முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குமார 'சம்பவம்'

குமார 'சம்பவம்' அல்லது "தண்ணி"யில் தள்ளாடிய மரம்! குமார் தண்ணி அடித்திருந்தான். மிக போதையில் இருந்தான். ஃபைனல் இயர் ஹாஸ்டலர்களுக்கு இது பழகிய காட்சி. ஆனால் அவர்கள் பழகாத திருப்பம் ஒன்று இந்த காட்சியை இப்போது யாருமே எதிர்பாரா விதத்தில் மாற்றப்போகிறது. குமாரின் ஊறுகாய் நண்பன், சற்று நிதானத்தில் இருந்தவன், மாடிப்படியில் குரல் கேட்டு எட்டிப்பார்க்கிறான். ஹாஸ்டல் வார்டனும் ப்ரின்சியும் இரட்டையர்போல் ஒன்றாய் கை வீசி கால் நகர்த்தி மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். 'டேய் கொமாரு! ஓடுடாஆஆஆஆஆஆ' என்ற அலறலோடு அவன் மாடியிலிருந்து கீழே குதிக்க, கீழே கிரிக்கெட் ஆட்டம் தடைபட்டு கவனம் மாடியை நோக்கி திரும்ப, குமாரு குத்துமதிப்பாய் காற்றில் கைகளால் துழாவி எதையோ பற்றிக்கொண்டிழுப்பதாய் நினைத்து எழ முயற்சிக்க, வார்டனும் ப்ரின்சியும் மாடியில் நுழைய... போதையில் மூழ்கிய குமாரின் மூளையில் எங்கோ சிவப்பு விளக்கு சுழல, அபாயம் என்ற ஒற்றை உணர்வு உந்தித்தள்ள, தன் சக்தியை ஒன்றுதிரட்டி மாடிச்சுவரின் மேல் காலூன்றி ஏறி... அருகிலிருந்த

லாபமு லேது, சௌக்யமு ஆஹா!

லாபத்திற்கு ஈடான தமிழ் சொல் கேட்டிருந்தேன், நேற்று. குவிந்த விடைகள் எதுவும் ஈடான சொல்லை தரவில்லை. ஆனால் பங்கேற்பு அபாரம்! ஈடு, மிகை ஈடு, உபரி, வரசல்(!), வரும்படி, கந்தாயம், ஆதாயம், பலன்... இவை எதுவும் profit / லாபத்திற்கு மாற்று சொற்கள் அல்ல. எவ்வளவு முயன்றாலும் தமிழில் லாபத்திற்கு இணையான சொல் கிடையாது!!!!!!! ஏன் தெரியுமா?  நம் 'முன் தோன்றி மூத்த குடி'க்கு லாபம் என்ற கோட்பாடே இல்லை. இல்லாத ஒன்றுக்கு சொல் மட்டும் எப்படி இருந்திருக்கமுடியும்? சுருக்கமாய் விளக்குகிறேன்(!). தமிழர் வாழ்வியல், தேவைக்கான உற்பத்தி என்பதாகவே இருந்தது. உற்பத்தி செய்யத்தேவையான உதவிகள் (services / சேவை என்ற மொழிபெயர்ப்பெல்லாம் உதவி என்ற சொல்லின் நிழலைக்கூட தொட முடியாது!) வழங்குவோர், அதற்கு ஈடாக (மாற்றாக) விளைச்சலில் ஒரு பகுதியை மகிழ்வோடு பெற்றனர்.  உருக்கு கருவிகள், வேளாண்மைக்காக தேவைப்படும்போது கொல்லர் தனக்கு கிடைத்த விளைபொருளை உருக்குக்கு ஈடாக தந்து வாங்கி தளவாடம் செய்வார். தளவாடத்தை வேளாளரிடம் தந்து பின்னாளில் விளைபொருளாய் பெறுவார். விளைபொருள் என்பது அறுவடைக்கப்பு

முக்கிய நபர் கைது! உதவ நீங்க ரெடியா?!

