முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாலாம் தமிழ் - 4 - மாட்டிகினான் பாரதி!


பத்து பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி ஒரு தமிழ்ப்படத்தில் ஒரு satire காமெடிசீன்:

ஒரு வான்னாபி (wannabe) அரசியல்வாதி தன் குடும்ப அருமை பெருமைகளை குப்பத்து ஆடியன்ஸுக்கு சொல்ல ஒரு இலங்கைத்தமிழப்புலவரை அழைத்துவருகிறார். .

புலவர் பேச ஆரம்பிக்கிறார்: 'அனைவரும் கரகோஷங்களை எழுப்புங்கள்'.

ஆடியன்ஸ் அம்புட்டுப்பேரும் அடிச்சிப்பிடிச்சி எந்திறிக்கிறாங்க. கூட்டம் கலையப்போகுதேனு சில அல்லக்கைகள் அவர்களை 'ஏய் குந்துபா, குந்துபா' எனத்தடுக்க

குடிமகன் 1: 'அவர்தான் கட்வுள் வாள்த்து பாடச்சொல்லிகிறாரே அதான் எந்திரிச்சம்'

குடிமகள் இரண்டு : 'எதுமே பிரிலைபா தமிள்ள பேசச்சொல்லுபா'!

குழம்பிப்போன புலவர்: 'என்ன கதைக்கிறார்கள்?'

குடிமகன்கள் கும்பலாக:'அடிங்க! ஏய் யாரப்பாத்து கலாய்க்றான்ற????'

இன்னொரு குடிமகன்:'சார், நீ இன்னா சொல்றனு ஜனங்ளுக்கு பிரில சார். நீ பேசு சார், நா வோணா ட்ரான்ஸ்பர் பண்றன்'

புலவர்:'சென்னைவாழ் மக்களுக்கு அன்பான வணங்கங்கள்'
ட்ரான்ஸ்லேட்டர் வாலண்டியர்: 'மெட்ராஸ்ல வாள்ற மக்களுக்கு வணக்கங்றன்'
புலவர்:'உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்'
ட்ரான்:'நம்மள மீட் பண்றது குஜாலா கீதுங்றான்'
புலவர்:'நான் சென்னைக்கு பலமுறை வருவது மனசுக்கு சந்தோஷமா இருக்கிறது'.
ட்ரான்: 'நான் மெட்ராஸ்க்கு தபா தபா வர்றது இன்ட்ரஸ்டா கீதுங்கறான்'
புலவர்:'நான் எதற்காகவே வருகிறேனென்றால்'
ட்ரான்:'நான் எதுக்கோஸ்ரம் மெட்ராஸ்க்கு வந்துறுக்கறன்னா'
புலவர்:'கந்தசாமிக்காக'
ட்ரான்:'கந்தசாமிக்கோஸ்ரம்'
புலவர்:'கந்தசாமி ஒரு நல்ல மனிதர்'
ட்ரான்:'கந்தசாமி ஒரு சோக்காளி'
புலவர்:'அவர் வலிமையானவர்'
ட்ரான்:'சீக்காளி இல்ல!'
புலவர்:'அவர் இதயம் ஒரு தங்கம்'
ட்ரான்:'ட்வென்டி பைவ் கேரட் கோல்டு'
புலவர்:'அதுமட்டுமல்ல'
ட்ரான்:'அதுக்காண்டியிமுல்ல'
புலவர்:'உங்களுக்கும்'
ட்ரான்:'உன்னாண்டியும்'
புலவர்:'எங்களுக்கும்'
ட்ரான்:'என்னாண்டியும்'
புலவர்:'ஒரு நல் உறவு வேண்டும்'
ட்ரான்:'ஒரு ப்ரென்ட்ஷிப் வோணும்'
புலவர்:'அதுமட்டுமல்ல'
ட்ரான்:'அதுக்காண்டியுமில்ல'
புலவர்:'காந்தி சொன்னதுபோல்'
ட்ரான்:'காந்தி சொன்னாமேரி'
பு:'காமராசர் சொன்னதுபோல்'
ட்:'காம்ராஜர் சொன்னாமேரி'
பு:'உடல் மண்ணுக்கு'
ட்:'ஆங்!'
பு:'உயிர் தமிழுக்கு'
ட்:'ஆங்...பாடி மண்ணுக்கு ஐட்டம் நாய்க்கருக்கு (i.e. for txlator himself, thinking உயிர் is wine!!!)
பு:'அதுமட்டுமல்ல'
ட்:'அது ஒண்டியில்ல'
பு:'நீங்கள் மட்டும்'
ட்:'நீங்க ஒண்டி'
பு:'வாழ்க்கையில் வெற்றிபெறவேண்டுமானால்'
ட்:'லைப்ல கெலிக்கனுன்னா'
பு:'அமைதியாக இருங்கள்'
ட்:'கம்முனு இர்கணும்'
பு:'யார்மீதும் கோபம் கொள்ளவேண்டாம்'
ட்:'யார்ட்டியம் காண்டாவ வோணாம்'
பு:'தெளிவாக இருக்கவேண்டும்'
ட்:'உஷாரா இர்கணும்'
பு:'விழிப்புடன் இருக்கவேண்டும்'
ட்:'வாட்சிங்கா இர்கணும்!'
பு:'பாரதி என்ன சொன்னார்?!'
ட்:'பாரதி ஊர் இன்னாபா?! யார்பா அது பார்தி?'
பு:'சொல்கிறேன் சகோதரா'
ட்:'சொல்றன் ப்ரதர்'
பு: 'அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே'
ட்:'மெர்சலில்லை மெர்சலில்லை மெர்சலென்பதில்லையே'
பு:'உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்'
ட்:'சார் இன்னுருதபா சொல்லு சார்'
பு:'உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்'
ட்:'சார் யார்க்கும் புரியாது கட் பண்ணு சார்'!!!

பாரதியை இன்றைய தலைமுறைக்கு கொண்டுசெல்ல இவ்வளவு முயற்சி வேண்டாம். எளிமைப்படுத்தினாலே போதும். நாலாம் தமிழும் காதலாகி கசிந்துருகும்.

உதாரணம்:

'வானமே இடிஞ்சி விழுந்தாலும், மொத்த உலகமும் எதிர்த்தாலும், பயமா? எனக்கா!'

பிறந்தநாள் மட்டும் கொண்டாடி பின் மறந்துவிடாமல் தமிழ் மூதறிஞர்கள் முயன்றால் தமிழ் வாழும், பாரதியும் வாழ்வான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்