முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேன் சிந்துதே!

தேனின் மருத்துவ குணங்களைப்போற்றிப்பாடி அவ்வப்போது சில பல ஸ்பூன் உள்ளே தள்ளும் நமக்கான கேள்வி, இந்தப்பதிவின் முடிவில்.

மருந்தாய் மட்டுமே பயன்படுத்திய பொழுதெல்லாம் சுத்தமாய் கிடைத்த தேன், இன்று பேராசைப்பெருவணிகத்தில் சிக்கியதேன்?

மலைத்தேன், கொம்புத்தேன்... எல்லாம் பூக்கள் மலரும் காலத்தில் (இளவேனில் பருவம், வசந்தகாலம்) மட்டுமே சாத்தியம். 

(பருவம் தப்பிப்பயிர் செய்து அவற்றின் சுத்தத்தை நாம் கெடுத்தது பெருஞ்சோகம்.)

இன்று கிடைக்கும் நெல்லித்தேன், நாவல் தேன், முருங்கை தேன், இன்னபிறவெல்லாம் அடிமை வாழ்வு வாழும் தேனீக்களின் உழைப்பு.

ஒரு பெரிரிரிய்ய்ய ட்ரக்கில் ஆயிரக்கணக்கான தேன் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு பூக்கள் இருக்கும் நிலங்களை (இந்தியா முழுவதும்) தேடி அடைந்து, பெட்டிகளை இறக்கிவிட்டு, குறிப்பிட்ட நாட்கள் கடந்ததும் (தேனடைகள் நிரம்பியதும்) அனைத்துப்பெட்டிகளையும் வண்டியிலேற்றி சென்று, தேனை சக்கையாக பிழிந்துவிட்டு மீண்டும் தேனடை சட்டங்களை பெட்டியில் சொருகி, அடுத்த நிலத்திற்கு பயணம். 

'ஐயோ! நேற்றுவரை நான் சேமித்த உணவு களவாடப்பட்டதே!' என கதறத்தெரியாத அந்த சிற்றுயிர் கூட்டம் மீண்டும் பறக்கும் உணவு சுமக்க.
இப்படி பல்லாயரக்கணக்கான நிலங்களில் அவை சேமித்தது பிடுங்கப்பட்டு கண்ணாடிக்குடுவைகளில் அடைக்கப்பட்ட தேனைத்தான் நாம் வாங்கி உண்கிறோம், பெட்ரோல் வழிய வழிய!

'வேலை செய்யக்கூலி கிடையாது. உனக்கான உணவையும் பிடுங்கிக்கொள்வேன். இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாசனம்!' என முடிவெடுக்க நாம் யார்?

பூக்களற்ற காலங்களில் இவர்கள் தரும் சர்க்கரைக்கரைசலையும் தேனென்று நம்பி சேமித்துவைக்கும் இந்த அப்பாவிப்பூச்சிகள்... (கலப்படத்தேன் இப்படித்தான். பெரும்பான்மையான தேன் புட்டிகளில் கணிசமாய் சர்க்கரைப்பாகு கலந்துள்ளதால்தான் குறைவான விலைக்கு கிடைக்கிறது!).

தேன் ஈக்களி்ன் வேலை என்பது இங்கு தேன் சேகரிப்பது அல்ல; மகரந்தச்சேர்க்கை மட்டுமே! தேனீக்கள் இல்லையேல் பூக்கள் காய்களாக மாறும் பிரம்ம வித்தைக்கு (நன்றி பாலகுமாரன்!) வாய்ப்பில்லை!

கேள்வி: இந்த சின்னஞ்சிறிய உயிரியின் வயிற்றில் அடித்துப்பிடுங்கி அதன் உணவை நாம் உண்ணுதல், சரியா? தகுமா?

பின்னூட்டமிடுங்கள், பகிருங்கள்!

பின் குறிப்பு: களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் தாக்குதலில் தப்பிப்பிழைத்த தேனீக்கள் சுமந்து வரும் தேனில் அந்த களைக்கொல்லிகளும் பூச்சிக்கொல்லிகளும் நமக்கே திரும்ப வரும், நாம் (சூப்பர்) மார்க்கெட்டில் வாங்கும் தேனில்! எதிர்காலக்குழந்தைகள் தலை வீங்கிப்பிறந்தால் 'ஐ! ஐன்ஸ்டைன்!'  என்று கொண்டாடுவதோ, "ஐயோ! Encephalitis!" என அலறுவதோ தனிநபர் விருப்பம்!

கருத்துகள்

  1. எனக்கு ஒரு சிறு சந்தேகம்:பிறருக்கு ஈவெதற்கென்று ஏதேனும் உயிரினம் இனப்பெருக்கம் செய்கிறதா அல்லது உணவு சேமித்து வைக்கிறதா? பின் குறிப்பை நான் வழி மாெழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. உலகமே நமக்காக இயங்குவதாய் எண்ணும் ஒரு பெருங்கூட்டத்திற்கு நான் இட்ட சிறு பொறி இது. பெருங்காட்டையும் எரிக்கக்கூடும் :-)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்