முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு கதை சொல்லட்டுமா?!

"I am gonna bury you", said the Tree man. " I am sure you shall resurrect and live on", he went on. 'Yes... I know' gently murmured the Jackfruit Seed. "So long!" 'So long!' Thus begins a new story.

தேன் சிந்துதே!

தேனின் மருத்துவ குணங்களைப்போற்றிப்பாடி அவ்வப்போது சில பல ஸ்பூன் உள்ளே தள்ளும் நமக்கான கேள்வி, இந்தப்பதிவின் முடிவில். மருந்தாய் மட்டுமே பயன்படுத்திய பொழுதெல்லாம் சுத்தமாய் கிடைத்த தேன், இன்று பேராசைப்பெருவணிகத்தில் சிக்கியதேன்? மலைத்தேன், கொம்புத்தேன்... எல்லாம் பூக்கள் மலரும் காலத்தில் (இளவேனில் பருவம், வசந்தகாலம்) மட்டுமே சாத்தியம்.  (பருவம் தப்பிப்பயிர் செய்து அவற்றின் சுத்தத்தை நாம் கெடுத்தது பெருஞ்சோகம்.) இன்று கிடைக்கும் நெல்லித்தேன், நாவல் தேன், முருங்கை தேன், இன்னபிறவெல்லாம் அடிமை வாழ்வு வாழும் தேனீக்களின் உழைப்பு. ஒரு பெரிரிரிய்ய்ய ட்ரக்கில் ஆயிரக்கணக்கான தேன் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு பூக்கள் இருக்கும் நிலங்களை (இந்தியா முழுவதும்) தேடி அடைந்து, பெட்டிகளை இறக்கிவிட்டு, குறிப்பிட்ட நாட்கள் கடந்ததும் (தேனடைகள் நிரம்பியதும்) அனைத்துப்பெட்டிகளையும் வண்டியிலேற்றி சென்று, தேனை சக்கையாக பிழிந்துவிட்டு மீண்டும் தேனடை சட்டங்களை பெட்டியில் சொருகி, அடுத்த நிலத்திற்கு பயணம்.  'ஐயோ! நேற்றுவரை நான் சேமித்த உணவு களவாடப்பட்டதே!' என கதறத்தெரியாத அந்த சிற்றுயிர

ஒளிவதற்கு இடமில்லை

ஒளிவதற்கு இடமில்லை. நாஞ்சில் பி.டி. சாமி என்பவர் விகடனில் முன்னொருநாள் எழுதிய நெடுந்தொடர் இது. 'ஒளிவதற்கு இடமில்லை'. இரும்புத்திரை என்ற சமீபத்திய சினிமா சொல்வதும் இதுதான். ஆனால் அது வெளிச்சமிட்டுக்காட்டியது ஆன்லைன் / சைபர் உலகை மட்டுமே. படம் முடிந்ததும் ஒரு 8 வயது சிறுமி தன் அக்காவிடம் பயத்தோடு சொன்னது இது: 'அக்கா, உடனே அம்மா போன்ல இருக்கிற என் கேம்ஸ் எல்லாத்தையும் அன்இன்ஸ்டால் பண்ணிடு. இன்ஸ்டாக்ராம்ல உன் ப்ரொஃபைல் பிக்சரையும் டெலீட் பண்ணிடு. உடனே!' சைபர் உலகில் ஊடாடும் ஒரு எட்டு வயது சிறுமிக்கு புரிந்ததுகூட நிஜ உலகில் வாழும் வயதுக்கு வந்த நமக்கு புரியவில்லையே! எது நமக்கு கிடைத்ததோ இது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை நாம் விதைக்கிறோமோ அதையே நாம் அறுவடை செய்வோம்.... "இன்னாபா, இன்னா மேட்டர்?" என்கிறீர்களா? இதுதான் மேட்டர்: இயற்கையின் 'நிழல்' கூட நம் மேல் படவிடாமல் ஒளிந்து திரிந்து, நமக்கு வேண்டியதை எடுத்து வேண்டாததை புறம் தள்ளும் நம்மைப்போலவே இயற்கையும் இடையறாது செய்தவண்ணமே இருக்கிறது. ஒரே வித்தியாசம், அதன் செயல் விருப்பு /

ஆசைமுகம் மறந்துபோச்சே!