தலைப்புச்செய்தி : சென்னையில் முக்கிய நபர் கைது! "அடப்பாவிகளா, இதுக்கெல்லாமா கைது பண்ணுவானுங்க?!" என்று நண்பன் வெள்ளந்தியாக கேட்டபோது சிரிப்பு வந்தது; தமிழ் தேய்ந்தாலும் நகைச்சுவை வளர்க்கத்தானே என்று மனதை தேற்றிக்கொண்டு, தமிழில் எப்படி இதற்கான சொல் இல்லாமல் இருக்கும் என சிந்திக்கத்தொடங்கினேன். சொற்களும் வரிசையாக நினைவில் வரத்தொடங்கின... முக்கியத்திலிருந்து முக்குவோமே! பெரிய மனிதர், முதன்மையானவர், மதிப்பு மிகுந்தவர் போன்ற சொற்கள் முக்கியவரை சிறப்பு செய்வன, தமிழில் :-) யோசனை - சிந்தனை பரவாயில்லை - அதனாலென்ன சி்ரமம் - கடினம் சுலபம் - எளிது சரி. இன்னொரு முக்கிய சொல்லுக்கு வருவோம்: லாபம் - தமிழ்க்கம்பு சுற்றி இந்த சொல்லை உரியடி அடித்து "மகிழ்மதி்யை" வெல்லப்போகும் வாசகர் யார்? யார்? யார்? ஹலோ!, ஆதாயம் என்பது சரியான சொல் அல்ல. அது benefit ஐ குறிக்கும், profit ஐ அல்ல :-) ஹலோ!! மகி்ழ்மதி பொண்ணு பேரோ ரியல் எஸ்டேட்டோ இல்லை. மகிழ்வான மூளை!!

மூன்றாம் தலைமுறை ஐ.டி சிகாமணி!

இந்தியாவில் மென்பொருள் நிறுவனங்கள் 1970களிலேயே இருந்தன. "இருந்தன", அவ்வளவே. 1991 இல் பொருளாதார தாராளமயமாக்கம் தொடங்கியதும் சூடு பிடித்த இவர்களது மார்க்கெட், இப்பொழுதுதான் சூடு குறையத்தொடங்கியுள்ளது. இந்த 1991-2018 காலத்தை (நான் ஒரு ஐ.டி நிபுணன், Inside man என்ற தகுதிகளில்) மூன்று தலைமுறைகளாக பிரித்து ஒரு குறுந்தொடராக உங்களுடன் பகிர்கிறேன். படித்து ரசிக்கவும், சிந்திக்கவும் :-) 1990-1999 முதலாம் தலைமுறை ஐ.டி சிகாமணி.  விசுவாசி. 1990களில் வசதியான பிள்ளைகளெல்லாம் கல்லூரியில் படிக்க அமெரிக்கா ஓடியபின் எஞ்சிய நடுத்தட்டு, அடித்தட்டு பிள்ளைகளின் பொருளாதார விடுதலைக்கும் வாழ்க்கை கனவுகளுக்கும் வலுவான தளம் அமைத்துத்தந்தது ஐ.டி துறை.  இந்திய மூளை, இந்திய உழைப்பு, இந்தியாவில். பயனாளர் அதை விற்பது உலகம் முழுதும் பன்னாட்டு கரன்சிகளில்; கொள்ளை லாபம்! செல்வா, என் சக ஐ.டி ஊழியன், அறை நண்பன். இந்தியன் திரைப்பட வடிவேலு போல இவனது வீக்னெஸ் இவனது இடுப்புப்பகுதி். சின்னதாய் இரு விரல் கொண்டு விலாவில் மெல்ல குத்தினால் கூச்சம் தாளாமல், தப்பிக்க தன் சொத்தையே எழுதித்தரு

ஆடையில்லாத தீபாவளி!

