முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இது புத்தாண்டு வாழ்த்து அல்ல...

ஒற்றை நாளில் தொடங்கி ஒரே நாளில் முடிந்துவிடும் 'ஒரு நாள் கூத்து', புத்தாண்டு, நம்மில் பலருக்கு.  என்ன கழிந்தது 2017 இல், நாள்காட்டியின் தாள்கள் தவிர? முந்தைய வருடங்கள் கழிந்ததும் அதேபோல்தானே. ஒரு மரமாவது நட்டிருப்போமா வாழ்நாளில் இதுவரையில்? ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய உலகில் என்ற நியதியில், புதிதாய் செய்வதற்கு ஒன்றுமில்லை என, நாம் மட்டும்பழைய மனிதராய்... ஒரு நல்ல நாள் பார்த்தாவது நாமும் புதியவராய் மாறுவோமே. புதிய வருடம், புதிய மாதம், புது நாள், ஏன்? இந்த நாள்...எந்த நாளும் நல்ல நாள்தானே? தவறுகளை சரி செய்து, தனி மனித நன்மையிலிருந்து பொது நன்மை வரை உண்மையாய் சிந்தித்து நல்லதை மட்டுமே செய்ய இப்போதிலிருந்து உண்மையாய் முயல்வோம். நாள்காட்டியில் தாள்கள் கிழிவது எப்போதும் நிற்காது! ''மண், மரம், மனிதம் தொட்டு மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும், இந்த நொடியிலிருந்து'  என நட்புகள் அனைவருக்கும் இந்தச்சிறு விண்ணப்பம். இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு விடியலிலும். மரம் நடுவோம், நிறுத்தாமல்; பூமியின் காயங்களை ஆற்ற, நம் வாழ்விற்கு அர்த்தம் சேர்க்க.

தேவதைகள் பூப்பறிப்பதில்லை

தேவதைகள் பூப்பறிப்பதில்லை! நெடுங்காலம் முன்பு மரத்திலிருந்து இறங்கி, வெயிலுக்கும் மழைக்கும் மரத்தடியில் அண்டிப்பிழைத்த கூட்டம் ஒன்று கல் அறைகள் கட்டி பதுங்கப்பழகியபின், வேரொன்று கல்லருகில் வந்தாலும் கோடரி தூக்கி சிதைத்து வேரறுத்து...பெருவிசை வாகனம் செய்து, இன்னும் விசை கூட்டி ஓட்டுவதற்காக அவை ஓடுமிடமெல்லாம் காடறுத்து மண் பெயர்த்து தார் பூசி மெழுகவும் பெருநகரம் உருவாச்சாம்... பிட்யுமெனும் தார் பூச்சும் மூச்சு முட்ட, விரையும் பெருவிசை வாகனங்களில் அரைபட்டு, சிறுவிசை மனிதரிடம் மிதிபட்டு, வெயில் மழை காற்று குளிரில் ஒதுங்க வழியின்றி, கதற மொழியின்றி சாலைகள் மௌனமாய் ஓலமிட்டு ஒடுங்கிப்போயின. கந்தலாய், நெருடலாய் நாட்கள் நகர, நொந்துபோன தார் சாலைகளின் அடியிலிருந்து பெயர்ந்த மண் துகள்கள் (காற்று மழை உதவ) தப்பிச்சென்றது தந்த நம்பிக்கையில், நகரத்தின் பிடியிலிருந்து இந்த நொடியில் கூட திமிறி வெளியேறத்துடிக்கும் மண்தரை...  நகர எல்லை தாண்டியும் அதைத்துரத்தும் தார்ப்பூச்சு...  அதனின்றும் அவை தப்பியோடி தஞ்சம் புகும் இடமெல்லாம் மலர் சுமந்த மரங்கள்; இழுத்து அணைக்கும் வேர்களுடன

அருவி...லாட்டரி!