என் ஆசை முகம் மறந்துபோச்சே... காலேஜில் முதல் நாள் முடிந்து ஹாஸ்டல் வரும் வழியில் சுற்றி வளைக்கப்பட்டோம். சில நிமிடங்களில் சக முதலாண்டு மாணவன் ஒருவன் இமாஜினரி கோழியை, சீனியர் கை காட்டுமிடமெல்லாம் தாவிப்பிடிக்க முயன்றான். இன்னொருவன் ஸ்லோ மோஷனில் கால்பந்தாட்டம்... வயிறு பிசைந்தது. அடுத்து என் முறை. 'வாத்யாரே எந்த ஊரு?' 'பல ஊரில் படிச்சன் சார்' (சார்னு கூப்பிடாமல் அப்பத்தான் ஒருத்தன் அப்பு வாங்கி விம்மிக்கிட்டிருந்தான்!) 'நக்கலா??' 'இல்ல சார். நிஜமா'. 'சரி... புட்ச்ச நடிகை யார்றா? ஒழுங்கா பதில் சொல்லு. அம்பிகாவா, ராதாவா, மாதவியா... ரொமான்சு மோனோ ஆக்டிங்கு உனக்கு'. படபடப்பு கூடியது. 'இல்ல சார்... சா...சா...' 'என்னடா முழுங்குற. முழுசா சொல்லு!' 'சா...சாவித்திரி சார்'. மயான அமைதி. கோழி, கால்பந்து எல்லாம் freeze ஆன அந்த நிமிடம் இன்னும் மனக்கண்ணில். கையறு நிலை... உணர்ந்தவர் உணர்வர்! ('அப்புறம் என்ன ஆச்சு?' என்பவர்கள் பிறிதொரு நாளில் படிப்பீர். இந்தப்பதிவு சாவித்திரிக்க

சிறிய நூல்... பெரிய்ய்ய்ய புரட்சி!

இது கமெண்ட் / லைக்குகளுக்காக பகிர்ந்த பதிவு அல்ல. முழுதாய் படிப்பவருக்கு மட்டுமே சொர்கத்தில் இடம் :-) ஒரு நூல் என்ன செய்யும்? _----+++++-----------+++++++---- அச்சில் மை கோர்த்து எண்ணங்களை நெசவு செய்பவர் எதை வேண்டுமானாலும் நெய்து தரலாம், புத்தகமாய்.  புத்தகங்களும் ஆடைகள் போலவே; அழகாக, எடுப்பாக, வெளுப்பாக, அளவாக, கச்சிதமாக என தேடித்தேடி நாம் வாங்குபவை நம்மோடு ஒட்டி உறவாடி களிப்பில் ஆழ்த்தி, பழையதாகி, சாயம் போய், நைந்துபோய்... இதற்குமேல் பயன்படுத்த முடியாது என நம்மை ஏங்கவைப்பவை நல்ல ஆடைகள். ஒன்று கவனித்தீர்களா, ஆடைகளின் அடிப்படைப்பயனான 'மானம் காத்தல்' என்பதை நானும் குறிப்பிடவில்லை, நீங்களும் கவனிக்கவில்லை! ஏன் தெரியமா? ஆடை என்பது மானம் காப்பது என்ற அடிப்படை உணர்வு, புரிதல், sub conscious thing. இதை நிறைவேற்றாத எந்த ஆடையையும் நாம் விரும்புவதில்லை. புத்தகங்களும் அவ்வாறே! எனக்குப்பிடித்த விற்பன்னர்கள் எழுதிய அனைத்துப்புத்தகங்களையும்விட (பல துறைகளிலும்) என்னை வாசித்த புத்தகங்கள் மிகச்சில. அவற்றுள் தலையாய ஒன்று, வெறும் அச்சிட்ட எண்ணங்களின் கோர்வையல்

என் விழித்திரையில் - சுடலை மாடன்!

