முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

36 இன்ஞ்ச் வேஷ்டி கிடைக்குமா?


'வேஷ்டி நாலு குடுங்க. ஹிப் சைஸ் 36' என்ற குரல் கேட்டு 'ங்கொக்கா மக்கா வேஷ்டிக்கு ஹிப் சைசா! யாரையா நீ?' என நிமிர்ந்த கடைக்காரரின் முன் நின்றிருந்தவர், கோட் சூட் பூட் அணிந்த இந்தியர். மேதமை ததும்பும் முகம்.

'யார் இவர்? கோட்டு போட்டு வந்து வேஷ்டி... ஏன்?' என்ற கேள்வி இந்தப்பதிவிற்குள் உங்களையும் இட்டுச்செல்லும்...


சபர்மதி ஆசிரமத்தில் மரத்தடி நிழலில் காந்தியிடம் அவரை பார்க்க இந்த கோட்டு சூட்டு நபர் வந்து காத்திருக்கும் தகவல் போகிறது. 

அழைக்கிறார்.

கோட்டு சூட்டு நபர் மரத்தடியில் அமர உடை தடுத்ததால் அவஸ்தையாக நிற்க, கவனித்த காந்தி தன் அருகிலிருந்த ஒருவரை நாற்காலி எடுத்துவரப்பணிக்கிறார். நாற்காலி எடுத்து வந்தவரை பார்த்து கோட்டு சூட்டு நபர் வியர்த்துப்போகிறார்...' இவரா?! எவ்வ்ளோ பெரிய மனுசன், எனக்கு நாற்காலி சுமக்கிறாரே' என்று.

கால் மடக்கி உடலை வருத்தி தரையில் அமர்ந்து அரையாடை உடுத்த காந்தியுடன் உரையாடுகிறார், இந்த சூட்டு அணிந்த பொருளாதார மேதை. 'கிராமங்கள், பருத்தி நூற்பு' இரண்டையும் இணைத்து சுயசார்புள்ளவையாக நம் கிராமங்களை மாற்ற முடியுமா என்பதே அரையாடை கிழவர் கோட்டு சூட்டிடம் கேட்ட கேள்வி.

பல ஆண்டு முயற்சிக்குப்பின் தனித்துவமான, அனைத்து இந்திய கிராம மேம்பாட்டுக்கான 'காதி கிராஃட் & வில்லேஜ் இன்டஸ்ட்ரீஸ்' என்ற அமைப்பை நிறுவுகிறார் தற்போது வேட்டி ஜிப்பாவில் உலவும் இந்த மேதை. 36 இன்ஞ்ச் வேஷ்டி வாங்கியபின்னர் தன் வாழ்நாளில் ஒரு முறை கூட கோட்டு அவர் சூட்டு அணியவில்லை.


நமது அரசின் ஐந்தாண்டு திட்ட அறிக்கைகளின் 'பயனை' எப்படி அறிவது என புள்ளியியல் நிபுணர்கள் தலையைப்பிய்த்துக்கொண்டு விவாதிக்கையில் உள்நுழைந்த இவரது தீர்வு என்ன தெரியுமா? 'விலா எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் ஏழை ஒருவனைப்பிடி. எத்தனை எலும்புகள் தெரிகிறதென்று கணக்கெடு. ஐந்தாண்டுகள் கழித்து அவனைப்பிடித்து மீண்டும் கணக்கெடு. எலும்புகள் மறைத்து உடல் ஊக்கமாய் இருந்தால் திட்டம் வெற்றி'! அவ்வளவே!'

மாவரிக் என நேரு சார்ந்த ஜால்ராக்கள் இவரை ஒதுக்கினாலும் தன் பங்களிப்பை பல்வேறு தளங்களில் செவ்வனே செய்துவந்தார். ஒரு முறை பார்லிமெண்டுக்கு மாட்டுவண்டியில் வந்தார். ஏடென்ற கேள்விக்கு அவரது பதில், This is the National Vehicle of our Country. What is wrong?! '.

அவரது அடிப்படை கோட்பாடு 'நிலைத்த, நீடித்த பொருளாதாரம்', I.e. Economic Permanence. 'அரசு என்பதன் தலையாய கடமை உணவு, உறையுள், உடல்நலம் என்ற மக்களின் அடிப்படைத்தேவைகளை தற்சார்பு முறைகளில் நிறைவேற்றுவதே. பெரு வணிகமும், தொழிற்சாலைகளும் காத்திருக்கட்டும். அவற்றிற்கான நேரம் வரும்போது அனுமதிக்கலாம்...' இது 1948 ஆம் ஆண்டில் அவர் சொன்னது.

கேட்டிருந்தால் இன்றைய இந்தியா அப்துல் கலாமின் நிறைவேறாத கனவை அவர் வாழ்நாளுக்குள் நிறைவேற்றியிருக்கும் :-(

J. C. குமரப்பாவை தெரியுமா?

மதுரைக்காரர். சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக...ஆகியிருக்க வேண்டியவர்... கோட்சேயின் குண்டுக்கு வீழ்ந்தது காந்தியுடன் சேர்ந்து இவரது எதிர்காலமும்கூட. அதனால் சண்முகம் செட்டிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

காந்தி இறந்தபின் அதிகமாக கவனிக்கப்படாவிட்டாலும் இவரது செயல்பாடுகள் பெரும்பயனை கிராமங்களுக்கு தந்தன. நம்மில் எத்தனை பேருக்கு நமது கிராமங்களில் தோல் பதனிடும் தொழில் இருந்தது தெரியும்? இறந்த மாடுகளின் தோல் பதனிடப்பட்டு, அவற்றின் எலும்புகள் தூளாக்கப்பட்டு (Bone Meal) நம் விளைநிலங்களுக்கு உரமாக சேர்ந்தது தெரியும்? 

குமரப்பா பரிந்துரைத்த மனிதப்பொருளாதாரத்தை (Production by Masses) புறம் தள்ளி மேலை நாடுகளின் இயந்திரப்பொருளாதரத்தை (Mass production by Machines) நம் நாடு முன்னிறுத்தி பசுமைப்புரட்சி தொடங்கி நம் விளை நிலங்களை வேதி உப்புகள் கொட்டி கொன்றதும் அதனால் விளைந்துகொண்டிருக்கும் உடல்நலக்கேடுகளும் நாடறிந்ததே.


அவரது கோட்பாடுகள் இன்றைய இந்தியாவுக்கும் அற்புதமாய் பொருந்துபவை. இவரைப்பற்றி, இவரது எழுத்துகளை, செயல்களைப்பற்றி அறிய ஆவல் உள்ளவர்கள்
J C Kumarappa Reader என வலைகடலில் தேடுங்கள்!

பேரன்புடன்,
பாபுஜி

கருத்துகள்

  1. நல்ல கட்டுக் காேப்பு! குமரப்பா இன்று என்னெதிரே அதே யுகப் புரட்சிக்கான திட்டங்களுடன்!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...