வித தலைமையும் இன்றி, என் கடன் பணிசெய்து நிற்பதே என்று காலத்திற்கும் இயற்கையோடு இணைந்து ஏனைய அனைத்தையும் வளர்க்கும் பேருயிர் மரம் மட்டுமே. 

மாமரத்தோப்பில் தலைவனேது? பனைமரக்காட்டில் தலைவியேது?! எல்லைகள்தான் ஏது?

ஒரு மரத்தின் அடியில் எது வளர்ந்தாலும் அதற்கு சங்கடமில்லை. இவைதான் வேண்டும், இவை வேண்டாம் என பாகுபாடு கிடையாது. தன்னை இறுக்கும் கொடியினங்களைக்கூட மரம் அறுத்ததாய் சுவடுகளில்லை. இறுக்கத்திற்கும் எல்லை காட்டி அவற்றினூடே வளர்வது மட்டுமே அவற்றிற்கு தெரியும். வண்டு துளைத்த மரம்கூட வாழுமட்டும் வண்டுக்கு விருந்தோம்பல் செய்தபின்னேதான் மாளும்! 

கடும் வெயிலில் நீரின்றி வாடினாலும் கண்ணீர் விடும் ஒற்றை மரமாவது கண்டதுண்டா யாரேனும்?!

கலீல் கிப்ரான் எழுதிய Prophet இலிருந்து திருமணம் குறித்த கவிதையில் வரும் ஒரு சொற்றொடர் இது:

'And the oak tree and the cypress grow not in each other's shadow.'

அவர் சொல்ல வந்தது தம்பதியானாலும் அவரவர் வளர்ச்சிக்கான இடைவெளி / space அவசியம் என்று. இல்லையேல் ஒன்றின் நிழல் இன்னொன்றில்  பட்டு இரண்டுமே வளராது, தழைக்காது என்று. 

இது சைப்ரஸ் மரத்திற்கும் ஓக் மரத்திற்கும் தெரியாது. பூமிச்சுற்றின் சூரியக்குளியல் கிழக்கிலிருந்து மேற்கே. இவ்விரு மரமும் அருகருகில் இருந்தாலும் சில மணிகள் கிடைக்கும் பெரு வெளிச்சத்தூறல்கள் போதும் இவை இரண்டும் வளரவும் தழைக்கவும்.

கிப்ரான் மிகப்பெரிய கவிஞன் மட்டுமே, மரம் வளர்த்தவனல்ல! 

தனக்கான உணவை தானே உற்பத்தி செய்து, தன்னை அண்டியவரின் பசியையும் ஆற்றும் (ஞானப்பசியையும்தான்!) பெருங்குணத்தை மரங்களிடம் கற்பவர் அனைவரும் மரம் ஆக முயலலாம்.

ஏனையோர் என்ன ஆனால் நமக்கென்ன!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்