ஒரு கிராமம்.  300 வீடுகள்.  ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒரு லாட்டரிப்போட்டி. அந்தப்போட்டி நடத்தினால் அந்த வருடம் அமோக விளைச்சல் என்ற நம்பிக்கை. ஊரில் உள்ள அத்தனை குடும்பங்களின் பெயர்களையும் துண்டுச்சீட்டுகளில் எழுதி ஒரு பெட்டியிலிட்டு, கை விட்டு துழாவி ஒரு சீட்டு எடுப்பர். எந்தக்குடும்ப பெயர் வருகிறதோ அவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரின் வீட்டை சீட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பர். பின்னர் அந்த வீட்டிலுள்ள அனைவரும் பேர் குலுக்கி சீட்டெடுத்து ஒருவரை முடிவு செய்வர். அவரைத்தவிர மற்ற அனைவரும் தப்பித்த மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு கல் பொறுக்கி, தேர்ந்தெடுக்கப்பட்டவரை கல்லாலடித்து...கொலை செய்வர்.  1948 இல் ஷிர்லி ஜாக்சன் எழுதிய, உலகை உலுக்கிய சிறுகதை இது. லாட்டரி 'அடித்திருக்கிறார்' அருவி இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்! வாழ்த்துக்கள். இன்னும் துணிச்சலாக நீங்கள் கதை அமைத்திருக்கலாம். நம் ரசிகர்கள் நிச்சயம் இன்னும் கொண்டாடியிருப்பார்கள்...நாம் எல்லோரும் ஒருவிதத்தில் அந்த லாட்டரி கதையில் துண்டுச்சீட்டிலிருந்து தப்பியவர்கள்தானே ப்ரோ! நம் சமூகத்தி

வெள்ளக்காரன்டா, தமிழன்டா!

வெள்ளக்கார தமிழன்டா! Steve Jobs ஐயும் Bill Gates ஐயும் கொண்டாடும் இதே I.T உலகத்தில் தனக்கு கிடைத்த வானளவு புகழையும் பணத்தையும் தக்கவைக்க எடுத்த முயற்சி, 'சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொண்டதாக' தப்பிப்போய் வணிக உலகிற்கு ஒரு எச்சரிக்கை சொல்லாடலை மட்டுமே தடமாய் விட்டுவிட்டு மறைய நேர்ந்த விந்தை மனிதர் Adam Osbourne, a thinker way ahead of the famous duo I mentioned earlier. பர்சனல் கம்ப்யூட்டர், ஆபீசில் மட்டும் இருந்தால் போதாது. நாம் செல்லுமிடமெல்லாம் அதையும் எளிதாக எடுத்துச்செல்லமுயன்றால் எவ்வளவு பயனுள்ளதாயிருக்கும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு அவர் வடிவமைத்தது Osbourne 1 எனப்பெயரிடப்பட்ட உலகின் முதல் போர்டபிள் கம்ப்யூட்டர், ஆண்டு 1981!! ஒரு விமான இருக்கையின் கீழே சமர்த்தாய் பொருந்தும் அளவில் குறைந்த விலையில் வடிவமைத்ததோடு நில்லாமல், அதனை இயக்குவதற்கு வேண்டிய மென்பொருட்களையும் (software) bundle செய்து தந்தார்; எழுதுவதற்கு ஒரு word star, கணக்கு போடுவதற்கு ஒரு super calc என (Gates உம் Jobs உம் இதே உத்தியை பின்னாளில் கையாண்டது வரலாறு).  Father of Portable Comp

டோர்லி for Sale!

