முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் விழித்திரையில் - சுடலை மாடன்!


என் விழித்திரையில் - சுடலைமாடன்!

'சே, பஸ்ச மிஸ் பண்ணியாச்சே! இப்ப என்ன பண்றது?'
காலேஜ்க்கு அடுத்த பஸ் இரண்டு மணி நேரம் கழித்து என அறிந்ததும் அருகில் இருந்த தியேட்டரில் டிக்கட் வாங்கி
('படம் போட்டு இருவது நிமிசம் ஆச்சி' என்றார் டி. கிழிப்பவர்) நுழைந்தேன். ஐந்து நிமிடத்தில் முன்கதை பிடிபட்டுவிட்டது.
ஒரு சிற்றூரில் கோயில் பூசாரியின் மகனும் அதே ஊரில் ஒரு பெரிய மனிதரின் வைப்பாக இருக்கும் பெண்ணின் மகளும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். இரு குடும்பமும் கடுமையாக எதிர்க்க காதல் பற்றிப்பரவி அவள் உண்டாகிறாள். ஏராளமான அவமானங்களோடு ஊர் எல்லை தாண்டி ஒதுக்கி விடப்படுகிறாள். 
பூசாரி தந்தை ஊர்த்திருவிழாவில் சுடலைமாடசாமியாக அந்த வருடம் வரை இரா வேட்டைக்கு வழக்கமாக செல்பவர், கூடிய சபை நடுவில் கல்லூரிப்படிப்பு படிக்கும் மகனுக்கு அந்த பொறுப்பை திணிக்கிறார். 
தந்தை ப்ளஸ் ஊர்க்கட்டுப்பாடுகளை மீற இயலாத மகன் முதன் முதலாய் சுடலைமாடனாய் இரவில் வேட்டைக்கு கிளம்புகிறார். வேட்டைக்கு செல்கையில் எதிரில் எவர் வந்தாலும் கொன்று விடுவார் என ஐதீகம். எனவே ஊர் அடங்கிக்கிடக்கிறது. 

ஊர் எல்லையில் 'பிறந்த குழந்தையோடு' காத்திருக்கும் காதலி, குழந்தையை சுடலை மாடனின் காலடியில் கிடத்தி நீதி கேட்கிறார்.

ஒரு ஊருக்கு சாமியாயிருப்பதை விட ஒரு ஆதரவற்ற பெண்ணுக்கு புருஷனாயிருப்பது மேல் என சுடலைமாடன் அந்தப்பெண்ணோடு ஊரை விட்டே ஓடிவிடுகிறார்!!!!?

1980-90களில் 'ரேடிகலான', டேஞ்சரான (இப்ப மட்டும் என்ன வாழுதாம்?!!) இந்தப்படம் என்னுள் எழுப்பிய அதிர்வுகள் இன்றும் ஓயவில்லை!

'நான் ஏரிக்கரை மீதிருந்து எட்டுத்திக்கும் பார்த்திருந்தேன்...'
'கோட்டைய விட்டு வேட்டைக்குப்போகும் சுடலைமாட சாமி...'
ஒரு முறையேனும் யுட்யூபில் கேட்டுத்தான் பாருங்களேன் இப்பாடல்களை! வேறு யார் இசையமைத்திருக்கமுடியும் இவ்வளவு அற்புதமாய்?! (அவரேதான்!!). பாடல்களும் அவரே எழுதினதாம்!

ஒரு ரவுடியை கிராம தெருக்கள் / சந்துகள் வழியே போலீஸ் விரட்டிப்பிடிக்கும்போது நாமும் அவர்களோடு சேர்ந்து பயணித்தால் எப்படியிருக்கும்? 

பொறிபறக்கும் அந்தப்பத்து நிமிடங்களை நான் மீண்டும் தமிழ் சினிமாவில் இன்றுவரை கண்டதில்லை. இதற்காக மட்டுமேகூட இந்தப்படத்தை ஒருமுறையேனும் அவசியம் பாருங்கள்!

"சின்னத்தாயி" அவள் பெயர்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்