முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டோர்லி for Sale!


டோர்லி, விற்பனைக்கு!

வார்தா புயல் அனேகருக்கு தெரிந்திருக்கும். வார்தா என்றொரு பகுதி இந்தியாவில் இருக்கிறது தெரியுமா? பசுமைப்புரட்சியின் தொடர்விளைவுகளால் விவசாயிகள் தற்கொலைகள் அதிகம் நிகழ்ந்த பகுதி என சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

ஆனால் டோர்லி என்ற கிராமத்தை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அங்கு வாழ்ந்த 270 குடும்பங்களுக்கு சொந்தமான 800 ஏக்கர் விளைநிலம். கால்நடைகள், வண்டி வாகனங்கள், மரங்கள். மற்றும் தலைக்கு முப்பதாயிரம் கடன் என சுமார் அறுபது லட்சம் கடன். ஆண்டு 2006.

மழை பொய்த்து, கடன் பட்டு, அரசுகள் கைவிட்டு மேலும் கடன்பட்டு நொந்த மக்கள் கூடி முடிவெடுத்தது; 'வித்துரலாம்'!.

ஊரிலுள்ள கால்நடைகள், மரங்கள் மற்றும் வண்டிகள் அனைத்திலும் 'For Sale' என்று பெயிண்ட்டில் எழுதி, 'அனைத்து நிலங்களும் வீடுகளும் விற்பனைக்கு' என விளம்பரங்கள் வைத்தும் யாரும் (ஊடகங்களும்தான்) கண்டுகொள்ளவில்லை. ஜகமும் அழியவில்லை...

டோர்லி என்ன விராத், அனுஷ்கா போல நமது அடுத்த வேளை சோற்றை முடிவுசெய்யும் அளவுக்கு பெயர்பெற்ற கிராமமா என்ன?! 

அரசு உதவி கிட்டவேயில்லை; ஆனால் பசித்த வயிறின் குரல் மானுடத்திற்கு எப்போதும் கேட்குமாம். கேட்டது, ஆந்திராவில் தற்சார்பு விவசாயம் பயின்ற ஒரு குழுவுக்கு. 

அவர்களின் உதவிக்கரம் பற்றி டோர்லி வேதியியல் விவசாய, கடன் பிடிகளில் இருந்து தற்சார்பு விவசாயம் (self sustainable farming) மூலம் மீண்டு, கடன் முழுதும் பத்தே ஆண்டுகளில் அடைத்து நிமிர்ந்த கதையும் நமக்குத்தெரியாது...தோனிக்கு என்னாச்சின்னு கவலைப்படவே நேரமில்லையே ப்ரோ!

படிக்க மாணவர்கள் இன்றி பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு வந்தால் நல்லது. வாங்க ஆளில்லாமல் பல மூடப்பட்டாலும் நல்லது; கல்வித்தரமாவது மேம்படும். ஆனால் கிராமங்கள் விற்பனைக்கு வந்தால் என்ன ஆகும் தெரியுமா?

மலிவான விலைக்கு பெரு வணிகம் இவற்றை வாங்கலாம். சிறு சிறு கிராமங்களை இணைத்து விளை நிலங்களையும்  வசிப்பிடங்களையும் தனித்தனியே பிரித்து எல்லைக்கோடுகள் வகுத்து, பெரு விளைநிலங்களாக மாற்றலாம். பெருவிசை எந்திரங்கள் மற்றும் ஆலைகள் என வயல்வெளியின் தன்மை மாறலாம். கிராம நில முன்னாள் உடைமையாளர்கள் அதே நிலங்களில் பயிர் வளர்க்கும் தொழிலாளிகளாக ஆகலாம்...இதை எதிர்பார்த்தே அரசுகள் கிராமங்களை காப்பதில் ஆர்வமின்றி இருக்கலாம்...

என்னது, இதெல்லாம் ஏற்கனவே நடந்தாச்சா?! சிங்குர்னா சொன்னீங்க?!!!

நோ நோ! நான் சுட்டும் நிகழ்வில் உற்பத்திசெய்யப்படப்போவது என்னவோ உணவுப்பொருட்கள் மட்டுமே!

பின்குறிப்பு: ஒரு டன் விறகின் இன்றைய விலை 4000 ரூபாய். ஒரு டன் கரும்பின் ஆலை கொள்முதல் விலை 2400 ரூபாய் மட்டுமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்