டோர்லி, விற்பனைக்கு! வார்தா புயல் அனேகருக்கு தெரிந்திருக்கும். வார்தா என்றொரு பகுதி இந்தியாவில் இருக்கிறது தெரியுமா? பசுமைப்புரட்சியின் தொடர்விளைவுகளால் விவசாயிகள் தற்கொலைகள் அதிகம் நிகழ்ந்த பகுதி என சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் டோர்லி என்ற கிராமத்தை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு வாழ்ந்த 270 குடும்பங்களுக்கு சொந்தமான 800 ஏக்கர் விளைநிலம். கால்நடைகள், வண்டி வாகனங்கள், மரங்கள். மற்றும் தலைக்கு முப்பதாயிரம் கடன் என சுமார் அறுபது லட்சம் கடன். ஆண்டு 2006. மழை பொய்த்து, கடன் பட்டு, அரசுகள் கைவிட்டு மேலும் கடன்பட்டு நொந்த மக்கள் கூடி முடிவெடுத்தது; 'வித்துரலாம்'!. ஊரிலுள்ள கால்நடைகள், மரங்கள் மற்றும் வண்டிகள் அனைத்திலும் 'For Sale' என்று பெயிண்ட்டில் எழுதி, 'அனைத்து நிலங்களும் வீடுகளும் விற்பனைக்கு' என விளம்பரங்கள் வைத்தும் யாரும் (ஊடகங்களும்தான்) கண்டுகொள்ளவில்லை. ஜகமும் அழியவில்லை... டோர்லி என்ன விராத், அனுஷ்கா போல நமது அடுத்த வேளை சோற்றை முடிவுசெய்யும் அளவுக்கு பெயர்பெற்ற கிராமமா என்ன?!  அரசு உதவி கிட்டவேயில்லை;

கர்மா!

இளைஞன்,  அரசருக்கெல்லாம் அரசராக வேண்டியவன், தந்தையின் காமத்திற்காக அரசை துறக்கிறான். தந்தையின் மனம் கவர்ந்த மீனவப்பெண்ணின் தகப்பனோ 'அது மட்டும் போதாது - என் மகளின் மைந்தர்கள் அரசாள வேண்டுமென்றால் தேவ விரதனுக்கு குழந்தைகளே பிறக்கக்கூடாது என்கிறான். 'குழந்தைகள்  என்ன,எனக்கு தாம்பத்யமே வேண்டாம், நான் பிரம்மச்சரியன் ஆனேன். பெண்களை தொடேன், என் தகப்பனாய் மதித்து அவன் வாரிசுகள் யார் அரியணையில் அமர்ந்தாலும் அவர்களை பணிவேன், காப்பேன்' என்று விரதம் பூணுகிறான். தேவர்களும் வாழ்த்துகின்றனர். தகப்பனின் மகனுக்கு திருமண வயது வந்ததும், அவன் விருப்பப்பட்ட பெண்களை, அவர்களுக்கு சுயம்வரம் நடந்து கொண்டிருக்கும்போதே கவர்ந்து வருகிறான்.  மூன்று பெண்கள், சகோதரிகள், அரச குமாரிகள். அம்பை, அம்பிகை, அம்பாலிகை. அம்பையின் மனம் கவர்ந்த அரசன் சால்வன் தேவ விரதனை மறித்து போரிடுகிறான். சால்வன் தோற்கிறான். தேவ விரதன் மூவரையும் அழைத்துச்செல்கிறான். வழியில் அம்பை தன் மனம் கவர்ந்த சால்வனை பற்றி அவனிடம் கூறி சால்வனையே மணக்க விரும்புவதாக கூறுகிறாள். மற்ற இருவரையும் தன் தம்பிக்கு மணமுடித்து வைத்த

அகிம்சை, ஆவ்டோமேடிக், அமைதி!

