முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசைமுகம் மறந்துபோச்சே!



என் ஆசை முகம் மறந்துபோச்சே...

காலேஜில் முதல் நாள் முடிந்து ஹாஸ்டல் வரும் வழியில் சுற்றி வளைக்கப்பட்டோம்.

சில நிமிடங்களில் சக முதலாண்டு மாணவன் ஒருவன் இமாஜினரி கோழியை, சீனியர் கை காட்டுமிடமெல்லாம் தாவிப்பிடிக்க முயன்றான். இன்னொருவன் ஸ்லோ மோஷனில் கால்பந்தாட்டம்...

வயிறு பிசைந்தது.

அடுத்து என் முறை.

'வாத்யாரே எந்த ஊரு?'

'பல ஊரில் படிச்சன் சார்' (சார்னு கூப்பிடாமல் அப்பத்தான் ஒருத்தன் அப்பு வாங்கி விம்மிக்கிட்டிருந்தான்!)

'நக்கலா??'

'இல்ல சார். நிஜமா'.

'சரி... புட்ச்ச நடிகை யார்றா? ஒழுங்கா பதில் சொல்லு. அம்பிகாவா, ராதாவா, மாதவியா... ரொமான்சு மோனோ ஆக்டிங்கு உனக்கு'.

படபடப்பு கூடியது.

'இல்ல சார்... சா...சா...'

'என்னடா முழுங்குற. முழுசா சொல்லு!'

'சா...சாவித்திரி சார்'.

மயான அமைதி. கோழி, கால்பந்து எல்லாம் freeze ஆன அந்த நிமிடம் இன்னும் மனக்கண்ணில்.

கையறு நிலை... உணர்ந்தவர் உணர்வர்!

('அப்புறம் என்ன ஆச்சு?' என்பவர்கள் பிறிதொரு நாளில் படிப்பீர். இந்தப்பதிவு சாவித்திரிக்காக. சாவித்திரிக்காக மட்டுமே.)

மகாநதி / நடிகையர் திலகம் படம் பார்த்து முடித்த நொடியில் நினைவில் வந்த நிகழ்வு இது.

1970-80 களில் நடுத்தர குடும்பத்தில் வளர்ந்த அநேகருக்கு இவர் ஒரு தேவதை. 'கண்ட படத்தையும் பாத்து கெட்டுப்போகாத. சாவித்திரி படம் பாரு' என ஸ்ட்ரிக்டான பெற்றோர்கூட மனதார வழிமொழிந்த அற்புத நடிகை.

படம் பற்றிய எந்த பாதிப்புமில்லாமல் பார்க்கவேண்டும் என ஊடகங்களை ஒதுக்கி பார்த்த உணர்வுக்கலவையில் இந்தப்பதிவு.

'ட்ரக் அடிக்ட்... குடி... இன்ஜெக்‌ஷன்' என கீழ்மையை சாடும் தொனியில் விமர்சிக்கப்பட்டவரின் வாழ்வில் இவ்வளவு வலியா? அவருக்கு இவ்வளவு வலிமையா?! என நான் கண்டது இன்னொரு சாவித்திரி. 
தகப்பன் முகம் காண ஏங்கிய, புறக்கணிப்புகளை வென்ற, புகழ்த்துகள் தன் மீது குவிந்ததை எந்த நேரமும் தூசு போல உதறத்தெரிந்த, சமூக கட்டமைப்புகளை மீறிய... ஒரு gentle woman, a noble soul.

நேர்மையாக இவரின் வாழ்வை பதிவு செய்த அனைவர்க்கும் சினிமாவில் வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. அவரைத் தவறாய் அறிந்தவர்களை நேர் செய்ய, நம் சமூகத்துக்கு அவர் வாழ்வு மூலம் பல கசப்பான உண்மைகளை மருந்தாய் புகட்ட நீங்கள் உழைத்த உழைப்பு வீணில்லை!

ஏழ்மை துரத்தும்போதும் முன்னறிமுகம் இல்லா டாக்‌ஸி ட்ரைவரின் பெண் திருமணத்திற்கு தன் பட்டுப்புடவையை விற்று பணம் தரும் அந்த உள்ளம்...

கீர்த்தி சுரேஷ்! ராட்சஸ நடிப்பு!!!

இந்த வயதிலேயே நீங்கள் உச்ச சிகரம் தொட்டுவிட்டீர்கள். வரும் நாட்களில் சாவித்ரியை நினைவில் கொண்டுவர முயல்பவர்க்கெல்லாம் அந்த ஆசைமுகம் மறந்துபோய் உங்கள் முகம்தான் தோன்றும்.

சலங்கை ஒலி ஜெயப்ரதாவிற்குப்பின் வேறு யாருக்கும் இப்படி ஒரு ரிக்வஸ்ட் தரவேண்டும் என தோன்றியதில்லை; இனி நீங்கள் சாதிக்கவேண்டியது எதுவுமில்லை. தயவு செய்து சினிமாவை விட்டு விலகி விடுங்களேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்