ஆடையில்லா தீபாவளி! ஒரு மாதம் முன்னையே குதூகலம். பள்ளியிலிருந்து வந்தவுடன் அப்பாவின் கை பிடித்து துள்ளல் நடையில் கடைக்கு போய் மொரமொரப்பான வாசனையான துணிகளை ஆசையுடன் தடவிப்பார்த்து நீலமும் வெள்ளையும் ஊடாடும் (அதாங்க check டிசைனு!) சட்டைத்துணியும் கரும்பச்சை அரைக்கால் டவுசர் துணியும் அளந்து கிழிச்சாச்சு. டெய்லர் கடைக்கு போகையில் துள்ளல் அதிகமாச்சு. மனக்கண்ணாடியில் விதம் விதமாய் போஸ் கொடுத்துக்கொண்டே நடந்தேன். 'கொஞ்சம் லூசா தைங்க டெய்லரே, வளர்ற பையன்' அப்பா வாஞ்சையோடு சொல்ல டெய்லர் அளவெடுத்தார். அதென்னவோ தெரியாது, இடுப்பை சுத்தி அளவெடுக்கையில் கிச்சு கிச்சு மூட்டின மாதிரி ஒரு நெளி :-) கிளம்புகையில் முத்தாய்ப்பாய் அப்பா சொன்னார், 'இடுப்பும் கொஞ்சம் லூசா, நாடா (suspender) வச்சி தச்சிருங்க, கழலாம தோள்பட்டைல நிக்கும்'. மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம், ரயில்வெடி, பாம்பு மாத்திரை, ரோல் கேப்பு, துப்பாக்கி, ராக்கெட் இத்யாதி, ஒரு நீநீநீநீள ஊதுபத்தி :-) பையை ஆனந்தமாய் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தால் அடுப்படியிலிருந்து தேன்குழல் வாசம்!  பண்டிக

ஒவ்வொரு அரிசியிலும் ஒரு பெயர்...

ஒவ்வொரு விதையிலும் ஒரு பெயர்... நாம் உண்ணும் ஒவ்வொரு தானியத்திலும் பெயர் ஒன்று எழுதப்பட்டிருக்கிறதாம். அது கால காலமாக நிகழ்ந்துவரும் பேரற்புதமாம். ஒரு முறை கூட இதில் பிழை ஏற்பட்டதில்லையாம். அது உண்பவர் பெயரில்லையாம், விதைத்தவர் பெயராம். மனிதர் விதைத்தது போல பலமடங்கு ஏனைய உயிர்கள் விதைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. நாம்தான் அவற்றை உண்பதை குறைத்துக்கொண்டோம் / நிறுத்திவிட்டோம். விதை சுமக்கும்/பரப்பும் பறவைகளும் ஏனைய உயிர்களும் மனிதர்களை சந்திக்க நேரும்போதெல்லாம் கேட்பது ஒற்றைக்கேள்வி மட்டும்தானாம்; 'ஏனிப்படி ஆச்சி??'. தானாய் கிடைத்த உணவை உண்டு மகிழ்வாய் வாழும் பல்லுயிர்க்கிடையில் 'இதைத்தான் உண்பேன், நோயில் வீழ்வேன்' என ஒற்றைக்கூட்டம் மட்டும் தடம் மாறிப்போன புள்ளியில் தொடங்கிய அவற்றின் ஒற்றைக்கேள்வி இன்று வரை இக்கூட்டத்தின் 700 கோடி காதுகளில் விழவே இல்லையாம். விதை விதைப்பதோடு சேர்த்து இந்த கேள்வியை விதைப்பதையும் கடமையாக கொண்டிருக்கும் இவ்வுயிரனைத்தையும் 'எங்க ஏரியா! உள்ளே வராதே!!' என துரத்தும் மனிதக்கூட்டத்தை இனி எப்படி அணுகுவத

(நமக்கு) எட்டாத ஸ்வரம்!

