முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நழுவும் மொழி - ஒன்று - செம்மீன்!


என்ன மனுஷன்யா இந்த 'தகழி'!

அறுபது வருடங்களுக்கு முன் எங்கோ சுழன்றடித்த கடலுக்குள் என்னை இப்ப சட்டுனு இழுத்துட்டுப்போய்ட்டானே!

தகழி சிவசங்கரன்பிள்ளை. 44 வயதி்ல், அதுவும் இருபதே நாட்களில் எப்படி செய்யமுடிந்தது இவனால் இப்படியொரு பெருங்காரியம்!!!!

மரக்கானும் மரக்காத்தியும் உப்புக்காற்றும் கண்ணீர் உப்பும், அரையனும், அரையத்தியும், காசும், காதலும், சமுதாயக்கட்டமைப்பின் விசித்திரங்களுமாய் அவர் வரைந்த கேரளக்கடற்கரை கிராமத்து காவியம் இன்னும் ஈரமாய் உப்பு சொட்ட என் மனதில்...

காயலாம், காயாமலும் போகலாம். 

 


அலைகடலில் தோணியில் அவர் வீசிய தூண்டிலில் விருப்பமுடன் சிக்கி், கதையை அவர் நகர்த்திய பாதையில் ஆனந்தமான பயணம்!

நாலாம் மதத்துக்காரனின் சிறுவனும் வலையனின் சிறுமியும் விளையாடினால் தவறு சொல்லாத அந்தக்கடல்புறத்தில், வளர்ந்தபின்னான அவர்களின் இடையேயான காதல் நிகழ்வுகளை அவரவர் உணர்வின் வழி /ஆதாயத்தின்வழி இறுதிவரை நகர்த்திச்செல்கிறார் தேர்ந்ந மரக்கானைப்போல்! அதுவும் அந்த இறுதிப்பயணம்! Timeless!!!

பெண்களின் நுட்பமான உணர்வுகளை, அக்கால ஆண்களின் மனநிலையை, அவை காதல்காரணமாய் மோதும்போதெல்லாம் உண்டாகும் அதிர்வலையை என்னமாய் எழுதியிருக்கிறார்!

காதல் உணர்வுகள் கடற்காற்றையும் கரை மணலையும் நிறைக்கும் அந்த ஒன்பதாம் அத்தியாயம் படித்து முடித்ததும் 'இதோடு நிறுத்திவிடலாமே ... அவர்கள் அந்தக்கடற்கரையில் பேசிக்கோண்டேயிருக்கட்டுமே காலமுள்ளவரையில்' என மேற்கொண்டு வாசிக்காமலிருந்தேன் சில நாட்கள்...

சாகாவரம் பெற்ற எழுத்து என்பது நம்மை தன்னிலை மறக்கவைத்து, கால தேச வர்த்தமானங்கள் தாண்டி தன்னுள் இழுத்துக்கொள்ளும், எத்தனை முறை படித்தாலும்! Unforgiven என்ற திரைப்படத்தின் இறுதி 20 நிமிடங்கள் போல.



மீன் வாடையே ஆகாதென்று மூக்கைப்பொத்தி ஓடும் சாகாகாரிகளையும் (vegetarians) கடல்சார்ந்த வாழ்வியலில் விருப்பமுடன் குளிக்கவைத்து, அற்புதக்காதலில் ஊறவைத்த "செம்மீனை" ருசித்து உண்ணவைத்த இந்த மனுஷனுக்கு தேடிவந்த விருதுகள் ஏராளம். பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டு, வெளிநாடுகளிலும் திரைப்படமாக்கப்பட்டு...மனுஷனுக்கு இதுக்குமேல என்னய்யா வேணும்?! என்ற மலைப்பை ஒதுக்கிவைத்து, 'இதுக்கு மேலயும் என்னால முடியும்' என்று அவர் பின்னாளில் திரித்த 'கயிறு' பற்றி...இன்னொரு நாளில் பகிர்கிறேன்!

முன்கதை!: 

நல்ல புத்தகங்கள் தேடி அந்த சிறிய புத்தகக்கடையில் நானும் என் தங்கையும் நுழைந்தோம். செம்மீனின்  தமிழாக்கப்படைப்பு ஒற்றைப்பிரதி கண்ணில்பட (நேர்த்தியான தமிழாக்கம்...செய்தவரும் பெரும் எழுத்தாளரே) பாய்ந்து எடுத்தோம். 'எனக்கு', 'எனக்கு' என்று சிறுவர்போல பில்லிங் கவுண்டரின் முன் நாங்கள் போராடுவதைக்கண்ட சேல்ஸ் கேர்ள், இளைஞி, சற்று யோசித்தபின்,'என்னோட பர்சனல் காப்பி இருக்கு. பரவால்லன்னா எடுத்துக்கோங்க' என்று (அவளுடன் வேலைபார்த்த இளைஞன் அவசரமாய் தடுத்ததையும் மீறி) தந்தது என்னோடு தங்கிற்று. இன்னொன்று விமானமேறி தங்கையூர் சென்றது. 

அப்போது எனக்குத்தெரியாது அந்த பர்சனல் காப்பியில் வழிந்த அவளது காதல் கதை...ஏராளமான காதல் சார்ந்த வரிகளை அடிக்கோடு, ப்ராக்கெட், ஹைலைட் இன்னபிற எல்லாம் செய்திருந்தாள். அவள் கருத்தம்மாவாகவும் அந்த இளைஞன் பரீக்குட்டியாகவும் என் கற்பனையில் வழிய, புத்தகங்களில் 'கை வைப்பவரையே' பிடிக்காத எனக்கு, நன்றி மட்டுமே சொல்லமுடிந்தது மனதில் அவர்களிடம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்