முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பத்தும் பறந்து போம்!

 


முதியவர்.


களைத்திருந்தார். பசித்திருந்தார்.


தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் நாற்கர சந்திப்பில் சிவப்பு சிக்னல் நிறுத்தத்தில் ஒவ்வொரு வாகனமாய் கை நீட்டி யாசித்தார்.


ஒவ்வொரு முறை சிவப்பாக சிக்னல் மாறும்போதும் 90 விநாடிகள் வாகனங்கள் நிற்கும். தளர்ந்த உடலை விசை கூட்டி நகர்த்தி ஒவ்வொரு வாகனமாய் அணுகினார்.


அனுதாபப்பட்டு சிலர் சில்லறை தந்தனர். சிலர் ரூபாய் நோட்டுகள் தந்தனர்.


எனது வாகனத்தின் அருகில் அவர் வந்தபோது சிவப்பு விளக்கு பச்சையாக மாற நாற்பது நொடிகள் இருந்தது. கோடை சூரியன் உச்ச வெப்பத்தில் தலைக்கு மேலே.


சன்னல் கண்ணாடியை கீழிறக்கி பணம் கொடுக்க முயன்றேன்.


'ஐயா, பணம் வேணாமையா, பசிக்கு சாப்பிட ஏதாவது இருந்தா தாங்கய்யா' என ஈனமான குரலில் வேண்டினார்.


கடந்த பத்து வருடங்களாக வெவ்வேறு சிக்னல்களில் வெவ்வேறு மனிதர்கள் பணம் மட்டுமே விருப்பமாய் யாசித்து வேண்டுவதும், உணவு தந்தால் முகம் சுளிப்பதும் நடந்ததுண்டு. 


ஆனால் முதல் முறையாக உணவு மட்டுமே யாசிக்கும் மனிதர்...


அவசரமாய் என் பையில் தேடினேன். அன்றைய மதிய உணவு பழங்கள் மட்டுமே என முடிவு செய்து எடுத்து வந்திருந்தது அப்போதுதான் நினைவில் வந்தது.


கையில் அகப்பட்ட பழங்கள் அனைத்தையும் எடுத்து அவர் கரங்களில் வைத்தேன்.


புதிய உயிர் ஒன்றை கையில் ஏந்தும் உணர்வோடு பெற்றிக்கொண்டவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பச்சைக்கு மாறிய சிக்னல், பின் வரிசையிலிருந்து கோபமாய் ஒலிக்கும் horn எதையும் பொருட்படுத்தாமல் ஜன்னலில் முழங்கைகளை பதித்து வலியில் தோய்ந்த குரலில் அவர் சொன்னது இப்போதும் வயிற்றைப்பிசைகிறது. அவர் அதிகமாகக்கூட எதுவும் பேசவில்லை; 'சார், பேரன் பேத்தியவெல்லாம் வளர்த்திருக்கிறன் சார்'. சொல்லி முடிக்கையில் அவர் கண்களில் பிரதிபலித்த 'வாழ்ந்து கெட்டவரின் வலி', 'கைவிடப்பட்டவரின் பெருஞ்சோகம்' என் நினைவுகளில் இருந்து நீங்குமா எனத்தெரியவில்லை.


கைவிட்டவர்கள் இந்த நொடியில் இந்த பூமியில் எங்கோ ஓரிடத்தில் நிம்மதியாக இருக்கலாம். அவர்களை இன்னும் பல ஆண்டுகள் கழித்து ஏதாவதொரு சிக்னலில் நாமோ அல்லது நம் வாரிசுகளோ கடக்க நேரிடலாம். அப்போது அவர்களுக்கும் நம் / நம் நீட்சிகளிடமிருந்து ஒரு உணவுப்பொட்டலம் கண்டிப்பாக கிடைக்கவேண்டும் என பேரிறையை வேண்டுகிறேன். கூடவே, நம் உலகின் பசிப்பிணி போக்க "ஆபுத்திரனை" ^ மறுபடி இங்கு உயிரோடு உலவ விடு; அதே நேரத்தில் அவனையும் அவனது அமுதசுரபி பாத்திரத்தையும் பேராசைப்பெருவணிகத்திடமிருந்து காத்தருள் எனவும் வேண்டுகிறேன்!


பேரன்புடன்,

பாபுஜி


பின் குறிப்பு: நாகரிக உச்சம் தொட்ட நம் உலகில் முப்பது சதவிகித மக்கள் அடுத்த பத்தாண்டுக்கான தங்களது உணவுத்தேவையை பாதுகாப்பாய் பதுக்கி வைக்க, எஞ்சிய எழுபது சதவிகிதம் காய்ந்த வயிற்றோடு உறங்கப்போகும் அவலம் நம் கண் முன்னேதானே நிகழ்ந்து கொண்டிருக்கிறது? பொருளாத வளர்ச்சியின் குறியீடான GDP படி உலகின் முதன்மை நாடுகள் என வலம் வரும் நாடுகள் (so called multi trillion dollar economies) ஏன் இந்த காய்ந்த வயிறுகளுக்கு இன்றைய உணவை அளிப்பதில் அக்கறை காட்டாது, யுத்தங்களை ஓயவிடாமல் செய்யும் யுத்த தளவாடங்களை ஏற்றுமதி செய்வதில் கவனமாய் இருக்கின்றனர்?



நம் நாகரிக உச்ச வளர்ச்சியின் உச்சமே இந்த கேள்வி கேட்கும் சிந்தனையை நம்மிடமிருந்து இலவசமாய், (பிடுங்குவது தெரியாமல்) பிடுங்கிக்கொண்டதுதானே!


பேரன்புடன்,

பாபுஜி



^ ஆபுத்திரன் - நம் பழைய உலகின் முழு முதல் பசி தீர்த்தோன். நாம் கொண்டாட மறந்த Biggest Super Hero! இவர் பற்றி ஒரு தனிப்பதிவு விரைவில்.


Images credit: Reuters and The Conversation

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்