முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனதில் மறைந்தது மா'மத' யானை!


ஒன்பதாம் வகுப்பு, முஸ்லீம் பள்ளி. நாடிமுத்து, பஷீர், அலெக்ஸ், ரியால் என புதிய நட்புகள். பள்ளி நிறுவனர் புகழ்பெற்ற மருத்துவர். மத நல்லிணக்கத்துக்கு அவர் ஹாஸ்பிடல் ஓன்றே போதும்.

பஷீர் சிரித்த முகத்துக்காரன். 'அப்பா என்ன பண்றார்' என்ற கேள்விக்கு 'மெட்ராஸ் போய்ட்டு திரும்பும்போது சென்ட்ரல் ஸ்டேசன்ல ஹார்ட் அட்டாக். உக்காந்தபடியே வாப்பா போய்ட்டாரு' என்றான் புன்னகை மாறாமல்.

விரைவில் குடும்பத்தில் ஒருவன் எனும் அளவுக்கு, வளைய வந்தோம். பண்டிகை பலகாரங்கள் எங்கள் வீட்டில் உண்போம். ஈத் பலகாரம் அவன் வீட்டில். நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு, தலையணை சைசில். கிருத்துவ ஆரம்ப பள்ளியில் ஆப்ரகாம், ஆதாம், ஏவாள் அறிந்த நான் இப்ராகிம், ஆதம், ஈவா என அவர்களே நபிகள் வரலாற்று நூலிலும்! சுவை சற்றும் குறையாத வண்ணம் படித்து முடித்தேன் ஒரே மூச்சில். அவன்தான் நான் பள்ளியில் ஒரு முரட்டு பையனை மொமெண்டரி கோபத்தில் அறைந்தபின் நாடிமுத்துவின் உதவியோடு என்னை பத்திரமாய் :-) பள்ளியிலிருந்து வீடு சேர்த்தான். 

ரியால் கிரிக்கெட் தோழன். புது பேட்டில் காம்பஸ் குத்தி ஆலிவ் எண்ணெய் ஊற்றி ஊறவைப்பது எங்கள் பகுதிநேர தொழில். அவன் தங்கைக்கு பதினைந்து வயதில் திருமணம் என்று பத்திரிகை தந்தபோது நான் பணிரெண்டாம் வகுப்பில் இருந்தேன். எங்கள் இருவரையுமே அது பெரிதாய் பாதிக்கவில்லை. 

அலெக்ஸ்... என் பனிரெண்டாம் வகுப்பு ஆருயிர் தோழிமேல் ஒரு தலை காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி பள்ளி டெஸ்க்கில் அவள் பெயரை காம்பசில் கீறி அதன்மேல் தலைகவிழ்த்தே பள்ளிப்பருவம் கடந்தவன்; 'இது முட்டாள்தனம்' என அவள் சொன்னதை நான் அவனிடம் பொலைட்டாக எடுத்துச்சொன்னபோது புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டிருந்து, நான் பேசி முடித்ததும் சோகத்தில் மறுபடி டெஸ்க்கில் அவள் பெயர் மேல் கவிழ்ந்து தூங்கிப்போனான்!

அந்தப்பள்ளியில், அந்த ஊரில் (ராமநாதபுரம்) எங்களுக்கு மதங்கள் தெரியாது. நான் அப்போது தாயுமானவர் தபோவனத்தில் பகுதிநேர வாலண்டியராக லைப்ரரி புத்தகங்களை கேடலாக் செய்துவந்தேன்; பஷீரும் வாலண்டியர் அவ்வப்போது. மடத்தலைமை சாமியார் எங்கள் இருவரைப்பார்க்கும் போதெல்லாம் மனம் மலர ஒரே மாதிரி சிரிப்பார்...

அப்துல்லா டாக்டர், பள்ளி நிறுவனர், என்னை பள்ளி மைதானத்தில் கடக்கையில் 'ஒல்லிப்பையா, அப்பாவிடம் சொல்லி முட்டை வாங்கி சாப்பிடு' என்று சொன்னதாய் நான் என் அப்பாவிடம் சொன்ன ஒரே பொய்யை, அவர் அப்துல்லாவை (அவரை மட்டுமே!) நம்பி சைவ வீட்டில் தனிப்பாத்திரம் வாங்கி, முட்டைகள் அவித்துத்தர அம்மாவை கன்வின்ஸ் பண்ணி ஏற்பாடு செய்தார்!

இப்போது நினைத்துப்பார்க்கையில் இதுதான் மத நல்லிணக்கமோ என தோன்றுகிறது :-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்