என் விழித்திரையில் - சுடலைமாடன்! 'சே, பஸ்ச மிஸ் பண்ணியாச்சே! இப்ப என்ன பண்றது?' காலேஜ்க்கு அடுத்த பஸ் இரண்டு மணி நேரம் கழித்து என அறிந்ததும் அருகில் இருந்த தியேட்டரில் டிக்கட் வாங்கி ('படம் போட்டு இருவது நிமிசம் ஆச்சி' என்றார் டி. கிழிப்பவர்) நுழைந்தேன். ஐந்து நிமிடத்தில் முன்கதை பிடிபட்டுவிட்டது. ஒரு சிற்றூரில் கோயில் பூசாரியின் மகனும் அதே ஊரில் ஒரு பெரிய மனிதரின் வைப்பாக இருக்கும் பெண்ணின் மகளும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். இரு குடும்பமும் கடுமையாக எதிர்க்க காதல் பற்றிப்பரவி அவள் உண்டாகிறாள். ஏராளமான அவமானங்களோடு ஊர் எல்லை தாண்டி ஒதுக்கி விடப்படுகிறாள்.  பூசாரி தந்தை ஊர்த்திருவிழாவில் சுடலைமாடசாமியாக அந்த வருடம் வரை இரா வேட்டைக்கு வழக்கமாக செல்பவர், கூடிய சபை நடுவில் கல்லூரிப்படிப்பு படிக்கும் மகனுக்கு அந்த பொறுப்பை திணிக்கிறார்.  தந்தை ப்ளஸ் ஊர்க்கட்டுப்பாடுகளை மீற இயலாத மகன் முதன் முதலாய் சுடலைமாடனாய் இரவில் வேட்டைக்கு கிளம்புகிறார். வேட்டைக்கு செல்கையில் எதிரில் எவர் வந்தாலும் கொன்று விடுவார் என ஐதீகம். எனவே ஊர் அடங்கிக்கிடக்கிறது.  ஊர்

சுழியில படகுபோல என் மனசு...

இந்த மண்ணின் எழுத்து, இந்த மண்ணின் இசை, இந்த மண்ணின் உணர்வு... மூன்றும் சேர்ந்து தந்த இந்த முத்துப்பாடல்... One for the Ages, #onemoresong ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா (ராசாவே) பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பெரு அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு (ராசாவே) காதுல நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது சுழியில படகு போல என் மனசு சுத்துது சுத்துது பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ளே பேச்சு ----------------------------------------------------- அமைதியான இரவில் எங்கோ தொலைவில் ஏதோ ஒரு வீட்டு மொட்டை

10*40 - காடு - சகல வசதிகளுடன் :-)

ஒரு காடை உருவாக்க என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு சிரமப்படவேண்டும்? Question: How difficult is it to create a forest? சில மரக்கன்றுகள், நிறைய ஆர்வம், தேவையான அளவு உப்பு போல நம்பிக்கை, தளராத முயற்சி. அவ்வளவே காடு வளர்க்கப்போதுமானது! நீங்களே சொல்லுங்களேன் இது எவ்வளவு கடினமானதென்று?! Answer: Take a bunch of saplings, add lot of enthusiasm, sprinkle some hope, persevere, persevere... and voila! You got a forest! Easy doozy :-) இரு ஜோடிக்கரங்கள், ஆறு வருட சோம்பேறித்தனமான (ஆனால் தளராத!) முயற்சி, கண்முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கும் அற்புதத்தை விழி கொள்ளாமல் உள்வாங்க முயலும் குழந்தை ஆர்வம், இதோ காடு ஆச்சு! Just two pair of hands, Six years of leisurely efforts and ever growing wonderment went into making this urban patch of green (10 feet * 40 feet only!) that houses innumerable lives now :-) நகரத்தில் வீட்டருகே 10*40 இல் சகல வசதிகளுடன் காடு ரெடி! எந்த விளம்பரமும் இல்லாமலேயே  House Full :-) காக்கை, குருவி, செம்போத்து, கௌதாரி, காடை, தேன் சிட்டு, தவிட்டுக்குருவி, மனங்கொத

ஈரம் விழுந்தாலே

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது! வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையிலே உள்ளது என்ன என்ன? வண்ணங்கள் என்ன என்ன? கதையாய் சிறுகதையாய் ஆவதில்லையே அன்புதான்! ஈர நிலத்தில் நம் கால் பதிந்த இடமெலாம் ஏதாவதொன்று முளைக்கட்டும்... தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலே...

பச்சை வயல் மனது - காயாது.

