முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

(நமக்கு) எட்டாத ஸ்வரம்!


வாகனத்தில் தொலைதூரப்பயணம் (long drive) செல்லும்போதெல்லாம் பயண தூரம் முடிவதற்குள் குளிரூட்டப்பட்ட வாகனத்துக்குள்கூட என் கண்ணோரம் சில கண்ணீர் துளிகள் கசியும்...

"
ஏழு ஸ்வரங்களுக்குள் அடங்குவதே இசை. எட்டாவது ஸ்வரம் என்று ஒன்றே கிடையாது; வாய்ப்பே இல்லை. இசையமைப்பாளர்கள் எல்லோரும் இந்த ஏழு ஸ்வரங்களை மாற்றி மாற்றிப்போட்டுதான் காலம் தள்ளுகிறார்கள்.

இசைக்கு ஏகபோக உரிமை என்று யாரும் கிடையாது. உலகில் மிகப்பல இசை மேதைகள் இருந்திருக்கிறார்கள். பெயர்கள் சொல்ல வாழ்நாள் போதாது.

இசை தருபவன், தந்தவுடன் அடுத்த வேலைக்கு நகர்கிறான். அது கேட்பவர் மனதில் எழுப்பும் அதிர்வுகளுக்கும் கேட்பவர் மனக்கண்ணில் விரிக்கும் காட்சிகளுக்கும் இசை தந்தவன் பொறுப்பல்ல; கேட்பவரே பொறுப்பு.

இசைக்கடலில் எழும் அலைகளில் திரளும் நுரைகளில் ஒரு குமிழளவுகூட நான் சாதிக்கவில்லை.
"

இவை அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு இசைமேதை சொன்னது; ஒரு முறை கூட நிலை பிறழாமல். இன்னும் ஒருபடி மேலே போய் அவர் சொன்னது 'எனக்கு இசை தெரியாது'!

'திமிர பாத்தியா? பெரிய இவன்னு நினப்பு. கர்வி! அகங்காரன்!' என பலர் அறிவு பூர்வமாய் தூற்றினாலும் கண்டுகொள்ளாது நம் உணர்வுகளோடு உறவாடிக்கொண்டிருக்கும் இவர், இசையின் இலக்கணங்களை, மரபை உடைத்தெறிந்து அதை நம் ஆன்மாவோடு இழையவிட்ட மந்திரவாதி. 

Experiential technology (உணர்விக்கும் தொழில் நுட்பம் - டிவியில் ரோஜா காண்பிக்கையில் உங்கள் அறையில் ரோஜா வாசம் வீசவைப்பது) யில் அரிச்சுவடிகளைக்கூட தாண்டாத தொழில்நுட்ப உலகில் நுட்பமான உணர்வுகளை இசையின்வழி நூலிழை பிசகாமல் நம்முள் கடத்த இவருக்கு அந்த பழைய ஏழு ஸ்வரங்களே போதுமானதாக...

எண்ணிக்கைக்குள் அடங்காத நம் உணர்வுகள் அனைத்திலும் பிண்ணனியாகவோ அல்லது முண்ணனியாகவோ ஊடாடும் இவரது இசைக்கோவைகள் எப்படி நம் உணர்வுகளோடு கச்சிதமாய் ஒவ்வொரு முறையும் பொருந்திப்போகின்றன?

"ஆன்மாவை உடலிலிருந்து உருவிப்போடக்கூடிய ஆலாபனை" என ஒரு நிகழ்ச்சியை தொகுத்த நடிகர் பார்த்திபன் இவரது இசையின் வலிமையை முன்னறிவிப்பு செய்தபின் வந்த பாடலின் தொடக்க ஆலாபனை (நான் தேடும் செவ்வந்திப்பூவிது) என் ஆன்மாவை ஊடுருவியதை உணரமுடிந்தது.

வாகனத்தில் தொலைதூரப்பயணம் (long drive) மேள்கொள்ளும்போதெல்லாம் பயண தூரம் முடிவதற்குள் குளிரூட்டப்பட்ட வாகனத்துக்குள்கூட என் கண்ணோரம் சில கண்ணீர் துளிகள் கசியும், இதழோரம் புன்னகையோ குறுஞ்சிரிப்போ அல்லது சீழ்க்கை ஒலியோ (விசில்) வந்துபோகும்... பழகிய பாதை, பழகிய பயணம் என்றாலும் திடீரென ஒலிக்கும் ஒற்றை வயலினின் மனதைப்பிசையும் ஓசை, புல்லாங்குழலில் அடைபட்ட காற்று துளை வழியே வழி்ந்தோடும் ஓசை, ஒரு ஆலாபனை, ஒரு ஒரு ஒரு... சொல்லிக்கொண்டே போகலாம்.

இவை அனைத்தையும் அமைதியாய் தந்துவிட்டு, Nothing but wind, How to name it என்று நம்மோடு சேர்ந்து 'சூப்பர் மேஜிக்' என தானும் வியந்து இன்றுவரை அதன் மூலத்தை தேடிக்கொண்டே இருக்கும் இந்த எட்டாவது ஸ்வரம், நம் மண்ணின் ஸ்வரம், நம் மண்ணுக்கு மட்டுமே சொந்தமான வரம்!

How to name it? சொல்லுங்கள் ராஜாவே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்