1947. அமைதியாய் அகிம்சையால்  நள்ளிரவில் சுதந்திர இந்தியா பிறந்த அதே ஆண்டில்தான் உலகின் வன்முறை முகத்தை மாற்றிய, மாற்றிக்கொண்டே இருக்கும் ஒற்றைக்கண்டுபிடிப்பும்  நிகழ்ந்தது.  அவனுக்கு அப்போது வயது 28. அவனது பதின்பருவ கனவெல்லாம் விவசாயிகளுக்கு பயன்தரும் கருவிகள் செய்வது மட்டுமே. ஒரு போர் அதை மாற்றியது. பசுமை பற்றியே சிந்தித்திருந்தவனை தற்காப்பு பற்றி சிந்திக்கவைத்தது.  தற்காப்புக்கும் வன்முறைக்கும் வித்தியாசம் நூலிழை மட்டுமே என்பதை மறந்து அவன் கண்டுபிடித்தது எளிமையான வடிவமைப்பில், மலிவாய், உச்ச தரத்துடன், எந்த தட்பவெப்ப நிலையிலும் எவரும் சுலபமாய் பயன்படுத்தக்கூடிய வகையில், பராமரிப்பும் சுலபமாய், மலிவாய்...மொத்தத்தில் 'மாருதி காரும் இந்தியாவும்' போல ஒரு தொழில்நுட்பக்கருவி.  சேற்றில் சில ஆண்டுகள் புதைந்திருந்தாலும் மீட்டெடுத்த அடுத்த நொடியிலேயே பயன்படுத்தலாம், தரம், முதல் தரம்! அதுவரையில் குட்டி குட்டியாக நிகழ்ந்துவந்த உலகின் கொந்தளிப்புகளை இந்தக்கண்டுபிடிப்பு போராட்டங்களாய் நீட்டி, போராய் 'சுருக்கும்' வலிமையை தந்தது. இந்தக்கருவியின் End User

ஒற்றை மனிதனுக்கு ஓராயிரம் கல்லறைகள்!

உலகின் ஒப்பற்ற வீரன் இறந்தபின்னும் இன்றுவரை அலைந்துகொண்டே இருக்கும் அவலம் தெரியுமா? 20 வயதில் தொடங்கிய போர் முழக்கம் 32 இல் அவன் இறக்கும்வரை சுருதி குறையவில்லை. சென்ற இடமெங்கும் வெற்றி, வெற்றியன்றி வேறில்லை. உலகெங்கும் தன் குடையின் கீழ் கொணர அவன் தொடங்கிய, தொடர்ந்த முடிவற்ற யுத்தம் அவனைத்தின்று எச்சமிட்டு, கடந்து, சுற்றிக்கொண்டிருக்கிறது இன்றளவும், அவன் சடலம் போலவே, அவன் மிச்சத்தைத்தேடியே! உலகாண்ட ஒற்றை மனிதனுக்கு ஆறடி நிலமும் நிரந்தரமில்லை. வழி வந்தவர்களின் வெற்றிக்கோப்பையாய் மாறிய அவனது மிச்சம், கடத்தப்பட்டு, பூஜிக்கப்பட்டு, களவாடப்பட்டு, மீண்டும் மீண்டும் இடம் மாற்றப்பட்டு,  கண்டெடுக்க இயலாததாகவே இன்று வரையில். ஆள் மாறாட்டம் கூட நிகழ்ந்திருக்கலாம். வேறு யார் பெயரிலோ இங்கிருக்கும் மிச்சம் அவரதுதான், இல்லையில்லை அங்கிருக்கும் மிச்சம்தான் உண்மையில் அவரது என பஞ்சாயத்துகளும் நடந்துகொண்டே இருக்கிறது. அப்படி என்னதான் பேராவல் நமக்கு அவனது மிச்சத்தின் மேல்? Closure...அவனது இன்றைய தங்குமிடம் கண்டுபிடித்து நினைவு மாளிகை ஒன்று எழுப்பி மரியாதை செலுத்துவோருக்கு வழிசெய்யத

நாலாம் தமிழ் - 5 - அலெக்சு, அவுட்சைட் த பாக்சு!