வாகனத்தில் தொலைதூரப்பயணம் (long drive) செல்லும்போதெல்லாம் பயண தூரம் முடிவதற்குள் குளிரூட்டப்பட்ட வாகனத்துக்குள்கூட என் கண்ணோரம் சில கண்ணீர் துளிகள் கசியும்... " ஏழு ஸ்வரங்களுக்குள் அடங்குவதே இசை. எட்டாவது ஸ்வரம் என்று ஒன்றே கிடையாது; வாய்ப்பே இல்லை. இசையமைப்பாளர்கள் எல்லோரும் இந்த ஏழு ஸ்வரங்களை மாற்றி மாற்றிப்போட்டுதான் காலம் தள்ளுகிறார்கள். இசைக்கு ஏகபோக உரிமை என்று யாரும் கிடையாது. உலகில் மிகப்பல இசை மேதைகள் இருந்திருக்கிறார்கள். பெயர்கள் சொல்ல வாழ்நாள் போதாது. இசை தருபவன், தந்தவுடன் அடுத்த வேலைக்கு நகர்கிறான். அது கேட்பவர் மனதில் எழுப்பும் அதிர்வுகளுக்கும் கேட்பவர் மனக்கண்ணில் விரிக்கும் காட்சிகளுக்கும் இசை தந்தவன் பொறுப்பல்ல; கேட்பவரே பொறுப்பு. இசைக்கடலில் எழும் அலைகளில் திரளும் நுரைகளில் ஒரு குமிழளவுகூட நான் சாதிக்கவில்லை. " இவை அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு இசைமேதை சொன்னது; ஒரு முறை கூட நிலை பிறழாமல். இன்னும் ஒருபடி மேலே போய் அவர் சொன்னது 'எனக்கு இசை தெரியாது'! 'திமிர பாத்தியா? பெரிய இவன்னு நினப்பு. கர்வி! அகங்காரன்

அள்ளித்தந்த பூமி... / L.i.v.i.n.g P.l.a.n.e.t

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர் வழியில்,                 நனைந்த பயிரை கண்டபோதெல்லாம் நானும் மழையானேன்!

சட்டத்தின்மீது சத்தியமாய், ஐயப்பா!

சத்தியமேவ ஜெயதே! இது சத்தியம்! "சட்டம் தன் கடமையை செய்யும்." "சட்டத்திற்கு கண்ணில்லை." "சட்டத்தின்முன் அனைவரும் சமம்." நம் சமுதாயத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நம் சட்டங்கள் உதவுகிறதா? நாம் உருவாக்கிய சட்டங்களில் ஒன்றையாவது இன்றுவரை நாம் உடைக்காமல் இருந்திருக்கிறோமா? அப்படியென்றால் சட்டங்கள் உடைப்பதற்காகவேதானா? உடைத்ததை ஒட்டவைக்க, ஓட்டையை அடைக்க என சட்ட திருத்தங்கள் கொண்டுவருவது நமக்கு முடிவற்ற பணியானது எதனால்? சட்டத்தினால் மக்களை ஒரு கடவுளை மட்டும் வணங்கவைக்கமுடியுமா? அல்லது ஒரு கடவுளை வணங்குவதை தடை செய்வதோ, வழக்கத்தில் இருக்கும் தடைகளை (கட்டுப்பாடுகளை) உடைக்கத்தான் முடியுமா? மாற்றங்கள் நம் மனங்களிலிருந்தே வருபவை. மனங்களில் இருந்து மட்டுமே வருபவை. நம் சமுதாயத்தில் உடைக்க முடியாத சட்டங்கள் முன்னொரு நாளில் இருந்தன. உடைத்தவர்களை, முயல்பவர்களை உடனே  வெளித்துப்பி, வாழ்வை காத்துநின்ற சட்டங்கள் அவை. நம் தினவாழ்வில் இன்றளவும்கூட நாம் அதில் சிலவற்றை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். நமக்கு பிடிக்காததை முனைந்து செய்

தூர கிரக கனவுகள்... / Dreams from a distant galaxy

என் கதவுகளுக்கு வெளியே... " அழகான அழகாம் வண்ண வண்ண மலர்களாம் வான்முட்டும் மரங்களாம் தங்க மணல் துகள்களாம் பாதம் வருடும் மீன்களாம் மெத்துமெத்து புல்வெளியாம் அதிசயமான உயிரினங்களாம் முகத்தில் மோதுகிற காத்தாம் சில்வண்டு இறைச்சலாம் வானெங்கும் ஜொலிக்குமாம் நட்சத்திரங்கள் பறக்குமாம் குளிர் காதை வருடுமாம் மினுக்கு மினுக்கு பூச்சியாம் நீருள் ஒளிரும் பாம்பாம் நிறநிறமாய் வண்ணத்திகளாம் பழம் பழமாய் தொங்குமாம் சுற்றுலா கூட்டிப்போறாங்க,  நானும் போகட்டா? " எனக்கேட்டது பால் வெளியில்  தூரக்கிரக குழந்தையல்ல, அடுக்குமாடி அறைக்குள்  பக்குவமாய் 'பதுக்கப்பட்டு'  வளரும் நம்  குழந்தைகளுள் ஒன்றுதான்...

