முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நகரம்

அதிகாலை குளிர் காற்றில் விரையும் லாரி. லாரியின் திறந்த முதுகில் நின்றவண்ணம் பயணிக்கும் மூவர்; தொழிலாளர்கள். குலுங்கி நகரும் அந்த லாரியில் மூவரில் ஒருவன் தன்னைச்சுற்றி இரைச்சலோடு விரையும் வாகன புகை, ஓசையின் ஊடாக கைபேசியினை தன் முகத்திற்கு முன்னே உயர்த்தி தன்னைத்தானே படம் எடுக்கிறான் உலகை வென்ற புன்னகையணிந்து. சிவப்பு பச்சையாகி லாரி வேகமெடுப்பது கூட அவனது தவத்தை கலைக்கவில்லை. பெரு நகர சாலையோரம் சுகாதார பணியாளர் ஒருவர் கையில் தரை பெருக்கும் நீள்குச்சி துடைப்பத்தை தரை தட்ட இழுத்துக்கொண்டே மெல்ல நடக்கிறார் சன நெரிசலில். குப்பைகள் எதையும் நகர்த்தாமலே தரைமீது தவழ்ந்து செல்கிறது துடைப்பம். 'நகரு நகரு' என குரல் கொடுத்துக்கொண்டே சுமக்க முடியாத காய்கறி கூடையை சுமந்து சந்தையின் சேற்றுப்பாதையில் வெளியேறுகிறான் ஒரு திடகாத்திர இளைஞன். 'எதை நகரச்சொல்கிறாய்? இந்த உடலையா அல்லது ஆன்மாவையா?' என யாரும் கேட்கவில்லை. அவன் சுமையை வாங்கிக்கொள்ள வெளியில் காத்திருக்குது பல கூடைகள் சுமந்த வாகனம் ஒன்று. காலை அலுவலகம் செல்லும் வழியில் சந்தையில் நுழைந்து, இரவு உணவுக்கென கரிசனமாய் காய்கறிகள் வாங்கி அல

ரவி என்னும் காடன்...

தமிழக கேரள காடுகளில் மட்டும் 40க்கும் மேலான தொல்குடி இனங்கள் வாழ்கின்றன. அடர் வனங்களுள் இருக்கும் இவர்களது பெரும்பான்மையான குடியிருப்புகளுக்கு நவீன சாலை வசதிகள் கூட கிடையாது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நம் வனங்களை காத்து வருபவர்கள் இவர்கள். நம் நாடு விடுதலை பெற்ற பின்பும் இவர்களது பணி தொடர்ந்து வருகிறது. வேட்டையாடி இனங்களாய் வாழும் இவர்களை நம் நாகரிக உலகம் மெல்ல தொடர்பு கொண்டு, 'காட்டிலிருந்து நாங்கள் கேட்பவற்றை கொண்டு வா, பண்டமாற்றாய் உனக்கு வேண்டிய நாகரிக பொருட்களை நாங்கள் தருகிறோம்' என மெல்ல பழக்கி, தேன், மூலிகைகள் என தொடங்கி விலை உயர்ந்த மரங்கள் வரை இவர்களைக்கொண்டே நம் காடுகளிலிருந்து சமவெளிக்கு இறக்குமதி செய்கின்றன. இத்தனை தொல்குடி இனங்கள் வாழும் காடுகளில் விலங்குகளால் கொல்லப்பட்டவர்கள் என யாருமில்லை என்பதே சில பத்தாண்டுகளுக்கு முன் வரை நிலவிய உண்மை. சமவெளி நுகர்வோரின் தூண்டுதலால் தொல்குடியினருக்கு தேவையில்லாத அல்லது தேவைக்கு அதிகமான காட்டு விளைச்சலை எடுக்கச்சென்ற தொல்குடியினர் எப்போதாவது விலங்குகளால் தாக்கப்படுவது நிகழும், குறிப்பாக தேனெடுக்கையில். ஆனாலும் உயிர்ச்சேதம் அரிதாக

அனுமாரும் சகாராவும்!

