முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குமார 'சம்பவம்'


குமார 'சம்பவம்' அல்லது "தண்ணி"யில் தள்ளாடிய மரம்!


குமார் தண்ணி அடித்திருந்தான்.

மிக போதையில் இருந்தான்.

ஃபைனல் இயர் ஹாஸ்டலர்களுக்கு இது பழகிய காட்சி.

ஆனால் அவர்கள் பழகாத திருப்பம் ஒன்று இந்த காட்சியை இப்போது யாருமே எதிர்பாரா விதத்தில் மாற்றப்போகிறது.

குமாரின் ஊறுகாய் நண்பன், சற்று நிதானத்தில் இருந்தவன், மாடிப்படியில் குரல் கேட்டு எட்டிப்பார்க்கிறான்.

ஹாஸ்டல் வார்டனும் ப்ரின்சியும் இரட்டையர்போல் ஒன்றாய் கை வீசி கால் நகர்த்தி மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள்.

'டேய் கொமாரு! ஓடுடாஆஆஆஆஆஆ' என்ற அலறலோடு அவன் மாடியிலிருந்து கீழே குதிக்க, கீழே கிரிக்கெட் ஆட்டம் தடைபட்டு கவனம் மாடியை நோக்கி திரும்ப,

குமாரு குத்துமதிப்பாய் காற்றில் கைகளால் துழாவி எதையோ பற்றிக்கொண்டிழுப்பதாய் நினைத்து எழ முயற்சிக்க,

வார்டனும் ப்ரின்சியும் மாடியில் நுழைய...

போதையில் மூழ்கிய குமாரின் மூளையில் எங்கோ சிவப்பு விளக்கு சுழல,

அபாயம் என்ற ஒற்றை உணர்வு உந்தித்தள்ள, தன் சக்தியை ஒன்றுதிரட்டி மாடிச்சுவரின் மேல் காலூன்றி ஏறி...

அருகிலிருந்த இளவயது மரத்தின் கிளையை தாவிப்பிடித்து ஏறி, மாடிக்கு வெளியே தரையில் இறங்குவதாய் எண்ணி எடுத்த ஒவ்வொரு முயற்சியிலும் அந்தக்கிளை மாடிக்கு உள்ளேயே வளைய, அவனும் தப்பித்ததாய் நினைத்து குதிக்க, குதித்து புரண்டு எழுந்தவன் தலை நிமிர்த்தி பார்க்கையில் ப்ரின்சி தெரிய,
"ஐயய்யோ இங்கயும் வந்திட்டாரே!!" ன்னு மறுபடி அதே மரக்கிளையில தாவி ஏறி... இறங்க...

இந்த முறை வார்டன் முகம் தெரிய, 

'"அவரு விட்டாலும் இவரு தொரத்துறாரே?" எனப்பதறி மீண்டும் அதே கிளையில் தாவி ஏற...

எத்தனை முறை முயன்றாலும் அது குமாரை மீண்டும் மீண்டும் அதே மாடியில் இறக்கிவிட்டது போதையில் அவனை இன்னும் குழப்ப,

வேடிக்கை பார்க்கும் தலைகள் பெருக... சிரிப்பு அங்கிருந்து அலை அலையாய் சிதற,

ஒரு கட்டத்தில் ப்ரின்சியும் வார்டனும் பதவி மறந்து சிரிப்பில் சேர்ந்துகொண்டு குமாரை கைத்தாங்கலாய் அவனது அறையில் பத்திரமாய் கொண்டு சேர்த்து சென்றது காலேஜில் வைரலாச்சி!

நம்ம குமாரோட நண்பன், மாடியிலிருந்து வீரமாய் குதித்தவன், பல நாட்கள் மப்பி்ல் மாடியில் மல்லாந்து படுத்து யோசித்து கண்டறிந்த மகத்தான விஷயம், "தோடா! அப்பப்ப பாட்டில்ல மிச்சமாற கொஞ்சூண்டு சரக்க எல்லாம் அந்த மரக்கிளைலதான கொட்டுனோம்! அதான்!!!!!!".

இந்த குமார சம்பவத்தின் நாயகன் இன்று ஒரு பெருநகரில் ஸ்டெடியான ஒரு ரியல் எஸ்டேட் மேக்னட்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்