மரபணு மாறிப்போன குரங்கின் பழைய உலகில் சுவர்களே இல்லை...

பழைய உலகில் சுவர்களில்லை (அல்லது) மரபணு மாற்றிக்கொண்ட குரங்கு! சுவரை வைத்துதான் சித்திரம் என்ற முதுமொழி நமக்கு நன்கு தெரிந்த ஒன்றுதான்.  பெருஞ்சுவர்கள் எழுப்பி அவற்றின்மீது பெரிய சித்திரங்களை வரையும் முனைப்பில் நாம். பழைய உலகில் சுவர்கள் இல்லை. இருந்தவை எவை என இருந்தவர் யாரும் அறிய முற்படவும் இல்லை. தலைக்குமேல் கூரை, அதை தாங்க சுவர் என நாம் தொடங்கியபோது, மரங்களிலிருந்து இறங்கியிருந்தோம். என் சுவர் உனதல்ல, சுவர் காக்கும் நிலப்பரப்பும் உனதல்ல என விதிகள் 'வகுத்தோம்'. வகுபட்டது வாழ்வு. நம்மை எல்லைகள் பிரித்தன, எல்லைகள் சேர்த்தன. எல்லைக்குள் வாழ்வதற்கும் எல்லை வகுத்தோம், 'சரி' 'தவறு' ன்று. வகுத்ததை காக்க புதிய விதிகள் சமைத்தோம்.  சமைத்தது எதுவும் நொதிக்கும்தானே. வீணாகிப்போன விதிகளை அகற்றி புதிய விதிகள் சமைக்கும் வாய்ப்புகளை மட்டும் புறம்தள்ளி, "நொதித்ததை காக்க" புதிய புதிய விதிகள், முயற்சிகள் என நம் வாழ்வியலை அனுதினமும் மாற்றிக்கொண்டே போகும் நமக்கு மரபணு என்று ஏதாவது மிச்சமிருந்தால் அது கிளைக்கு கிளை தாவ உதவும் நம் வால

ஆயுதம் செய்வோம், பூஜையும் செய்வோம்...அப்புறம்?

ஆயத்த பூஜை. அகிம்சையை முன்னெடுத்த நாட்டில் மட்டுமே ஆயுதங்களுக்கும் பூஜை உண்டு. அரிவாள், கத்தி, கடப்பாறை, உளி, துருப்புளி என தொடங்கியது இன்று எல்லா வகையான எந்திரங்களையும் உள்ளடக்கிக்கொண்டு பொரிகடலை வாழைத்தோரணம் இத்யாதி என மகிழ்வான பெருவிழா ஆகிப்போனது. நாம் பூஜை செய்யும் ஆயுதங்கள் எல்லாமே அழிக்கவல்லவை என்றாலும் பெரும்பாலும் காக்கும் தொழிலுக்கு மட்டுமே இன்றும் பயன்படுத்துகிறோம்... காக்கும் தொழிலுக்கு என நியாயப்படுத்தி நீள் துப்பாக்கி (கலாஷ்னிகோவ் - ஏகே47) செய்த நாட்டில் நேற்று ஒரு பதின்ம வயது சிறுவன், தன் பள்ளி சகாக்கள் பதினேழு பேரை காக்கை குருவி போல சுட்டிருக்கிறான். பழுதுபார்க்கும் அவசியமே இல்லாத அளவுக்கு உயர்தரத்தில், மலிவு விலையில் உற்பத்தி செய்த அத்தகைய ஆயுதங்கள் உயிர்களையும் மலிவாகவே பறிக்கின்றன. ஆயுதங்கள் எப்போதும் ஆயத்த நிலையில் இருக்கவேண்டுமென நினைவுபடுத்த ஒரு நாள் ஒதுக்கி அன்றேனும் பழுதுபார், கொண்டாடு என வாழ்வியலோடு அதை இணைத்த நம் நாட்டிலிருந்து யோகா போல் இதுவும் ஏற்றுமதியாகும் நாள் தொலைவில் இல்லை; அவசியமும் கூட. அதுவரை நாம் என்ன செய்யலாம்? முண்டா

ஈரம் விழுந்தாலே... / Rain Dance in the City

Urban Nirvana! All these folks live very close by; good neighbours actually :-)

மழைக்கும் வெயிலுக்கும் கல்யாணமாம்!