சம்பந்தமே இல்லாத ரெண்டு விசயத்தை இணைச்சி பேசினா, 'மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதே'ம்பாங்க நம்மூர்ல. ஆனா நாம வாழ்ற பூமி என்னடான்னா இதப்போல பலப்பல முடிச்சுகளாலதான் இன்னமும் சுத்திகிட்டிருக்காம். வாங்க, இதில் ஒரு முடிச்ச கொஞ்சம் டீடெயிலா பாப்போம். ஆப்பிரிக்க கண்டத்தோட வடக்குப்பகுதில சகாரா சகாரான்னு ஒரு பாலைவனம் இருக்கு. உலக பாலைவனங்கள்லயே ரொம்ப பெரிசு இந்த பாலைவனம்தான். பல ஆயிரம் வருசம் முன்னாடி ஒரு பெரிரிரிரிய ஏரியாக இருந்த நிலப்பரப்பு, பருவ மாற்றங்களால வத்திப்போயி பாலைவனமாச்சாம். இந்த பாலைவனத்தின் காலடியில், அதாவது தென் எல்லையில், கிழக்கு மேக்கா ஒரு மிகப்பெரிய புல்வெளி நிலப்பரப்பு இருக்குதுங்க. சகேல் என அறியப்படும் இந்தப்புல்வெளிதான் சகாராவ தெக்கால வளரவிடாம தடுத்துகிட்டு இருக்குது. இந்த சகேல் புல்வெளிதான் வடக்கு ஆப்பிரிக்காவையும் தெக்கு ஆப்பிரிக்காவையும் பிரிச்சு தெக்க காப்பாத்துற குலசாமி. இந்த சகேல் நிலப்பரப்புல ஒன்பது நாடுகள் இருக்கு. எல்லாமே மேய்ச்சல் வாழ்வியல் சார்ந்த நாடுகள். 1970-80கள்ல சகேல் + சகேலுக்கு தெக்கேந்து மக்கள் இன்னும் கொஞ்சம் பெரிசா இடம் வேணும்

பிழைக்குமா?

நம் பூமியிலே ஆதியில் நிலம் கீறி எச்சமிட்டு பறவைகள் வளர்த்த பரப்பெங்கும் பச்சையாச்சி. பச்சை கண்டு படையெடுத்த பல்லுயிர்க்கூட்டம் இச்சையோடு புசித்து எச்சமிட்டு எச்சமிட்டு பச்சை பரவியாச்சி. புலன்குளிர்ந்து ஆகாயமும் ஆனந்தமாய் கண்ணீர் வடிக்க துளிபட்ட இடமெங்கும் தீயாய் தாவித்தாவி பச்சை பரவ காணுமிடமெலாம் பச்சையாச்சி. பல்லுயிரும் பச்சையோடு பல்கிப்பரவ ஓருயிர் மட்டும் மாற்றி சிந்தித்து ஓரிடத்தில் தங்கிப்போச்சி. குந்தித்தின்று கரைந்த பச்சை, அவ்வுயிரை காணாப்பச்சை தேடத்தள்ள, காணும் ஆவலி்ல் இவ்வுயிர்க்கூட்டம் பறவைபோல நிலம் கிளறி எச்சமிட மொத்தமும் மறுபடி பச்சையாச்சி. விலகிப்போன உயிரெலாம் பசிக்கு மட்டும் புசிக்கையிலே தங்கிப்போன கூட்டம் மட்டும் ருசிக்கும் சேர்த்து புசிக்கவும் பழகியாச்சி. மழையற்ற காலத்திலே பசியென்ன உறங்கிடுமா என அக்காலத்துக்கும், எக்காலத்துக்கும் சேர்த்து வைக்க இந்தக்கூட்டம் பல்லுயிரழித்து பயிர் வளர்க்க, நொந்த வானம் அழுத கண்ணீர் பூமி சேருமுன்னரே கடும் வெயிலில் ஆவியாச்சி. ஆவியோடு சேர்ந்து மிச்சமிருந்த பச்சையும் (நீரின்றி) அவிந்துபோச்சி. சோர்வடையா உழைப்போடு இந்தக்கூட்டம் மறுபடி மாற்றி சிந்

பத்தும் பறந்து போம்!

  முதியவர். களைத்திருந்தார். பசித்திருந்தார். தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் நாற்கர சந்திப்பில் சிவப்பு சிக்னல் நிறுத்தத்தில் ஒவ்வொரு வாகனமாய் கை நீட்டி யாசித்தார். ஒவ்வொரு முறை சிவப்பாக சிக்னல் மாறும்போதும் 90 விநாடிகள் வாகனங்கள் நிற்கும். தளர்ந்த உடலை விசை கூட்டி நகர்த்தி ஒவ்வொரு வாகனமாய் அணுகினார். அனுதாபப்பட்டு சிலர் சில்லறை தந்தனர். சிலர் ரூபாய் நோட்டுகள் தந்தனர். எனது வாகனத்தின் அருகில் அவர் வந்தபோது சிவப்பு விளக்கு பச்சையாக மாற நாற்பது நொடிகள் இருந்தது. கோடை சூரியன் உச்ச வெப்பத்தில் தலைக்கு மேலே. சன்னல் கண்ணாடியை கீழிறக்கி பணம் கொடுக்க முயன்றேன். 'ஐயா, பணம் வேணாமையா, பசிக்கு சாப்பிட ஏதாவது இருந்தா தாங்கய்யா' என ஈனமான குரலில் வேண்டினார். கடந்த பத்து வருடங்களாக வெவ்வேறு சிக்னல்களில் வெவ்வேறு மனிதர்கள் பணம் மட்டுமே விருப்பமாய் யாசித்து வேண்டுவதும், உணவு தந்தால் முகம் சுளிப்பதும் நடந்ததுண்டு.  ஆனால் முதல் முறையாக உணவு மட்டுமே யாசிக்கும் மனிதர்... அவசரமாய் என் பையில் தேடினேன். அன்றைய மதிய உணவு பழங்கள் மட்டுமே என முடிவு செய்து எடுத்து வந்திருந்தது அப்போதுதான் நினைவில் வந்தது. கையில்