பச்சை வயல் மனது. பதின்பருவத்தில் கண்ணன்.R, பள்ளித்தோழன், அடிக்கடி சம்பந்தமே இல்லாமல் என்னிடம் 'வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும்' என்று போர் முழக்கம் போல் சொல்லி, கடந்து செல்வான். பொறுக்க முடியாமல் ஒரு நாள் நிறுத்தி கேட்டதும் 'பாலகுமாரன்' என்றான். ராமநாதபுரம் அப்போது சிறிய டவுன். ஒரே ஒரு லைப்ரரி, தி.ஜா, கல்கி, தமிழ்வாணன், அகிலன், சாண்டில்யன், லா.ச.ரா, சுஜாதா என கதம்பமாய் இருக்கும். 'வாழ்க்கையே போர்க்களம்' என மந்திரம் போல் சொல்லிப்பார்த்துக்கொண்டு உள் நுழைந்து தேடிய என் கண்ணில் பட்ட முதல் புத்தகம் 'மெர்க்குரிப்பூக்கள்'. அன்று தொடங்கிய வாசிப்பை பல வருடங்களுக்கு நிறுத்தமுடியவில்லை, அவரை பாக்கெட் நாவல்கள் ஆக்கிரமிக்கும் வரை... சுஜாதா, திஜா, லாசரா தவிர மற்ற எல்லோரையும் ஓரம் கட்டவைத்த நடை, நேர்மை, திமிர்... மெ.பூக்கள். பூவிலிருந்து குதிரைக்கு தாவினேன். குதிரைகள் குறி விறைத்து நிற்கும் காட்சி யோகத்தின் உச்சம் என படித்தபின் குதிரையை காணத்தேடி அலைந்த நாட்கள், 'இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... இருபது நிலவுகள் நகமெங்கும

என் இறகின் சுவடே காடு!

தன் சிறு வயிற்றில் பெருங்காடு சுமந்து, விசை கூட்டி விரைந்து பெரும்பரப்பு கடந்து, கடந்த இடமெல்லாம் கடக்கும்பொழுதெல்லாம் இயன்றவரை விதைபரப்பி காடு வளர்க்கும் இந்த சிற்றுயிர்.  காடென்பதென்ன? என்ற அறிதல் நமக்கு வேண்டுமானால் தேவைப்படலாம்; அதற்கு அல்ல.. உண்ட பழம் வயிற்றில் செரித்தால்மட்டும் போதாதென பழ விதை வீறுகொண்டு முளைக்க 'வேண்டி' வயிற்றில் அமிலம் சுரந்து... முளைத்தாலென்ன முளைக்காவிட்டாலென்ன என்ற கேள்விகளுக்கு அப்பால் பறந்து விதைகள் தூவி...  மீண்டும் காட்டின் விதை தேடி தொடரும் இதன் பயணத்தில் கூடென்பது குஞ்சுகளுக்கு மட்டுமே. இன்றுவரை பழங்களை கூடுகளில் தனக்காகவோ குஞ்சுகளுக்ககவோ சேமித்து வைக்கும் பறவையை யாரேனும் கண்டதுண்டா? இப்பறவைகளை மரங்கள் நேசிப்பது இயற்கைதானே! மரங்களில் வாலில் தொங்கி தாவிப்பழகி இறங்கி நிலம் முழுதும் பல்கிப்பெருகிய நம் கூட்டமும் விதைத்துக்கொண்டுதானே இருக்கிறது நஞ்சு தோய்ந்த எண்ணங்களையும் சொற்களையும்? இந்நஞ்சில் கருகிய கனவுகள் எத்தனை? உணர்வுகள், நினைவகள் எத்தனை?  பசிபிக் பெருங்கடலில் ஒரு சிறு தீவில் நம் இனம், மரத்தை வீழ்த்த பயன்படுத்துவ

என் விழித்திரையில் : The Hurricane - வெளுப்பு கருப்பு வெறுப்பு!

