முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒவ்வொரு அரிசியிலும் ஒரு பெயர்...


ஒவ்வொரு விதையிலும் ஒரு பெயர்...

நாம் உண்ணும் ஒவ்வொரு தானியத்திலும் பெயர் ஒன்று எழுதப்பட்டிருக்கிறதாம்.

அது கால காலமாக நிகழ்ந்துவரும் பேரற்புதமாம்.

ஒரு முறை கூட இதில் பிழை ஏற்பட்டதில்லையாம்.


அது உண்பவர் பெயரில்லையாம், விதைத்தவர் பெயராம்.


மனிதர் விதைத்தது போல பலமடங்கு ஏனைய உயிர்கள் விதைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. நாம்தான் அவற்றை உண்பதை குறைத்துக்கொண்டோம் / நிறுத்திவிட்டோம்.

விதை சுமக்கும்/பரப்பும் பறவைகளும் ஏனைய உயிர்களும் மனிதர்களை சந்திக்க நேரும்போதெல்லாம் கேட்பது ஒற்றைக்கேள்வி மட்டும்தானாம்;

'ஏனிப்படி ஆச்சி??'.

தானாய் கிடைத்த உணவை உண்டு மகிழ்வாய் வாழும் பல்லுயிர்க்கிடையில் 'இதைத்தான் உண்பேன், நோயில் வீழ்வேன்' என ஒற்றைக்கூட்டம் மட்டும் தடம் மாறிப்போன புள்ளியில் தொடங்கிய அவற்றின் ஒற்றைக்கேள்வி இன்று வரை இக்கூட்டத்தின் 700 கோடி காதுகளில் விழவே இல்லையாம்.

விதை விதைப்பதோடு சேர்த்து இந்த கேள்வியை விதைப்பதையும் கடமையாக கொண்டிருக்கும் இவ்வுயிரனைத்தையும் 'எங்க ஏரியா! உள்ளே வராதே!!' என துரத்தும் மனிதக்கூட்டத்தை இனி எப்படி அணுகுவது என்ற கவலையோடு அவை மஜூலி கானகத்தின் மீது பறக்கையில் அங்கு அந்த கானகத்தை உருவாக்கிய ஒற்றை மனிதன் இன்றும் மரங்கள் நடுவதை கண்டு மகிழ்ந்து 
தம் முயற்சியை தொடர்கின்றனவாம்...

(அசாமில் தனி மனிதரொருவர் முப்பது ஆண்டுகளாய் மரங்கள் நட்டு பல நூறு ஏக்கர் காடுகள் வளர்த்து, அது மஜூலி கானகம் என்று அறியப்பட்டது. அங்குள்ள பல்லுயிர் பெருக்கத்தை உலகமே கொண்டாட, விரைந்து அங்கு குடியேறிய நம் கூட்டம், விலங்குகள் தொல்லை அதிகமென வாளேந்துவதும், அதை ஒற்றை மனிதர் தடுக்க முயலும்போதெல்லாம் அவரை உதைப்பதும் வாடிக்கையாகிப்போனாலும் அதை பறவைகள் காண முடியாத அளவுக்கு அங்கு மரங்கள் கூடாரமாய் இன்றும் மறைத்திருக்கிறதாம்...).





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்