முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லாபமு லேது, சௌக்யமு ஆஹா!


லாபத்திற்கு ஈடான தமிழ் சொல் கேட்டிருந்தேன், நேற்று.

குவிந்த விடைகள் எதுவும் ஈடான சொல்லை தரவில்லை. ஆனால் பங்கேற்பு அபாரம்!

ஈடு, மிகை ஈடு, உபரி, வரசல்(!), வரும்படி, கந்தாயம், ஆதாயம், பலன்... இவை எதுவும் profit / லாபத்திற்கு மாற்று சொற்கள் அல்ல.

எவ்வளவு முயன்றாலும் தமிழில் லாபத்திற்கு இணையான சொல் கிடையாது!!!!!!!

ஏன் தெரியுமா? 

நம் 'முன் தோன்றி மூத்த குடி'க்கு லாபம் என்ற கோட்பாடே இல்லை. இல்லாத ஒன்றுக்கு சொல் மட்டும் எப்படி இருந்திருக்கமுடியும்?

சுருக்கமாய் விளக்குகிறேன்(!).

தமிழர் வாழ்வியல், தேவைக்கான உற்பத்தி என்பதாகவே இருந்தது. உற்பத்தி செய்யத்தேவையான உதவிகள் (services / சேவை என்ற மொழிபெயர்ப்பெல்லாம் உதவி என்ற சொல்லின் நிழலைக்கூட தொட முடியாது!) வழங்குவோர், அதற்கு ஈடாக (மாற்றாக) விளைச்சலில் ஒரு பகுதியை மகிழ்வோடு பெற்றனர். 

உருக்கு கருவிகள், வேளாண்மைக்காக தேவைப்படும்போது கொல்லர் தனக்கு கிடைத்த விளைபொருளை உருக்குக்கு ஈடாக தந்து வாங்கி தளவாடம் செய்வார். தளவாடத்தை வேளாளரிடம் தந்து பின்னாளில் விளைபொருளாய் பெறுவார்.
விளைபொருள் என்பது அறுவடைக்கப்புறம்தானே; 'அதனாலென்ன, வட்டியோடு தா' என்று சொல்லமாட்டார். பொறுமையோடு காத்திருப்பார். ஏனென்றால் வட்டி என்ற சொல்லும் அவர் வாழ்வியலில் இல்லவே இல்லை :-)

செருப்பு தைப்பவராக இருக்கட்டும், ஆடை நெய்பவராக இருக்கட்டும், வெளுப்பவராக இருக்கட்டும், ஏன், நாவிதராக இருக்கட்டும், செய்த உதவிக்கு ஈடு பெற்று வாழ்ந்தனர். விளைவிப்பவர்கள், இவர்கள் எல்லோருடைய உதவியும் பெற்று, விளைவித்து, உதவிக்கு ஏற்ப பகிர்ந்து, அவர்கள் எல்லோருக்கும் உதவுவர்!

இப்படி, சிற்றூருக்கு சிற்றூர் உதவி வழங்குவோர் இருந்தனர். ஆனால் இதில் எந்த உதவியும் வணிகமாக பார்க்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், 
பண்ட மாற்று முறை இருந்தவரையில் 'வணிகம்' என்ற ஒன்றே இல்லை!

லாபம் என்பது வணிகம் தோன்றிய அன்று பிறந்த பாப்பா.........

வணிகத்தை முந்திய நமது முதுவாழ்வியலை காட்சிப்படுத்திய மொழியான நமது செம்மொழி தமிழில் அதை ஒத்த சொல் தேடுவதா?

போங்கு....இது....தப்பாட்டம்.

தப்பாட்டம் என நான் இங்கு குறிப்பிடுவது இந்தப்பதிவை அல்ல; நம் நிகழ்வாழ்வை!

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு வாழ்வியலின் பெரும்பதிவு, 'நம்' வாழ்வியலின் பெரும்பதிவு!

பின்குறிப்பு : இன்றைய பெருநுகர் உலகில் இன்னும் எஞ்சி வாழும் தொல்குடிகள் ஏராளம். இவை அனைத்தின் மொழிகளிலும் இன்றுவரையில் லாபத்திற்கு ஈடான சொல் இல்லவே இல்லை!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்