முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரொம்ப டீப்பும்மா!



அண்ணலும் நோக்க, அவளும் நோக்க செம்புலப்பெயல்நீர் போலவே...


'எங்க ஊரு காதல பத்தி நீ இன்னா நெனைக்கிற?' என ஒரு வெளிநாட்டுப்பெண் கேட்க,

'எங்க ஊரு காதல் போல அது ஆழமில்லம்மா' ன்னு இளையராஜா தொடங்க,

"ஆழமுன்னா என்னா?' என வெ.நா.பெண் கேட்க,

" அது ரொம்ப டீப்பும்மா' ங்கிறார் ராஜா.


நம் இன்றைய தலைமுறை இந்த கான்வர்சேஷனை உள்ளூருக்கு கொண்டு வந்தாச்சி.


காணாமலே காதல்,

கண்டதும் காதல்,

மோதலினால் காதல் என பல பரிமாணங்களை தாண்டி பயணிக்கும் காதல் எனும் பேருணர்வு, வளர்ந்த நாடுகள் நம் சிறார்கள் மீது நடத்தும் சமூக வலைதள தாக்குதல்களால் உருமாறிக்கொண்டிருக்கிறது வெகுவேகமாய்.


காதல் கைகூடாது போவதும், கனிந்து கடிமணமாவதும், சமூக ஏற்புடன் திருமணமாவதும் தொல்காப்பிய காலத்திலிருந்து தொடர்வது இப்போது எப்படி மாறிக்கொண்டிருக்கிறது?

நட்பு அல்லது காதல் என்கிற இரண்டே கட்டங்களில் பாண்டியாடிப்பழகிய பல தலைமுறைகளின் வழி வந்த நம் மண்ணின் இளைய எதிர்காலம் இப்போது காதலை ஊடறுத்து எழுப்பியுள்ள Maze ஐ எட்டிப்பார்ப்போம் இப்போது:


Situationship - நட்புக்கு மேலே, காதலுக்கு கீழே, ஆனால் காமம் உண்டு. சூழல் மாறினால் இதுவும் மாறிப்போகும்.


Fling - காதலற்ற காமம், அரித்தால் சொரிந்துகொள்வது போல.


Casual relationship - டீக்கடைகளில் தோணும்போதெல்லாம் டீ குடிப்பது போல, தோணும்போது தோணுபவருடன் காமம்.


Friends with benefits - Situationship க்கு இன்னொரு பெயர்.


Boyfriend / Girlfriend - கல்யாணம் செய்யும் உறுதியோடு பழகுபவர்கள். சேர்ந்து வாழ்வது திருமணத்திற்கு முன்பும்.


Boy Bestie / Girl Bestie: Boyfriend / Girl Friend க்கு மேல, ஆனா லவர் கெடையாத்! ஆகவே முடியாத்!சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர். ஜே. பாலாஜி விளக்குவது போல: அதாவது, பரோட்டாவிற்கு குருமாதான் மேட்ச் என்றாலும் பக்கத்தில் வைக்கப்படும் தயிர்பச்சடி போல. 


காதல் தேசத்துக்கே இத்தன ரூட்டா? அப்பால கண்ணாலமாச்சின்னா?

அங்கேயும் இவர்களது பார்வை விரிகிறது...


Poly Amore - கணவனும் மனைவியும் வெவ்வேறு ஊர்களில் பணி நிமித்த வாழ்வு. தனியே வாழும் இடத்தில் வா.துணையின் அனுமதியுடனே இன்னொருவருடன் 'வாழ்க்கை' நடத்துவது. பணி இட மாறுதல் வந்தால் இதில் உள்ள நபர்களும் மாறுவர்!


Monogamus - ஒருவரே வாழ்வின் இணை என உறுதியாய. வாழ்வது. அப்பாடா! இது மட்டுமே மாறாதிருக்கிறது :-)


ஆட்டத்த கலச்சிட்டு ஆரம்பத்தில இருந்து மறுபடி ஆரம்பிக்கலாமா? என செயற்கை அறிவு நிரம்பிய இயந்திர காதலர்கள் / காதலிகள் மலிவு விலையில் உங்களுக்கு அருகிலுள்ள கடைகளில் விரைவில் கிடைப்பார்கள்!


எதே? ரொம்ப டீப்பா? போங்கப்பு!


பேரன்புடன்,

பாபுஜி

(PC: Freepik website)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்