ஒரு ப்ரயாண கதா

  அதிகாலை வேலையில் பெங்களூரு பெருநகர சாலைகளில் பரவிக்கிடக்கும் மலர் இதழ்கள் கொள்ளை அழகு.  விழுந்த மலர்கள், வெயில் ஏற ஏற வாகன இரைச்சல் கூட கூட மெல்ல காணாமல் போகும் மலர்கள், மறுநாள் காலையில் மேலும் புதிதாய், மேலும் மெருகு கூடி குவிந்து கிடக்கின்றன அதே ஒரங்களில். நகரின் பெரிய பூங்காக்களை விட சிறிய பூங்காக்களில் இன்னும் நெருக்கமாய், சிநேகமாய் இயற்கை. எத்தனையோ புதிதாய் கற்று காசு பண்ணும் பேரூர் நம்முடைய தமிழ் சாம்பாரை மட்டும் இன்னும் முழுதாய் செய்ய கற்கவில்லை! மரக்குடை பிடித்த சாலை ஓரங்களும் மத்திய தடுப்பு மர வரிசைகளும் வெப்பத்தை உள்வாங்கி நமக்கு குளுமையை மட்டும் வழங்குகின்றன பெரும்பாலான இடங்களில். ஏனோ மற்ற பெரு நகரங்கள் இதை முயலவில்லை இன்றுவரை... குப்பை குவியல்கள், குடலைப்பிரட்டும் நாற்றங்கள் - அறவே இல்லை. எல்லா வணிக நிலையங்களிலும் அவசர அவசரமாக ஆங்கில பெயர்களுக்கு இணையாக கன்னட பெயர்களும் கல்லடிக்கு பயந்து பெருகிக்கொண்டிருக்கின்றன. மருந்துக்கடைகள் பெட்டிக்கடைகள் போல ஏராளமாய்... காலை மாலை வேளைகளில் உணவகங்களில் இளசுகளின் கூட்டமென்றால் இடைப்பட்ட பொழுதுகளில் ஏனைய சனத்திரளும் நகரின் அனைத்து இடங்

ரொம்ப டீப்பும்மா!

அண்ணலும் நோக்க, அவளும் நோக்க செம்புலப்பெயல்நீர் போலவே... 'எங்க ஊரு காதல பத்தி நீ இன்னா நெனைக்கிற?' என ஒரு வெளிநாட்டுப்பெண் கேட்க, 'எங்க ஊரு காதல் போல அது ஆழமில்லம்மா' ன்னு இளையராஜா தொடங்க, "ஆழமுன்னா என்னா?' என வெ.நா.பெண் கேட்க, " அது ரொம்ப டீப்பும்மா' ங்கிறார் ராஜா. நம் இன்றைய தலைமுறை இந்த கான்வர்சேஷனை உள்ளூருக்கு கொண்டு வந்தாச்சி. காணாமலே காதல், கண்டதும் காதல், மோதலினால் காதல் என பல பரிமாணங்களை தாண்டி பயணிக்கும் காதல் எனும் பேருணர்வு, வளர்ந்த நாடுகள் நம் சிறார்கள் மீது நடத்தும் சமூக வலைதள தாக்குதல்களால் உருமாறிக்கொண்டிருக்கிறது வெகுவேகமாய். காதல் கைகூடாது போவதும், கனிந்து கடிமணமாவதும், சமூக ஏற்புடன் திருமணமாவதும் தொல்காப்பிய காலத்திலிருந்து தொடர்வது இப்போது எப்படி மாறிக்கொண்டிருக்கிறது? நட்பு அல்லது காதல் என்கிற இரண்டே கட்டங்களில் பாண்டியாடிப்பழகிய பல தலைமுறைகளின் வழி வந்த நம் மண்ணின் இளைய எதிர்காலம் இப்போது காதலை ஊடறுத்து எழுப்பியுள்ள Maze ஐ எட்டிப்பார்ப்போம் இப்போது: Situationship - நட்புக்கு மேலே, காதலுக்கு கீழே, ஆனால் காமம் உண்டு. சூழல் மாறினால் இ