ரூபன் 'Hurricane' கார்ட்டர். கறுப்பு அமெரிக்கன். குத்துச்சண்டை வீரன்.  1960களில் ஒரு அமெரிக்க 'உலக' சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளை போட்டியாளனை தோற்கடித்ததை 'விழுங்க' முடியாத வெள்ளை நடுவர் குழு அவன் தோற்றதாய் அறிவிக்கிறது. சிறுவயது முதலே அவனை கருப்பனென்ற ஒரே காரணத்திற்காக வெறுக்கும் உள்ளூர் காவல் அதிகாரி ஒருவர். வெள்ளையர். அவ்வூரில் நடந்த ஒரு வெள்ளையனின் கொலையில், சாலையில் நடந்துகொண்டிருக்கும் ரூபனையும் அவனது கருப்புத்தோழனையும் வழி நிறுத்தி 'இரு கருப்பர்களை தேடுகிறோம், பார்த்தாயா?' என வினவுகிறார். 'Shall any two blacks do?' (எந்த இரண்டு கருப்பராயிருந்தாலும் போதுமா?') என ஆத்திரத்தோடு ரூபன் கேட்க, கைதாகிறான், வெளியில் வர இயலாத தண்டனை பெற்று. செய்யாத குற்றத்துக்காக சிறையில் நுழைந்த நொடி முதல் அவன் சந்திக்கும் இனப்பாகுபாடு அவமானங்களை எப்படி எதிர்கொள்கிறான், எப்படி எதிர்க்கிறான், தனிமைப்படுத்தப்பட்டு உடலைத்திருப்பக்கூட இடமில்லாத வெளிச்சமேயற்ற அறையில் எவ்வாறு நாட்களை நகர்த்துகிறான், சிறை வாழ்வு எப்படி என்பதை எல்லாம் புத்தக

தீர்த்தக்கரையினிலே!

என்றோ அவன் கட்டமைத்த மாய நதி... சுழித்தோடிக்கொண்டே இருக்கிறது காலங்களின் ஊடாக...

என்னுள்ளே கடல், உன்னுள்ளே கடல்!

உலகின் ஆதி தொட்டில் கடல். ஓயாது தாலாட்டும் இந்த தொட்டிலில் வளர்ந்து கரையேறிய எண்ணற்ற உயிரினங்களின் நீட்சியில் ஒரு கிளையின் இலை நான். தொப்புள் கொடி உறவு என் ஒவ்வொரு அணுவிலும் (செல்லிலும்) அலையென ததும்பி, என் எண்ணக்கரை மீறுகையிலெல்லாம் கடல் உப்புத்துளியாய் இறங்கும் இரு விழி வழியே.  கடலை விட்டு நான் ஒருபோதும் விலகியதில்லை. கடலும் என்னை விட்டு ஒரு போதும் விலகியதில்லை.  எதிர்காற்று முகத்தில் மோத நான் பயணம் செய்த நில, ஆகாயப்பரப்புகள் அனைத்தையும் கடல் நனைத்தவண்ணமே இருந்தது என் விழி வழியே, விழி வழிய... ஆனால் அந்த தொட்டிலின் தாலாட்டில் கால் நனைத்து எனை மறந்து நான் நிற்கும் நொடிகளில் மட்டும் என் விழி்வழி கடல் (தரை) இறங்கியதே இல்லை! அந்த முதுபெருங்கிழவியின் கருணை, உப்புக்காற்று வழியே என் விழிகளுள் இறங்கும் நொடிகளில் அணுக்கள் அனைத்தும் ஆடும் நடனம்... அதுவே சிவம்!

36 இன்ஞ்ச் வேஷ்டி கிடைக்குமா?

'வேஷ்டி நாலு குடுங்க. ஹிப் சைஸ் 36' என்ற குரல் கேட்டு 'ங்கொக்கா மக்கா வேஷ்டிக்கு ஹிப் சைசா! யாரையா நீ?' என நிமிர்ந்த கடைக்காரரின் முன் நின்றிருந்தவர், கோட் சூட் பூட் அணிந்த இந்தியர். மேதமை ததும்பும் முகம். 'யார் இவர்? கோட்டு போட்டு வந்து வேஷ்டி ...ஏன்?' என்ற கேள்வி இந்தப்பதிவிற்குள் உங்களையும் இட்டுச்செல்லும்... சபர்மதி ஆசிரமத்தில் மரத்தடி நிழலில் காந்தியிடம் அவரை பார்க்க இந்த கோட்டு சூட்டு நபர் வந்து காத்திருக்கும் தகவல் போகிறது.  அழைக்கிறார். கோட்டு சூட்டு நபர் மரத்தடியில் அமர உடை தடுத்ததால் அவஸ்தையாக நிற்க, கவனித்த காந்தி தன் அருகிலிருந்த ஒருவரை நாற்காலி எடுத்துவரப்பணிக்கிறார். நாற்காலி எடுத்து வந்தவரை பார்த்து கோட்டு சூட்டு நபர் வியர்த்துப்போகிறார்...' இவரா?! எவ்வ்ளோ பெரிய மனுசன், எனக்கு நாற்காலி சுமக்கிறாரே' என்று. கால் மடக்கி தரையில் அமர்ந்து அரையாடை உடுத்த காந்தியுடன் உரையாடுகிறார், இந்த சூட்டு அணிந்த பொருளாதார மேதை. 'கிராமங்கள், பருத்தி நூற்பு' இரண்டையும் இணைத்து சுயசார்புள்ளவையாக கிராமங்களை மாற்ற முடியுமா என்பதே

