முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மரபணு மாறிப்போன குரங்கின் பழைய உலகில் சுவர்களே இல்லை...


பழைய உலகில் சுவர்களில்லை (அல்லது)
மரபணு மாற்றிக்கொண்ட குரங்கு!

சுவரை வைத்துதான் சித்திரம் என்ற முதுமொழி நமக்கு நன்கு தெரிந்த ஒன்றுதான். 

பெருஞ்சுவர்கள் எழுப்பி அவற்றின்மீது பெரிய சித்திரங்களை வரையும் முனைப்பில் நாம்.

பழைய உலகில் சுவர்கள் இல்லை. இருந்தவை எவை என இருந்தவர் யாரும் அறிய முற்படவும் இல்லை.

தலைக்குமேல் கூரை, அதை தாங்க சுவர் என நாம் தொடங்கியபோது, மரங்களிலிருந்து இறங்கியிருந்தோம்.

என் சுவர் உனதல்ல, சுவர் காக்கும் நிலப்பரப்பும் உனதல்ல என விதிகள் 'வகுத்தோம்'. வகுபட்டது வாழ்வு.

நம்மை எல்லைகள் பிரித்தன, எல்லைகள் சேர்த்தன. எல்லைக்குள் வாழ்வதற்கும் எல்லை வகுத்தோம், 'சரி' 'தவறு' ன்று. வகுத்ததை காக்க புதிய விதிகள் சமைத்தோம். 

சமைத்தது எதுவும் நொதிக்கும்தானே. வீணாகிப்போன விதிகளை அகற்றி புதிய விதிகள் சமைக்கும் வாய்ப்புகளை மட்டும் புறம்தள்ளி, "நொதித்ததை காக்க" புதிய புதிய விதிகள், முயற்சிகள் என நம் வாழ்வியலை அனுதினமும் மாற்றிக்கொண்டே போகும் நமக்கு மரபணு என்று ஏதாவது மிச்சமிருந்தால் அது கிளைக்கு கிளை தாவ உதவும் நம் வாலாக மட்டுமே இருக்கும்...

பழைய உலகின் சித்திரங்கள் சுவர்களில் வரையப்பட்டவை அல்ல. ஏனெனில் அங்கு சுவர்களே இல்லை...

நதியென்றும் மலையென்றும் கடலென்றும் பறவையென்றும் அருவியென்றும் விலங்கென்றும் செடியென்றும் கொடியென்றும் மரமென்றும் மீனென்றும் ஏனைய பிறவென்றும் முடிவற்ற சித்திரங்கள், வியப்பின் உச்ச விசித்திரங்கள்.

(அந்த சித்திரங்களுள் ஒன்றான நாம் மட்டும் தனித்தனியே சுவர்கள் செய்து தனித்தனியே வரைந்துகொள்ளும் நம் தனி உலகு; என்னது உனதில்லை என்பதாகவே...)

இத்தனை விசித்திரங்களும் கண்டு கவலையுறும் ஒற்றை ஓவியமாக நமது வாழ்வு...

நம்மை சுற்றிச்சூழ்ந்து நொடியில் நிறம் மாறும் இந்த (வி)சித்திரங்களை கண்டு களிக்க நேரமின்றி, ஆர்வமும் இன்றி நாம் நம் சுவர்களில் வரைந்துகொண்டே இருக்கிறோம் நமக்கே நமக்கான சித்திரங்களை... ஏனெனில் நமக்கு சுவர்கள் அவசியம்!

பின் குறிப்பு:

இந்தப்பதிவில் இடம்பெற்றிருக்கும் முதல் ஓவியத்தை வரைந்தவர் உலகப்புகழ் அமெரிக்கர் Andy Warhol. மற்ற ஓவியங்கள் அனைத்தையும் வரைந்தவர், Pockets Warhol, ஒரு குரங்கு!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்