ஒரு பண்டைய நகர நுழைவாயிலில் யாராலும் அவிழ்க்க முடியாத ஒரு கயிற்று முடிச்சு காற்றில் ஆடிக்கொண்டே இருந்ததாம்.  எவன் அதை அவிழ்க்கிறானோ அவன் உலகாளுவான் என முடிச்சை இட்டவன் சொல்லிச்சென்றதை முயன்று தோற்றவர்களிடம் வேடிக்கை பார்ப்பவர்கள் சொல்வது வாடிக்கையாம். ஒரு நாள் ஒரு குருதை மேல ஒரு ராசா வந்தானாம். அவனுக்கு உலகத்தையே செயிக்கணும்னு பேராசையாம். காத்தில ஆடற கயித்து முடிச்ச பாத்தானாம், கதைய கேட்டானாம், யோசிச்சானாம், கத்தியால வகுந்துட்டு போய்ட்டே இருந்தானாம். 'ஏய், இது போங்காட்டம், யாருலே நீ?, சொல்லிட்டுப்போ'' ன்னு மக்கமாருங்க கொரலு குடுக்கவும், 'மை நேம் இஸ் அலெக்சு, ஐ திங்க்கு அவுட்சைட் த பாக்சு' ன்னு சொல்லிட்டுப்போனானாம். இந்த சேதி ஊரெல்லாம் பரவிச்சாம். ராசாவும் எதிரிங்களோட பயத்தில சுலபமா செயிச்சிக்கிட்டே வந்தானாம். பாரசீகத்தில இவன் வர்றதை பாத்ததுமே ஒரு ராசா பயந்து ஓடிட்டானாம். நம்ம ராசா நேர மாளிகைக்குள்ள நுழைஞ்சானாம். 'அம்மாடீ, நாம எல்லாரும் இன்னியோட முடிஞ்சம்' என அரச பெண்டு பிள்ளைகள்லாம் பதற, ஓடிப்போன ராசாவோட அம்மா மட்டும் பயப்படாம நம்ம ராசா

சிறகு வேண்டுதல்!

சிறு வண்ணப்பூச்சியின் சிறகசைப்பு தீர்மானிக்குமாம் புவியின் மறுகோடியில் பெய்யும் மழையை! நம் கண்ணுக்குத்தெரியாத சூட்சும இழைகளால் பின்னப்பட்டிருக்கும் இவ்வுலகின் இயக்க ஆற்றலை நம்மால் உணர மட்டுமே முடியும். அதுவும் நம் அறிவை சற்றே ஒதுக்கி வைக்கும் தருணங்களில் மட்டுமே! அறிவியலின் எல்லைக்கு வெளியேயும் முடிவற்ற இந்த இழைகள் நீண்டுகொண்டே செல்லும்.  அடி நுனி காண்பதல்ல நம் வாழ்வின் நோக்கம். நீக்கமற நிறைந்திருக்கும் வாழ்வின் கண்ணிகளை 'நோக்குதல் மறந்து நோக்குதலே' நம் படைப்பின் மூலம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு பறவையையும், விலங்கையும் நட்போடு கண் நோக்க நாமும் இந்தக்கண்ணியில் இணைவோம் என்பது ஒரு ஆப்பிரிக்க நம்பிக்கை. பார்வைகளின் சந்திப்புகள் கூடக்கூட கண்ணிகளின் அடர்த்தியும் கூடுமாம். இந்தக்கண்ணிகளை பிணைக்கும் 'கரங்களாய்' மரங்களும் தாவரங்களும் என்பது எனது நம்பிக்கை. மனிதர்களை சற்றே விடுத்து மரங்கள், மலர்கள்,  பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என சற்றே நோக்கித்தான் பாருங்களேன்! 

வருமா?

பருவமழை தொடர்ந்து பொய்த்துக்கொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களில் அவற்றின் அளவு குறையலாம், காணாமலே போகலாம். ரமணன் போன்றவர்களுக்கு 15 minutes of fame கிட்டாமல் போகலாம். டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மழை முன்கணிப்பின் அடிப்படையில் எந்த மாதத்தில் எந்த வகை நெல் பயிரிட வேண்டும், நெல்லுக்கு பதிலாய் சிறு தானியங்கள் பயிரிடலாமா என்பது போன்ற பயனுள்ள தகவல்களை யார் தருவார்? எப்போது? எவ்வழியே? சென்னை வெதர்மேன் தமிழ்நாடு வெதர்மேனானது பெரிய முன்னேற்றம். ஆனால் அவரால் மழைக்காக ஏங்கும் ஆறு கோடிப்பேருக்கு வருடம் முழுதும் தகவல் அளிக்க இயலாது. (இப்பவே அவரை வாதம் வம்புகளில் இழுக்கிறார்கள், இன்னும் பாப்புலரானால் வழக்கும் வரலாம்!). இயலும் நிலையில் உள்ள அரசுத்துறைக்கோ மக்களை உடனடியாக reach செய்வதில் கட்டுப்பாடுகள் / தடைகள் ஏராளம் (bureaucratic hurdles). தகவல் தொழில்நுட்பத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம்...நம் மக்களுக்கும் பயன்பட்டால் நலம்.  மண்ணை வளமாக்க வேண்டிய விவசாய பல்கலையோ மண்ணைக்கெடுக்கும் துரித சேவையில்... எனக்கு அவர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளில் சில, எடுத்துக்காட்டாக: அ