காட்டு மரங்கள் ஈதவை அனைத்தும்...

-----------------------------------------------------------------+ "உங்கள் தெருவில் கூட நீங்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை நிச்சயமாக வரும்" -----------------------------------------------------------------+ (மத, சக மனித) சகிப்புத்தன்மை குறைந்து வரும் இன்றைய சூழலில் நான் அடிக்கடி படிக்க/கேட்க/பார்க்க நேரிடும் வாதம் இது. உண்மையிலே இவ்வாறு நிகழுமா?! நம்மில் எத்தனை பேர் நம் வீட்டுக்குள்ளேயே சுதந்திரமாக இருக்கிறோம்? மதம் என்பது சமுதாயத்திற்கு மிகப்பெரிய போதைப்பொருள். இந்து மதம் தோன்றுவதற்கு முன்பும் ஏதாவதொன்று இருந்திருக்கலாம். இந்து மதத்துள்ளும் சைவ வைஷ்ணவ one upmanship உண்டு, இன்றளவும். இது எல்லா மதங்களுக்குள்ளும் உள்ள அடிப்படை சிக்கல். When Capitalism as a religion takes root and spreads its branches anywhere in the world, all erstwhile religions neatly fold under it... எது என்னவோ ஆகிட்டு போகட்டும். புள்ள குட்டிங்களுக்கு நேயம் சொல்லிக்கொடுப்போம். மனித நேயம் அல்ல!, just நேயம் மட்டும்!! மனித நேயம் என்பதும் ஒரு மதமே, ஒரு போதையே! மிகப்பெரிய ப

ராம் மொகம்மத் சிங் ஆசாத் ஹை நாம் மேரா

பெயர்: ராம் மொகம்மத் சிங் ஆசாத் மதம்: இந்தியன் நான் சிறுவன். ஊர் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கில் குழுமிய எம் மக்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் சுமந்து ஊடாடிக்கொண்டிருந்தேன். ஒரே நுழைவாயில், திடீரென அடைக்கப்பட்டது ராணுவத்தால். என்ன நடக்கப்போகிறது என உணர்வதற்குள் 1650 தோட்டாக்கள்... கொத்துக்கொத்தாய் என் நட்பும் உறவும் என் கண் முன்னே குருதியில் வீழ்ந்ததே... எய்தவனா அல்லது அம்பா என்றெல்லாம் குழப்பமில்லை. இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்தேன்.  இருபத்தொரு ஆண்டுகள், மைதானக்குருதியை மனதில் சுமந்தேன். புரட்சிக்குழுக்களுடன் இணைந்தேன். அடக்குமுறை கெடுபிடிகளின் கண்களில் மண்ணைத்தூவி, என் இலக்கு நோக்கிய நெடும்பயணம்... காஷ்மீர், அங்கிருந்து ஜெர்மனி, அங்கிருந்து எங்கெங்கோ அலைந்து அவன் இருக்கும் நாடு அடைந்தேன். அணுக முடியவில்லை. காத்திருந்தேன், இருபத்தொரு ஆண்டுகள்... நான் சிலபொழுது தங்கியிருந்த பன்றிக்கொட்டகைகள்கூட குருதி மணத்தை என் நாசியிலிருந்து அகற்றமுடியாது தோற்றன. இருபத்தொரு ஆண்டுகள் - வளர்த்தேன் வன்மத்தை. இதோ, இந்த வாரம் அவனை அணுக வாய்ப்பு! தயாரானேன். கள்ளத்துப்பாக்கி மலிவாக இல

மனதில் மறைந்தது மா'மத' யானை!

