முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் இறகின் சுவடே காடு!


தன் சிறு வயிற்றில் பெருங்காடு சுமந்து, விசை கூட்டி விரைந்து பெரும்பரப்பு கடந்து, கடந்த இடமெல்லாம் கடக்கும்பொழுதெல்லாம் இயன்றவரை விதைபரப்பி காடு வளர்க்கும் இந்த சிற்றுயிர். 

காடென்பதென்ன? என்ற அறிதல் நமக்கு வேண்டுமானால் தேவைப்படலாம்; அதற்கு அல்ல..

உண்ட பழம் வயிற்றில் செரித்தால்மட்டும் போதாதென பழ விதை வீறுகொண்டு முளைக்க 'வேண்டி' வயிற்றில் அமிலம் சுரந்து... முளைத்தாலென்ன முளைக்காவிட்டாலென்ன என்ற கேள்விகளுக்கு அப்பால் பறந்து விதைகள் தூவி...  மீண்டும் காட்டின் விதை தேடி தொடரும் இதன் பயணத்தில் கூடென்பது குஞ்சுகளுக்கு மட்டுமே. இன்றுவரை பழங்களை கூடுகளில் தனக்காகவோ குஞ்சுகளுக்ககவோ சேமித்து வைக்கும் பறவையை யாரேனும் கண்டதுண்டா?

இப்பறவைகளை மரங்கள் நேசிப்பது இயற்கைதானே!

மரங்களில் வாலில் தொங்கி தாவிப்பழகி இறங்கி நிலம் முழுதும் பல்கிப்பெருகிய நம் கூட்டமும் விதைத்துக்கொண்டுதானே இருக்கிறது நஞ்சு தோய்ந்த எண்ணங்களையும் சொற்களையும்?

இந்நஞ்சில் கருகிய கனவுகள் எத்தனை? உணர்வுகள், நினைவகள் எத்தனை? 

பசிபிக் பெருங்கடலில் ஒரு சிறு தீவில் நம் இனம், மரத்தை வீழ்த்த பயன்படுத்துவது ஆயுதங்களை அல்ல... மரத்தை சுற்றி நின்று மரம் மீது அவை ஏவுவது நஞ்சில் தோய்ந்த சொற்களை மட்டுமே. எய்த கூட்டம் விலகிச்சென்றபின் தனித்து நின்று துக்கித்து தன்னைத்தானே சிலுவையில் அறைந்து மரித்துப்போகும் இம்மரத்தின் மரண ஓலம் கேட்கும் அங்கு உயரப்பறக்கும் பறவையின்  காதுகளுக்கு மட்டும். மரத்தின் ஆன்மா விடைபெறும் முன் விசை கூட்டி மேலெழும்பி அதி விரைவாய் அப்பறவை அங்கு கொணர்ந்து சேர்க்கும் இன்னொரு விதையை. 

பறவைகளற்ற வானம் செய்ய இடையறாது முயலும் நம் கூட்டத்திற்கு தெரியுமா இந்தப்பறவையின் அவசரம்?

வானில் விரையும் பறவை ஒன்றை எப்போதாவது எங்காவது நீங்கள் காண நேர்ந்தால் ஒரு நொடி நின்று அதன் பயணம் சிறக்க வாழ்த்துங்களேன்... வாழ்த்த வாழ்த்த (உங்கள்) வால் வளரலாம். அது மீண்டுமொரு நாள் நீங்கள் மரமேற உதவலாம்... 

மரத்தின் கூரையிலிருந்து நிலப்பரப்பை காணும் பாக்கியம் மீண்டும் உங்களுக்கு கிட்ட உங்கள் வாழ்த்தே உங்களுக்கு உதவலாம்!

அதுவரையில்... இந்த படங்கள் உதவலாம் :-)








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்