முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அருவி...லாட்டரி!


ஒரு கிராமம். 

300 வீடுகள். 

ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒரு லாட்டரிப்போட்டி. அந்தப்போட்டி நடத்தினால் அந்த வருடம் அமோக விளைச்சல் என்ற நம்பிக்கை.

ஊரில் உள்ள அத்தனை குடும்பங்களின் பெயர்களையும் துண்டுச்சீட்டுகளில் எழுதி ஒரு பெட்டியிலிட்டு, கை விட்டு துழாவி ஒரு சீட்டு எடுப்பர். எந்தக்குடும்ப பெயர் வருகிறதோ அவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரின் வீட்டை சீட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பர். பின்னர் அந்த வீட்டிலுள்ள அனைவரும் பேர் குலுக்கி சீட்டெடுத்து ஒருவரை முடிவு செய்வர். அவரைத்தவிர மற்ற அனைவரும் தப்பித்த மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு கல் பொறுக்கி, தேர்ந்தெடுக்கப்பட்டவரை கல்லாலடித்து...கொலை செய்வர். 

1948 இல் ஷிர்லி ஜாக்சன் எழுதிய, உலகை உலுக்கிய சிறுகதை இது.


லாட்டரி 'அடித்திருக்கிறார்' அருவி இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்! வாழ்த்துக்கள்.

இன்னும் துணிச்சலாக நீங்கள் கதை அமைத்திருக்கலாம். நம் ரசிகர்கள் நிச்சயம் இன்னும் கொண்டாடியிருப்பார்கள்...நாம் எல்லோரும் ஒருவிதத்தில் அந்த லாட்டரி கதையில் துண்டுச்சீட்டிலிருந்து தப்பியவர்கள்தானே ப்ரோ!

நம் சமூகத்தின் தர்ம நியாயங்களை கேள்வி கேட்கும் துணிச்சலுக்கு 'வாவ்' சொல்லத்தோன்றும் அதே நேரத்தில் கதை நாயகியின் 'விபத்தை' அதே தர்ம நிநாயத்துக்குள் பொருத்தித்தான் கதை சொல்லியிருக்க வேண்டுமா என்ற கேள்வியும் தோன்றியது. அனுராக் காஷ்யப்பின் தேவ் டி (ஹிந்தி) யிலும் கதை நாயகி வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறாள், இன்னும் வலுவான, சமுதாய அளவுகோலுக்குள் அடங்காத காரணத்துடன். 

அருவி தேடுவது Closure, Redemption (in a round about way), ஒரு சுத்தமான முற்றுப்புள்ளி. இதுவும் ஒருவித சமுதாய அளவீடுதானே. தேவ் டி யில் இதையும் உடைத்திருக்கிறார் அனுராக்...அங்கு ஹிந்தி அருவி தேடுவது 'தொடர்ச்சி', continuity.

கதையை நகர்த்திச்செல்லும் துப்பாக்கியும் பண்ணையார் கதையும் வலிந்து திணிக்கப்பட்டது அவற்றின் தேவை வரும்போதே தெரிந்துவிடுகிறது. இந்த props இயல்பாக அமைந்திருந்தால் இன்னும் உயரம் தொட்டிருப்பீர்கள்...

அற்புதமான நடிப்பு அதிதி பாலன். தமிழ் சினிமா உங்களை விழுங்கிவிடாமல் காக்க லூமியர் சகோதரர்களை வேண்டிக்கொள்கிறேன்!

அருவி பட போஸ்டர்ஸ்...வாவ்!...வாவ்!

தமிழ் சினிமாவின் தரத்தை தூக்கிப்பிடிக்கும் அருவிக்கு வாழ்த்துக்கள். ஊடக விமரிசனங்களின் தரமும் அதுபோல உயர்ந்தால் நலம்! வாய்வழி பரவிய படத்தின் திறன் கேட்டு உந்தப்பட்டு படம் பார்க்க வந்தவர்கள்  படம் முடிந்து செல்கையில் 'நல்ல படமா இல்லையானு தெரியல. ஆனா இது மாதிரி படங்கள் அவசியம் வரணும்' என பேசிச்சென்றது மகிழ்வளித்தது.

நான்?...மீண்டுமொருமுறை தேவ் டி பார்க்கலாமென்று இருக்கிறேன்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்