 ண மழைக்கூத்து சிற்றிடைவெளி (ஹலோ, இடுப்பு இல்லைங்க!!) எடுக்கையில் ஒளிக்கூத்து தொடங்க...காணுமிடமெல்லாம் நனைந்த 'வண்ணம்'! நகர வாழ்வில் இதைவிட அற்புதமான 'புத்தம்புது காலை' வாய்க்க என்ன தவம் செய்தனை! ஜனனம் மரணம் அறியா மழைத்துளியாவோமா!!!

பிரதமர் கையால் பட்டயம் பெறுவது உங்கள்அபிமான...

ஸ்வச் பாரத் ஜெய ஹோ! பேண்டு வாத்தியங்கள் முழங்க, ராணுவ சீருடை வீரர்கள் அணிவகுத்து புடைசூழ நான் நடக்க, மேடையின் மய்யத்தில் மாண்புமிகு பாரதப்பிரதமர் கையில் தூய்மைக்காவலர்_பட்டயத்தோடு காத்திருக்க, உடலெங்கும் பட்டுப்பூச்சி பறக்கும் உணர்வோடு நான் முன்னேறுகிறேன்... திருவிழாக்கூட்டம் போல ஒரு கூட்டம் விடிஞ்சும் விடியாம பைக்க முடுக்கி எங்க வீட்டுக்கு பக்கத்தில நிறுத்திச்சா, தூக்கம் கலைந்து எழுந்தேன்! "ஐயோ! இவனுகளா!" என மூளை சட்டென விழிக்க, மாடிக்கு தாவி ஓடினேன். வீட்டின் பின்புறம் ஒரு ஓப்பன் க்ரவுண்டு, புல்லு புதர் மண்டி. அங்கே பாத்தா, வழக்கம்போல கிரிக்கெட் டீம் பொசிசன் எடுக்கிற மாதிரியே ஒரு ப்ளேயர், ஒரு விக்கட் கீப்பர், நாலு ஸ்லிப், ஒரு ஸ்கொயர் லெக், மிட் விக்கட், டீப் மிட் விக்கட் என வியூகம் வகுத்து 'குந்தி'யிருக்க, ப்ளேயர்க்கு 22 அடி தூரத்துல பௌலரும் அவருக்கு பீச்சாங்கையாண்ட அம்ப்பயரும் 'குந்தி'கினு கீறாங்கோ!!!! "கண்ணுகளா, இது பெருநகரம். அக்கம்பக்கமெல்லாம் வீடாய்டிச்சுப்பா, மாடில பெண்டு பிள்ளைகள் நடமாடற நேரம், இப்படி குந்திகினா நியாயமா?&q

செய்தித்தாள் படித்தீர்களா?

