முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒளிவதற்கு இடமில்லை


ஒளிவதற்கு இடமில்லை.

நாஞ்சில் பி.டி. சாமி என்பவர் விகடனில் முன்னொருநாள் எழுதிய நெடுந்தொடர் இது.

'ஒளிவதற்கு இடமில்லை'. இரும்புத்திரை என்ற சமீபத்திய சினிமா சொல்வதும் இதுதான். ஆனால் அது வெளிச்சமிட்டுக்காட்டியது ஆன்லைன் / சைபர் உலகை மட்டுமே. படம் முடிந்ததும் ஒரு 8 வயது சிறுமி தன் அக்காவிடம் பயத்தோடு சொன்னது இது: 'அக்கா, உடனே அம்மா போன்ல இருக்கிற என் கேம்ஸ் எல்லாத்தையும் அன்இன்ஸ்டால் பண்ணிடு. இன்ஸ்டாக்ராம்ல உன் ப்ரொஃபைல் பிக்சரையும் டெலீட் பண்ணிடு. உடனே!'

சைபர் உலகில் ஊடாடும் ஒரு எட்டு வயது சிறுமிக்கு புரிந்ததுகூட நிஜ உலகில் வாழும் வயதுக்கு வந்த நமக்கு புரியவில்லையே!

எது நமக்கு கிடைத்ததோ இது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை நாம் விதைக்கிறோமோ அதையே நாம் அறுவடை செய்வோம்....

"இன்னாபா, இன்னா மேட்டர்?" என்கிறீர்களா?

இதுதான் மேட்டர்: இயற்கையின் 'நிழல்' கூட நம் மேல் படவிடாமல் ஒளிந்து திரிந்து, நமக்கு வேண்டியதை எடுத்து வேண்டாததை புறம் தள்ளும் நம்மைப்போலவே இயற்கையும் இடையறாது செய்தவண்ணமே இருக்கிறது. ஒரே வித்தியாசம், அதன் செயல் விருப்பு / வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. டைனோசரை புறம்தள்ள முடிந்த அதற்கு நம்மை தள்ள சிறு 'குலுக்கல்' போதும்.
நாம் அன்இன்ஸ்டால் செய்யவேண்டியவை, டெலீட் செய்யவேண்டியவை ஏராளம்; நேரம் இல்லை என புறம்தள்ளாமல் விழித்துக்கொண்டால், ஒளிவதற்கு அவசியம் இருக்காது!

இந்த National Geographic இதழின் அட்டைப்படம் காட்டுவது ஒரு சிறு புள்ளியை மட்டுமே. அதை நல்லதொரு கோலமாய் மாள்றுவது நம் கையில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...