முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராம் மொகம்மத் சிங் ஆசாத் ஹை நாம் மேரா

பெயர்: ராம் மொகம்மத் சிங் ஆசாத்
மதம்: இந்தியன்

நான் சிறுவன். ஊர் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கில் குழுமிய எம் மக்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் சுமந்து ஊடாடிக்கொண்டிருந்தேன். ஒரே நுழைவாயில், திடீரென அடைக்கப்பட்டது ராணுவத்தால். என்ன நடக்கப்போகிறது என உணர்வதற்குள் 1650 தோட்டாக்கள்... கொத்துக்கொத்தாய் என் நட்பும் உறவும் என் கண் முன்னே குருதியில் வீழ்ந்ததே...

எய்தவனா அல்லது அம்பா என்றெல்லாம் குழப்பமில்லை. இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்தேன். 

இருபத்தொரு ஆண்டுகள், மைதானக்குருதியை மனதில் சுமந்தேன். புரட்சிக்குழுக்களுடன் இணைந்தேன். அடக்குமுறை கெடுபிடிகளின் கண்களில் மண்ணைத்தூவி, என் இலக்கு நோக்கிய நெடும்பயணம்... காஷ்மீர், அங்கிருந்து ஜெர்மனி, அங்கிருந்து எங்கெங்கோ அலைந்து அவன் இருக்கும் நாடு அடைந்தேன். அணுக முடியவில்லை. காத்திருந்தேன், இருபத்தொரு ஆண்டுகள்... நான் சிலபொழுது தங்கியிருந்த பன்றிக்கொட்டகைகள்கூட குருதி மணத்தை என் நாசியிலிருந்து அகற்றமுடியாது தோற்றன.

இருபத்தொரு ஆண்டுகள் - வளர்த்தேன் வன்மத்தை. இதோ, இந்த வாரம் அவனை அணுக வாய்ப்பு!

தயாரானேன். கள்ளத்துப்பாக்கி மலிவாக இலகுவாக கிடைத்தது. இன்று அவன் என் கண் முன்னே மேடையில். 

அவன் அன்று என் மண்ணில் சிந்திய இந்திய ரத்தம், இன்று அவன் மண்ணில் அவனது ரத்தத்தினால் சாந்தியடையட்டும் என அனுப்பினேன் இரண்டு தோட்டாக்கள்... முதல் தோட்டா, 21 வருட ரௌத்திரம், இதயத்தை துளைத்து நுரையீரலையும் பொத்தலிட்டு வெளியேறியது. கொத்தாய் வீழ்ந்து என் கண் முன்னே மாண்டான். இரண்டாவது தோட்டாவும் யாருக்கோ சேதாரம் செய்ததாம். செய்யட்டுமே... கொஞ்சமா இழந்தோம் நாம்?


அவர்களால் தூக்குக்கயிறால் என் கழுத்தை மட்டுமே முறிக்கமுடிந்தது. என் ஆன்மாவை அல்ல. 

ஜாலியன்வாலாபாக் வந்தால் நீங்கள் இன்றும் என்னை சந்திக்கலாம்.

ராம் மொகம்மத் சிங் ஆசாத் ஹை நாம் மேரா.
ஹிந்துஸ்தானி ஹை தர்ம் மேரா.

என் மதத்தின் நிறம்: பன்னெடுங்காலமாய் வெண்மை. இடையில் முன்னூறு ஆண்டுகள் செங்குறுதி. அதன் பின்... 


தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை? சர்வேசா! கண்ணீரால் காத்தோம்... இன்று கருகத்திருவுளமோ?????

கருத்துகள்

  1. எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியர் ஆகப்பெரின். எண்ணித் துணிந்து பயணம் தாெடங்கியாகிவிட்டது:வெற்றி கிட்டட்டும்!

    பதிலளிநீக்கு
  2. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்