ஒன்பதாம் வகுப்பு, முஸ்லீம் பள்ளி. நாடிமுத்து, பஷீர், அலெக்ஸ், ரியால் என புதிய நட்புகள். பள்ளி நிறுவனர் புகழ்பெற்ற மருத்துவர். மத நல்லிணக்கத்துக்கு அவர் ஹாஸ்பிடல் ஓன்றே போதும். பஷீர் சிரித்த முகத்துக்காரன். 'அப்பா என்ன பண்றார்' என்ற கேள்விக்கு 'மெட்ராஸ் போய்ட்டு திரும்பும்போது சென்ட்ரல் ஸ்டேசன்ல ஹார்ட் அட்டாக். உக்காந்தபடியே வாப்பா போய்ட்டாரு' என்றான் புன்னகை மாறாமல். விரைவில் குடும்பத்தில் ஒருவன் எனும் அளவுக்கு, வளைய வந்தோம். பண்டிகை பலகாரங்கள் எங்கள் வீட்டில் உண்போம். ஈத் பலகாரம் அவன் வீட்டில். நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு, தலையணை சைசில். கிருத்துவ ஆரம்ப பள்ளியில் ஆப்ரகாம், ஆதாம், ஏவாள் அறிந்த நான் இப்ராகிம், ஆதம், ஈவா என அவர்களே நபிகள் வரலாற்று நூலிலும்! சுவை சற்றும் குறையாத வண்ணம் படித்து முடித்தேன் ஒரே மூச்சில். அவன்தான் நான் பள்ளியில் ஒரு முரட்டு பையனை மொமெண்டரி கோபத்தில் அறைந்தபின் நாடிமுத்துவின் உதவியோடு என்னை பத்திரமாய் :-) பள்ளியிலிருந்து வீடு சேர்த்தான்.  ரியால் கிரிக்கெட் தோழன். புது பேட்டில் காம்பஸ் குத்தி ஆலிவ் எண்ணெய் ஊற்றி ஊறவைப்பது எங

என் விழித்திரையில் : ஐகானிக் நாயனம், க்ளாசிக் சலங்கை.

ஐகானிக் நாயனம்! க்ளாசிக் சலங்கை! வழக்கமான கதைதான்.  இரு கலைஞர்கள்; உரசல், மண்டைக்குள் பல்பு, காதல், வில்லன்கள், வில்லி (ஜில்லு!), ஆபத்து, சந்தேகம், ஊடல், மனக்கூடல்,  'சுபம்' எண்ட் கார்டில் முடியும் கதைதான். ஆனால் அதற்குள்ளே எத்தனை ராகம், பாவம், கலை நயம்.... அவனின் நாயனம் உலகாளும். அவள் நயனம், நவரச நடனம் உலகை கட்டிப்போடும். அவன் முன்கோபி, தங்க மனசு. அவள் காதல் போராளி (1960s, remind you!!). இவர்கள் நிகழ்த்திய காதல் மேஜிக் பற்றி கை ஓயும்வரை எழுதிவிட்டார்கள். ஆனாலும் சலிக்கவில்லை... சலங்கை பணத்துக்கு மயங்கியதாய் நாயனம் மருகி, டப்பாங்குத்து ஜில்லுவின் குழுவோடு சில நாள் தங்க, நாயனம் கிறங்கியதாய் செய்தி சலங்கையை குலுக்க, கொஞ்சும் சலங்கை பொங்கும் சலங்கையாய் நிகழ்ச்சி அரங்கில் நாயனத்தை வெறுக்கும் தன் அன்னையின் கண்காணிப்பில் ஜில்லுவோடு மல்லுக்கட்ட நுழைந்து, பின் உண்மை அறிந்து நெகிழ்ந்து, நாயனம் கடல் கடந்து போவதை நிறுத்த துண்டை இழுத்து வம்பு செய்து ஆடும் ஒரு நாடகம், அதனுள் நிகழும் விவாதம், சவால், சவாலை ஏற்று நாயனம் பொருமலோடு நகர்ந்தபின் 'வாழ்வு மீண்டதே' என