முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் விழித்திரையில் : The Hurricane - வெளுப்பு கருப்பு வெறுப்பு!


ரூபன் 'Hurricane' கார்ட்டர்.

கறுப்பு அமெரிக்கன். குத்துச்சண்டை வீரன். 

1960களில் ஒரு அமெரிக்க 'உலக' சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளை போட்டியாளனை தோற்கடித்ததை 'விழுங்க' முடியாத வெள்ளை நடுவர் குழு அவன் தோற்றதாய் அறிவிக்கிறது.

சிறுவயது முதலே அவனை கருப்பனென்ற ஒரே காரணத்திற்காக வெறுக்கும் உள்ளூர் காவல் அதிகாரி ஒருவர். வெள்ளையர்.

அவ்வூரில் நடந்த ஒரு வெள்ளையனின் கொலையில், சாலையில் நடந்துகொண்டிருக்கும் ரூபனையும் அவனது கருப்புத்தோழனையும் வழி நிறுத்தி 'இரு கருப்பர்களை தேடுகிறோம், பார்த்தாயா?' என வினவுகிறார். 'Shall any two blacks do?' (எந்த இரண்டு கருப்பராயிருந்தாலும் போதுமா?') என ஆத்திரத்தோடு ரூபன் கேட்க, கைதாகிறான், வெளியில் வர இயலாத தண்டனை பெற்று.

செய்யாத குற்றத்துக்காக சிறையில் நுழைந்த நொடி முதல் அவன் சந்திக்கும் இனப்பாகுபாடு அவமானங்களை எப்படி எதிர்கொள்கிறான், எப்படி எதிர்க்கிறான், தனிமைப்படுத்தப்பட்டு உடலைத்திருப்பக்கூட இடமில்லாத வெளிச்சமேயற்ற அறையில் எவ்வாறு நாட்களை நகர்த்துகிறான், சிறை வாழ்வு எப்படி என்பதை எல்லாம் புத்தகமாக எழுதுகிறான்.

கனடாவில் ஒரு வெள்ளை தத்துக்குடும்பத்தில் வளரும் ஒரு கறுப்பின சிறுவன் ஒரு புத்தக சந்தையில் ரூபனின் புத்தகத்தை தற்செயலாய் பார்த்து வாங்குகிறான். படிக்கிறான். தன் 'அன்னை'யிடம் பேசுகிறான்; 'ரூபன் குற்றம் செய்யவில்லை. அவன் சுதந்திரப்பறவையாகவேண்டும். நம்மால் ஏதாவது செய்ய இயலுமா?'.

அவன் தாயும் புத்தகம் படித்து அதே முடிவுக்கு வருகிறார். தன் சிறு வெள்ளை குழுவோடு ஒரு நெடிய சட்ட யுத்தம் தொடங்குகிறார். வெளுப்பு - கறுப்பு - வெறுப்பின் ஊடாக உணர்வுபூர்வமாகவும் எண்ணங்களின் வலுவாலும் இந்த சிறு குழு வெற்றி பெற்றார்களா? சிறுவன் தன் 'மானசீக' குருவை சந்தித்தானா? ரூபன் வெளியில் வரமுடிந்ததா? 

இருபது ஆண்டுகள் முன்னர் ஒரே ஒரு முறை பார்த்த படம், இப்போது  எந்த வெளிக்குறிப்புகளையும் அணுகாமல் நினைவிலிருந்து மட்டுமே எழுதும்போதும் கண்ணில் நீர் திரை...

(Denzel Washington!

டென்சல் வாஷிங்டன்! என்னுடைய ஆஸ்கர் goes to this Ruben Hurricane Carter! 

இத்தனை அருமையான பாத்திரத்தில் நடித்தும் அவருக்கு அன்று கிடைக்காத ஆஸ்கர், அவர் கேங்ஸ்டராக நடித்த இன்னொரு படத்திற்கு கிடைத்தது, well, காலத்தின் கட்டாயம்!)

சிறையில் அறையில் ரூபனிடம் சக கைதி கேட்கின்றார்: 'என்ன செய்து கொண்டிருந்தாய் இன்று?'

ரூபன் : 'பயணம் செய்து கொண்டிருந்தேன், வெகு தொலைவில் இருக்கும் அற்புதமான இடங்களுக்கு'!

உடலை எத்தனை காவல் மிகுந்த சிறையில் அடைத்தாலும் எண்ணக்குதிரையில் அதன் ஆன்மா சிறகு விரித்துப்பறப்பதை யாரேனும் தடுக்க இயலுமா என்ன? 

The Hurricane என்ற இந்த திரைப்படத்தை நீங்கள் பார்ப்பதும் அந்த வகையில் சேரும் :-)

கொசுறு: கார்ட்டர் கற்பனைக்கதையல்ல. அவரைப்பற்றி மேலும் அறிய, வலைகடல் (internet) திறந்தே கிடக்கிறது :-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்