என் விழித்திரையில் - 2 : Il Postino - தபால்காரர்

இத்தாலியில் ஒரு சிறு தீவு. ஒரு மீனவன், தலைமுறையாய் மீனவனாய் இருப்பதன் துயரம் உணர்ந்தவன். வேறு வேலைக்காக ஏங்குபவன், சிறிது கம்யூனிச ஆர்வலன். உலகம் புகழும் ஒரு கவிஞர், பாப்லோ நெரூடா. சொந்த நாட்டில் அவரது அரசுக்கெதிரான நிலைப்பாட்டினால் நாடுகடத்தப்பட்டு இந்த இத்தாலிய சிறு தீவில் சில மாதங்கள் தங்க வருகிறார். இருவரையும் பிணைக்கிறது கவிஞரின் ரசிகர் கடிதங்கள். கூடை கூடையாக வரும் கடிதங்களை அவரிடம் கொண்டு சேர்க்க தபால் ஆபீசுக்கு ஆள் தேவைப்பட்டு நம் மீனவர் தற்காலிக தபால்காரர் ஆகிறார். ஏராளமான கடிதங்களை வாரத்தில் பலமுறை சைக்கிளில் கடல்மணல் சாலைகளில் சென்று சேர்க்கிறார்.  கவிஞருடன் சிற்றுரையாடல் நீள்கிறது. தபால்காரருக்கு கவிதைத்தீ பற்றிக்கொள்கிறது. கவிஞரின் கவிதையை தனதாய் பாவித்து காதலில் வென்று கணவனாகிறார். குழந்தை பிறப்பதற்கு முன்பே நெரூடா தாயகம் மகிழ்வுடன்  திரும்புகிறார்.   சென்று நெடுநாட்களுக்கு பிறகு நெரூடாவின் உடைமைகளை pack செய்து அனுப்பச்சொல்லி நெரூடா office இலிருந்து கடிதம், தபால்கார ரைப்பற்றிய விசாரிப்பு எதுவும் இன்றி. Pack செய்கையில் நெரூடாவின் டேப் ரெகார்டர்

மூன்று பிகா நிலத்தில் விதைத்தது...

துப்பாக்கிகளுக்கும் அடியாட்களுக்கும் மத்தியில் ராஜ்குமார் சுக்லா.  'இந்த வருஷ ஒப்பந்தப்படி உன்னோட நிலத்தில 3 பிகா கவுரி (indigo plant - source of blue dye) விளைச்சல் எங்க?' 'ஐயா, நாடே அறியும் கடும் பஞ்சமுன்னு. புல்லு கூட முளைக்கலய்யா' 'Nonsense, you must pay the assumed harvest price plus the forty odd taxes we imposed on farming. If you don't pay up, we shall confiscate all your lands and properties!' பாதிப்பு அவனுக்குமட்டுமில்லை, சம்ப்பரண் கிராம விவசாயிகள் அனைவருக்கும்தான். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான இயற்கை ஊதா சாயம் தரும் பயிரை அங்குள்ள விவசாயி ஒவ்வொருவரும் தம் நிலத்தில் கட்டாயமாக சுமார் இரண்டு ஏக்கரில் பயிரிட்டு (3 bigha / 3 kathiya) நிறுவனங்களின் ஏஜண்டுகளிடம் தரவேண்டும். விவசாயம் செய்ய ஏராளமான வரிகள். நீலச்சாய விலை குறைந்தால் விவசாய வரி கூடும்! கட்ட முடியாதோர் அடி, உதை இன்னபிற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு நிலம் பிடுங்கப்பட்டு துரத்தப்படுவர் / சிறையில் அடைக்கப்படுவர். நீலச்சாய விலை வெளிக்காரணங்களால் (external factors)

அபார வெண்மை, அய்யகோ!

