முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மந்திரமாவது நீரு!



நம் உலகின் ஆதி மழைத்துளியில் முளைத்த தாவரம், பெருகி தாவரங்களானதும், மரம், செடி, கொடி என்று பல்கிப்பெருகியதும், பூச்சிகளை உண்ணும் ஆற்றல் பெற்றதும் (Non vegetarian plants) என்றோ எவ்வாறோ நடந்த விந்தையாகட்டும்... நம் எண்ணக்குவியல் இங்கு விந்தை மீதல்ல. அந்த முதல் துளி மீது! 

அந்த நீர்த்துளி கண்ட, காணும், காணப்போகும் காட்சிகளை ஒரு நொடியேனும் நம்மால் உணரமுடிந்தால் அதுவே பேரின்பம்...

அன்றும் இன்றும் என்றும் அசுவத்தாமன் போல மரணமின்றி அலையும் ஆற்றல் அதற்கு எங்கிருந்து என்ற கேள்விக்கும் போகவேண்டாம். அசுவத்தாமன் உதிரத்தையும் அவன் பாவங்களையும்கூட அது கழுவியிருக்கலாம்... 

என்று விழுந்தாலும் எங்கு விழுந்தாலும் விழுந்த இடத்தில் உயிர் முளைக்கவைக்கும் பேராற்றலை புரிந்து கொள்ள நாம் என்ன செய்தோம்? அருவியென்றோம், ஓடையென்றோம், ஆறென்றோம், கடலென்றோம், இடையில் ஏரியென்றும், ஏந்தலென்றும், ஊருணியென்றும், குளமென்றும் தேக்கியது போக. 

அப்படி தேக்கியவரெல்லாம் காற்றில் கலந்து பலகாலமானபின்பு, நம்மைச்செதுக்கிய நீரென்ற பேருயிரை மறந்து, இன்று அதனை நம் கைக்கருவியாக பாவிக்கிறோம்...ஆழிசூழ் உலகில், ஆழி நிரப்பிய குடுவைகள்தானே நாம் என்பதையே மறந்து...

எங்கோ விழுந்து உயிர் நனைத்து எங்கோ எழுந்து எங்கோ விரைந்து மீண்டும் எங்கோ விழுந்து என்ற இதன் இடையறாத சுழற்சியின் பின்னர்தானே ஏரோடும், ஏர் பின்னே நம் உலகு ஓடும்?

இந்த துளி நீருக்கும் நினைவு உண்டு, அதை எப்படியாவது அறியவேண்டும் என அறிவியலாளர்கள் ஆய்வுக்கூடங்களில் முட்டி மோத, நீராலான இவ்வுலகில் பிறப்பு முதல் இறப்பு வரை, சாம்பலாய் கரையும்வரை, அனைத்துயிரையும் சூழும் இந்தத்துளி அறிந்திருக்கலாம் நம் உலகு தோன்றிய கதையை...

மழையின் மொழி நம் அறிவினால் அறிய இயலா. உணர்வினால் மட்டுமே.

எந்தையையும், தாயையும், அவர் முந்தையையும் உயிர்ப்பித்த, கரை சேர்த்த இந்தத்துளி நம் மீது விழுவது போல் அட்சதை வேறேதும் உலகிலுண்டா?

உள்ளங்கையில் நீரேந்தி மனமுருக வேண்டி உண்டால் அந்த நீரே மந்திரமாகி அற்புத நலன்களை அளிக்கும் ரசவாதம் பயின்றவரின் வழித்தோன்றல்கள் இன்று என்ன செய்கிறோம்?

பாற்கடலை அமுதம் தேடிக்கடைகையில் முதலில் ஆலகால நஞ்சு கிட்டியதாம். அமுதம் பின்னர்தான் கிட்டியதாம். அமுதினும் அமுதான இந்தத்துளி நீரையும் ஆலகால நஞ்சாக்கும் ரசவாத வித்தை பயிலவா நம் நாகரிக நெடும்பயணம்???

ஆமையோடை ஐம்புலனடக்கும் உதாரணமாக சொல்வோமல்லவா. சிறு தொந்தரவென்றாலும் நான்கு கால்களையும், தலையையும் ஓட்டுக்குள் அடக்கும் ஆமை, மழை கண்டால் என்ன செய்யும் தெரியுமா?! இணைத்திருக்கும் படத்தை காணுங்கள்!

வலைகடல் (ocean of internet!) திறந்தே இருக்கிறது் இறங்கித்தேடுங்கள்!!

தேடினாலும், முடித்தாலும், முடிக்காவிட்டாலும், ஏன், தேடாவிட்டாலும்கூட  இனி என்றெல்லாம் ஆதி துளி மண்ணிறங்குகிறதோ அன்றெல்லாம் இருகரம் கூப்பி அட்சதையை ஏற்றுக்கொள்வோமே!


பேரன்புடன்,
பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்