முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிழைக்குமா?



நம் பூமியிலே ஆதியில் நிலம் கீறி எச்சமிட்டு பறவைகள் வளர்த்த பரப்பெங்கும் பச்சையாச்சி.

பச்சை கண்டு படையெடுத்த பல்லுயிர்க்கூட்டம் இச்சையோடு புசித்து
எச்சமிட்டு எச்சமிட்டு பச்சை பரவியாச்சி.

புலன்குளிர்ந்து ஆகாயமும் ஆனந்தமாய்
கண்ணீர் வடிக்க துளிபட்ட இடமெங்கும் தீயாய் தாவித்தாவி பச்சை பரவ காணுமிடமெலாம் பச்சையாச்சி.

பல்லுயிரும் பச்சையோடு பல்கிப்பரவ ஓருயிர் மட்டும் மாற்றி சிந்தித்து ஓரிடத்தில் தங்கிப்போச்சி.

குந்தித்தின்று கரைந்த பச்சை, அவ்வுயிரை காணாப்பச்சை தேடத்தள்ள, காணும் ஆவலி்ல் இவ்வுயிர்க்கூட்டம் பறவைபோல நிலம் கிளறி எச்சமிட மொத்தமும் மறுபடி பச்சையாச்சி.

விலகிப்போன உயிரெலாம் பசிக்கு மட்டும் புசிக்கையிலே தங்கிப்போன கூட்டம் மட்டும் ருசிக்கும் சேர்த்து புசிக்கவும் பழகியாச்சி.

மழையற்ற காலத்திலே பசியென்ன உறங்கிடுமா என அக்காலத்துக்கும், எக்காலத்துக்கும் சேர்த்து வைக்க இந்தக்கூட்டம் பல்லுயிரழித்து பயிர் வளர்க்க, நொந்த வானம் அழுத கண்ணீர் பூமி சேருமுன்னரே கடும் வெயிலில் ஆவியாச்சி.

ஆவியோடு சேர்ந்து மிச்சமிருந்த பச்சையும் (நீரின்றி) அவிந்துபோச்சி.

சோர்வடையா உழைப்போடு இந்தக்கூட்டம் மறுபடி மாற்றி சிந்திக்க செயற்கையாய் பயிர் வளர்க்க முடிவாச்சி.

காடு மலை கடல் வானம் என வெளியெங்கும் சுற்றிச்சுழலும் பேராற்றல் இவர்கள் வசமாச்சி.

நமது பூமி நமக்கு மட்டுமே. வேறுயிரை வேரறுப்போம் பயிர் வளர்ப்போம் உயிர் வளர்ப்போம் என மார்தட்டி நச்சு செய்து நிலமெங்கும் பரப்பியாச்சி.

பல்லுயிரும் மூச்சுத்திணறி கொத்து கொத்தாய் மாண்டு விழ, நம் வசந்தங்களும் மௌனமாச்சி.

பேராசை பெருநுகர்வு பேரிரைச்சல் செவிடாக்க, வசந்தங்கள் மௌனமானது அறியாமலே ஏனைய பருவங்களையும் வளர் பருவமாய், பயிர் வளர் பருவமாய் மாற்றியாச்சி.

கோடையிலே நிலம் பற்றியெரிய, பருவமழை ஆவியாகி தூபம் போட காடுகளுள் பல்லுயிரும் வெந்து தணிஞ்சாச்சி பின்னே வந்த கூதலிலே நடுங்கி நாசமாச்சி.

காடிழந்த துயரத்திலே வான் பொங்கி குமுறிப்பொழிய நிலப்பரப்பு கடலாச்சி.

இவ்வாறு பூமியின் கதை இப்படி அணுதினமும் உருமாறிப்போக, பேராசை பெருவணிகம் வானேகி வேற்று கிரக நிலம் தேட ஆயத்தமாக, எஞ்சிய பல்லுயிரெலாம் பதைக்கையிலே இந்த ஒற்றை உயிர் மட்டும் பேரழிவு எதுவுமே நடக்காதது போல துயில் எழுந்து துயில் கொள்ள, இன்னும் நம்பிக்கை சுமந்து திரியும் மிஞ்சிய நிலம் கொத்திப்பறவையொன்று ஆளற்ற பாலையிலே கொத்திய கைப்பிடி நிலத்தினிலே தன் எச்சம் சுமந்த விதைகள் சில விதைத்து, விட்டு விலகாமல் பயிர் வளர்க்க உதிரம் கொடுக்கவும் உயிர்கொடுக்கவும் ஆயத்தமாச்சி.

வான்வெளியில் வட்டமிடும் பெருவணிக செயற்கைக்கோள்களில் நுண்கேள்திறன் கொண்ட காதொன்றில் அன்று புதிதாய் ஒலிக்கத்துவங்கியது இந்தப்பறவையின் ஓலம்; 

'தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை? கண்ணீரால் காத்தோம். சர்வேசா, கருகத்திருவுளமோ?'

ஓலத்தினால் கிழிந்த காதோடு தரையில் மோதி விழுந்த அக்கோளை ஒற்றை உயிர்க்கூட்டம் சுற்றிச்சூழ்ந்து ஆய்வு பல செய்து ஓலத்தின் மூலமறிய ஆளற்ற தானியங்கி இயந்திரப்பறவைகளை ஏவியாச்சி.

...

பயிர் பிழைக்குமா?

பேரன்புடன்,
பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்