கட்டுக்கடங்காத மகிழ்ச்சியில் கிராமம் நோக்கி பயணம். இந்த கிராமத்து விதை ஒண்ணு இந்தியாலயே பெரிய software company யில கிளை விரிக்கப்போறதுன்னா சும்மாவா பின்னே? இந்தியா தனது விவசாயம் சார்ந்த மக்களுக்காக முயற்சித்த பல பொருளாதாரக்கனவுகளை கைவிட்டு உலகமய சோதியில் கலந்த தருணத்தில்தான் எனது துள்ளல் பயணம். தாத்தா அந்த ஊரில் மதிப்புடன் வாழ்ந்தவர். அவரை அறிந்தவர்களை இன்றும் 'அவரைப்போல யாரு இருக்கா இப்ப' என nostalgiaவில் முழுகச்செய்பவர். அவர் வீட்டில் எந்நேரமும் மனிதர்கள், விலங்குகள் புழங்கிக்கொண்டிருந்த காலம். கிணற்றில் பத்தடியில் தண்ணீர் (சாமி சத்தியமா!). வீட்டுக்கொல்லையில் மா, பலா, வாழை, கொய்யா, தென்னை, முருங்கை, காய்கறிச்செடி கொடிகள் என கலந்து கட்டி...கிணற்று நீர் பயன்பாடு முடிந்ததும் கடமையாய் இவைகளின் வேர் தேடி ஓடும். ஊர் மக்களுக்கு, குறிப்பாக வேலைநாட்களுக்கு சிம்ம சொப்பனம். கரடுமுரடான பலாப்பழ மனிதர். இதயம் அவ்வளவு இனிமை, ஆனால் a feudalist, typical product of his times. அவருடன் சமத்துவ வாள் சுழட்டி அநேகமுறை சிறுவயதிலேயே மோதியதால் 'சின்ன அய்யா the rebel' என்ற முத்திர

முக்தி பவன்

கற்பனை செய்து பாருங்கள். ஒரு அருமையான நகரத்தில், உங்களை அறியாத, உங்களுக்குத்தெரியாத நகரத்தில், நீங்கள் தங்கும் ஹோட்டலுக்கு வாடகை கிடையாது, சாப்பாடு இலவசம், 'இருக்கும்வரை' தங்கலாம், காலி செய்யும் அவசியம் கிடையவே கிடையாது...சொர்க்கம் அல்லவா! காசியில் உயிர்விடும் ஆசையில் (straight ஆ முக்தி, no மறுபிறவி!) வயதானவர்கள் சிலர் பலர் சென்று, டிக்கட் கிடைக்கும்வரை இறைவழிபாட்டிலும் உடல் உபாதைகளிலும் காலத்தை தள்ள, கருணையோடிணைந்த ஈகை உள்ளம் கொண்ட சிலர் இவர்களுக்காக அங்கு இலவச விடுதிகள் நடத்துகிறார்கள். இவற்றுக்கு முக்தி பவன் என்று பெயர். வயதில் மூத்த முதியோருக்குமட்டுமே(!) அனுமதி. முடிந்தபின் கங்கையில் விட்டுவிடுவார்களாம்! காசியிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் நாங்களும் எங்கள் நகரத்தில் ஒரு முக்தி பவன் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை தற்செயலாய் கண்டுபிடித்தோம். இது நகரின் முதல் முக்தி பவனாகக்கூட இருக்கலாம்.,.. ஆனால் காசிக்கும் எங்களுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு்: 'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

எண்ணச்சிதறல் - 4 - அமானுஷ்யம்?!

