முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் கையால் பட்டயம் பெறுவது உங்கள்அபிமான...


ஸ்வச் பாரத் ஜெய ஹோ!

பேண்டு வாத்தியங்கள் முழங்க, ராணுவ சீருடை வீரர்கள் அணிவகுத்து புடைசூழ நான் நடக்க, மேடையின் மய்யத்தில் மாண்புமிகு பாரதப்பிரதமர் கையில் தூய்மைக்காவலர்_பட்டயத்தோடு காத்திருக்க, உடலெங்கும் பட்டுப்பூச்சி பறக்கும் உணர்வோடு நான் முன்னேறுகிறேன்...

திருவிழாக்கூட்டம் போல ஒரு கூட்டம் விடிஞ்சும் விடியாம பைக்க முடுக்கி எங்க வீட்டுக்கு பக்கத்தில நிறுத்திச்சா, தூக்கம் கலைந்து எழுந்தேன்!

"ஐயோ! இவனுகளா!" என மூளை சட்டென விழிக்க, மாடிக்கு தாவி ஓடினேன்.

வீட்டின் பின்புறம் ஒரு ஓப்பன் க்ரவுண்டு, புல்லு புதர் மண்டி. அங்கே பாத்தா, வழக்கம்போல கிரிக்கெட் டீம் பொசிசன் எடுக்கிற மாதிரியே ஒரு ப்ளேயர், ஒரு விக்கட் கீப்பர், நாலு ஸ்லிப், ஒரு ஸ்கொயர் லெக், மிட் விக்கட், டீப் மிட் விக்கட் என வியூகம் வகுத்து 'குந்தி'யிருக்க, ப்ளேயர்க்கு 22 அடி தூரத்துல பௌலரும் அவருக்கு பீச்சாங்கையாண்ட அம்ப்பயரும் 'குந்தி'கினு கீறாங்கோ!!!!

"கண்ணுகளா, இது பெருநகரம். அக்கம்பக்கமெல்லாம் வீடாய்டிச்சுப்பா, மாடில பெண்டு பிள்ளைகள் நடமாடற நேரம், இப்படி குந்திகினா நியாயமா?" என (அவங்கள நேர்ல பாக்க முடியாத) ஒரு தினுசா திரும்பி நின்னு எத்தன நாளுதான் கொரல் குடுக்குறது?!

எந்திரிக்கிற நிலையில ஒரு பயலும் இல்லயே!

எனக்கு வந்த கோவத்துக்கு கண்ணு சிவக்கவும், மூளைக்குள்ள ஒரு அலாரம் சிக்னல், 'பொறுமை மனோகரா, பொறுமை'!

ஏன் இந்த அலாரம் சிக்னல்?

மும்பையில் மெட்ரோ ரயிலில் 'டிக்கட் வாங்காதோர் சங்கம்' என்று ஒன்று இருந்தது (சாமி சத்தியமா!). சந்தா கட்டி மெம்பர் ஆகிவிட்டால் வாழ்க்கை full ஆ வித்தவுட் டிக்கட்டில் பயணம் செல்லலாம். செக்கர் புடிச்சா சங்கமே fine அ கட்டிடும்!

அதுபோல 'திறந்தவெளியில் மலம் கழிப்போர் சங்கம்' ஒன்று கண்டிப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்; புலம் பெயர்ந்து கட்டிட வேலையில் காலம் தள்ளும் வடகிழக்கு மாநில மக்களுக்கு.

'வாத்யாரே! நம்பள "போவக்கூடாது" ன்னு சொல்றதுக்கு இவன் யாரு வாத்யாரே? ஏக் லீகல் நோட்டீஸ் சலோ!' என்று கூட ஆகலாம்...

என் பட்டயக்கனவு... கனவுதானா :-(

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்