முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் விழித்திரையில் : ஐகானிக் நாயனம், க்ளாசிக் சலங்கை.


ஐகானிக் நாயனம்! க்ளாசிக் சலங்கை!

வழக்கமான கதைதான். 

இரு கலைஞர்கள்; உரசல், மண்டைக்குள் பல்பு, காதல், வில்லன்கள், வில்லி (ஜில்லு!), ஆபத்து, சந்தேகம், ஊடல், மனக்கூடல்,  'சுபம்' எண்ட் கார்டில் முடியும் கதைதான். ஆனால் அதற்குள்ளே எத்தனை ராகம், பாவம், கலை நயம்....

அவனின் நாயனம் உலகாளும். அவள் நயனம், நவரச நடனம் உலகை கட்டிப்போடும். அவன் முன்கோபி, தங்க மனசு. அவள் காதல் போராளி (1960s, remind you!!).

இவர்கள் நிகழ்த்திய காதல் மேஜிக் பற்றி கை ஓயும்வரை எழுதிவிட்டார்கள். ஆனாலும் சலிக்கவில்லை...

சலங்கை பணத்துக்கு மயங்கியதாய் நாயனம் மருகி, டப்பாங்குத்து ஜில்லுவின் குழுவோடு சில நாள் தங்க, நாயனம் கிறங்கியதாய் செய்தி சலங்கையை குலுக்க, கொஞ்சும் சலங்கை பொங்கும் சலங்கையாய் நிகழ்ச்சி அரங்கில் நாயனத்தை வெறுக்கும் தன் அன்னையின் கண்காணிப்பில் ஜில்லுவோடு மல்லுக்கட்ட நுழைந்து, பின் உண்மை அறிந்து நெகிழ்ந்து, நாயனம் கடல் கடந்து போவதை நிறுத்த துண்டை இழுத்து வம்பு செய்து ஆடும் ஒரு நாடகம், அதனுள் நிகழும் விவாதம், சவால், சவாலை ஏற்று நாயனம் பொருமலோடு நகர்ந்தபின் 'வாழ்வு மீண்டதே' என்பதான பாவம் (196s, mind you again!)...க்ளாசிக்!!!

இதற்குமேல் நான் இவர்கள் கதையை நீட்டிக்கப்போவதில்லை.

என் குழந்தைகளுக்கு 1960 களின் தமிழ் ஒரு வேற்றுமொழி, அவ்வளவே. இருந்தும் அவர்களை முழுதுமாய் ஈர்த்தது கலையின் வெற்றியா, காலத்தை கடந்த கலைஞர்களின் வெற்றியா, காதல் உணர்வை கடத்திய விதத்தின் வெற்றியா... நானறியேன்!

கருத்துகள்

  1. கலையை ரசிக்கத் தெரிந்தால் மாெழி தெரியவேண்டிய அவசியம் இல்லையே! அத்துடன் குழந்தைகள் மிக வேகமாக வளர்ந்தும் விடுகிறார்களே!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...