சில நாட்களுக்கு முன் குளிரான ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஒரு லாங் ட்ரைவ் போகலாம் என திடீர் திட்டம் தீட்டி கிளம்பினோம்.  ஏகாந்தமான பசுமைப்பாதையில் நெடுந்தூரம் சென்றோம். ஒரு சிறிய ஊரைத்தாண்டும்போது அருகில் ஒரு தொன்மையான நதி ஓடிக்கொண்டிருப்பது அந்த நிமிடம் நினைவில் வர, வண்டியை நிறுத்தி விசாரித்தால், 'சற்றுத்தொலைவில்தான், ஆனால் வண்டிப்பாதை இல்லை, நடந்துதான் போகணும்' என அறிந்தோம்.  இறங்கி நடந்தோம்.  சில நிமிடங்களிலேயே நகர சூழல் தொலைந்து ஆளரவமற்ற பகுதியாக மாறிய தடத்தில் நடந்து, பழைய கால படித்துறை ஒன்றை அடைந்தோம். சமீமப்பெருமழையில் சிவப்பாய் கரைபுரண்டோடிய ஆற்றில் நீரின் ஓசை தவிர வேறு சத்தமில்லை. மனிதர் சுவடே இல்லை. தலைக்கு மேலே ஒற்றை மின் கம்பி, அருகில் ஆற்றில் நீர் உறிஞ்சும் பாசனக்குழாய் தவிர எங்கும் நிறைந்திருந்தது அமைதியும் பசுமையும் மட்டுமே. நகர இரைச்சல் பழகிய நமக்கு காடுகள் பிடித்தாலும் இந்த இடத்தின் அமைதி அடர்த்தி மிக்கதாக, அச்சமூட்டுவதாக இருந்தது. அந்த இடத்தின் அழகை பதிய எண்ணி அவசரமாய் சில படங்கள் எடுத்து விரைந்து திரும்பினோம்.  அடுத்த நாட்களில் அந்த பயணம் ம

நாலாம் தமிழ் - 4 - மாட்டிகினான் பாரதி!

பத்து பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி ஒரு தமிழ்ப்படத்தில் ஒரு satire காமெடிசீன்: ஒரு வான்னாபி (wannabe) அரசியல்வாதி தன் குடும்ப அருமை பெருமைகளை குப்பத்து ஆடியன்ஸுக்கு சொல்ல ஒரு இலங்கைத்தமிழப்புலவரை அழைத்துவருகிறார். . புலவர் பேச ஆரம்பிக்கிறார்: 'அனைவரும் கரகோஷங்களை எழுப்புங்கள்'. ஆடியன்ஸ் அம்புட்டுப்பேரும் அடிச்சிப்பிடிச்சி எந்திறிக்கிறாங்க. கூட்டம் கலையப்போகுதேனு சில அல்லக்கைகள் அவர்களை 'ஏய் குந்துபா, குந்துபா' எனத்தடுக்க குடிமகன் 1: 'அவர்தான் கட்வுள் வாள்த்து பாடச்சொல்லிகிறாரே அதான் எந்திரிச்சம்' குடிமகள் இரண்டு : 'எதுமே பிரிலைபா தமிள்ள பேசச்சொல்லுபா'! குழம்பிப்போன புலவர்: 'என்ன கதைக்கிறார்கள்?' குடிமகன்கள் கும்பலாக:'அடிங்க! ஏய் யாரப்பாத்து கலாய்க்றான்ற????' இன்னொரு குடிமகன்:'சார், நீ இன்னா சொல்றனு ஜனங்ளுக்கு பிரில சார். நீ பேசு சார், நா வோணா ட்ரான்ஸ்பர் பண்றன்' புலவர்:'சென்னைவாழ் மக்களுக்கு அன்பான வணங்கங்கள்' ட்ரான்ஸ்லேட்டர் வாலண்டியர்: 'மெட்ராஸ்ல வாள்ற மக்களுக்கு வணக்கங்றன்'