போர்க்களத்தில் வெட்டுப்பட்டு உயிர் தப்பி யுத்த செய்தி சுமந்து விரைந்து ஊர் திரும்புகிறான் வீரன். அவனை எதிர்பார்த்து காத்திருந்த மன்னன், வாயிலில் தடுமாறி விழுந்த வீரனை ஓடிச்சென்று வாரியெடுத்து கைகளில் ஏந்தி அரண்மனைக்குள் கொண்டுசென்று அடுக்களை டைனிங் டேபிளில் அமர்ந்து எதிரில் பரப்பி கையில் காபி கோப்பையுடன் படிக்க ஆரம்பித்தானாம், வீரனது உடலில் ஒட்டியிருந்த புழுதித்துகள்களை! தினம் தினம் காலையில் நம் வீட்டு வாசலில் வந்து விழுவது ஏராளமான வடு சுமந்த, என்றோ வெட்டுப்பட்ட மரமொன்றின் வேராகவோ, கிளையாகவோ, தண்டாகவோ இருக்கும்...  அது அனுதினமும் சொல்ல முயலும் செய்தியை அதன் வெளிப்புறத்தில் ஒட்டியிருக்கும் உப்புப்பெறாத செய்திகளில் மூழ்கி நாம் கவனிக்க மறந்துபோகலாம்... இதென்ன கிறுக்குத்தனமான பதிவு என நீங்கள் தலையைக்கூட சொறியலாம்... வெட்டுண்ட மரத்தின் இதழ்கள் உங்கள் வீட்டில் தன் மக்களை கதவாகவோ / நிலையாகவோ / ஜன்னலாகவோ / டைனிங் டேபிளாகவோ கண்டு அவற்றோடு தன் காட்டின் கதைபேசி சலசலத்துக்கொண்டிருந்தால் என்ன போச்சு இப்போ? நீங்கள் செய்தி வாசிப்பதை நிறுத்தவேண்டாம்!

உலகெங்கும் உள்ள கோடானு கோடி ரசிகர்களின் மனத்திரையில் 25 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரே படம்!

உலகெங்கும் உள்ள கோடானு கோடி ரசிகர்களின் மனத்திரையில் 25 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரே படம்! இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்... நினைவு தெரிந்த நாள் முதலே சினிமா என்னை வசீகரித்தது. கிருஸ்தவ பள்ளியில் மதிய நேரம் வெள்ளித்திரை கட்டி ஸ்வாதி நட்சத்திரம் காட்டினார்கள். இன்னொருமுறை முத்துராமன், 'ஆனந்தமானது, அற்புதமானது, நானந்த மருந்தை கண்டுகொண்டேன்' என்றார். பின்னொரு நாளில், 'மான்களும் சொந்தம் தேடையில் இந்த மானிடன் செய்த பாவம் என்னவோ!' என சிவாஜி ஏசுவிடம் மன்றாடினார். சற்றே பெரிய பையனானபின் சிவாஜி தருமியைப்பார்த்து உறுமியது முதல் 'தூங்காத கண்ணென்று ஒன்று' வரை தொடர்ந்து பின் பாலசந்தர், நாகேஷ், ஜெய்சங்கர், கர்ணன் என வளர்ந்தது (கர்ணன், ஹாலிவுட் கௌபாய்சையே மெரட்டியவர், கேமரா ஆங்கிளிலும் ஹாலிவுட்டை மிஞ்சிய க்ளோஸ் அப்கள், அது ஹீரோ முகமாகவும் இருக்கலாம், ஹீரோயின் "     " ஆகவும் இருக்கலாம்! நாயகிகளை 'தாராளமாய்' காட்ட அவரது சென்சார் போர்டு மெம்பர் பதவி உதவிற்று. வீட்டில் பொய் சொல்லி இவரது ஜம்பு ப

#MeToo

எனது கூக்குரல் கேட்கிறதா? (இப்போது ஊடகங்களில் பற்றியெரியும் #MeToo பெண்கள் மீதான வன்முறைக்கெதிராக. எனது பதிவு இயற்கையின் கூக்குரல், நம் அனைவரது சீண்டல் தாளமுடியாமல்...) எனது கூக்குரல் கேட்கிறதா?? ஒன்றும் செய்யாமலிருப்பது இனியும் சாத்தியமல்ல... ஏதாவது செய்வோம்; மன்னிப்பு மட்டும் போதாது... 1.5 டிகிரி டெம்ப்பரேச்சர் உயர்வு இலக்கு - போதவே போதாது! -+-+-+- "We all met and agreed that our uncontrolled plunder, harassment and exploitation of our earth are highly unpardonable. So, we set a limit: From 2022, we all will do ALL those acts ONLY up to 1.5 degree Celsius more. Till 2022... Is that a question? Oh ok, You naive earthling! You think we would become wise overnight??  We need TIME to control our ways and means!!! We are realistic you Moron!!!!" ... What is needed is a COMPLETE RETHINK; not just mitigation. Are we listening?