முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு விரல்...

ஒரு விரல். சாமான்யரின் தேவைகள்: ++++++++++++++++++++++ சுத்தமான காத்து, தண்ணி, உணவு குப்பை இல்லாத தெரு மரங்கள் நிக்கிற சாலைகள் நேர்மையான நிர்வாகம்  திறமையான கல்வி சாமான்யரின் கவலைகள்: -------------------------------------------- சாக்கடை நாத்தம் குப்பை மலை நாத்தம் நச்சுக்காத்து நோய் தரும் தண்ணி நிழலில்லா சாலைகள் லஞ்சத்துக்கு காசு விஷ உணவு எட்டாத கல்வி வறண்ட நிலம் கந்துவட்டி ... சாமான்யருக்கு தெரியாத கவலைகள்: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ குறையும் நோயெதிர்ப்பு சக்தி உடலில் புகும் புதிய நோய்கள் விஷமே உணவு மறைநீர் பருவம் தவறிய மழை காணாமல் போகும் நிலத்தடி நீர் சூழப்போகும் தனிமை ... தேவைகளுக்கும் கவலைகளுக்கும் இடையில் தன்னை நம்பிய வயிறுகளை நிரப்ப இவர் அந்தரத்து கயிற்றில் நித்தமும் கழைக்கூத்து நடத்துகையில் தரையில்  கொடிபிடித்து நித்தம் ஒரு hashtag... ############################ #நடுக்கடலில்_துப்பாக்கி_சூடு #ஆணவக்கொலை #ஸ்டெர்லைட் #கதிராமங்கலம் #எட்டு_வழி #எண்ணூரு #தாதுமணல் #வன்புணர்வு_கொலை #ப

சுஜாதா...

பத்து வருசம் ஆய்டிச்சா வாத்யாரே ! -------------------------------------------------------+--------- சாலு மால் பாஸ் ! அந்த இரானியன் சிவந்த கண்களில் ரேப் தெரிந்தது. மலமூத்ரதாரி! நீயும் குவார்க்கு நானும் குவார்க்கு. அப்ப எங்கிட்ட பணம் இல்லடா. சறுக்கென விழுந்து பழுப்பாய் எழுந்தான். ஒரு விரலைத்தருகிறேன்! ரோமனின் மகன் ரோமன்! மெக்சிகோ தேச சலவைக்காரி ஜோக்குக்கே இப்படின்னா அரிஸ்டோக்ராட்ஸ் ஜோக்... வேண்டாம்! அடிக்க வருவீர்கள். நாகு தெலுகு தெளியேது! தோத்தாங்குளி தோல்புடுங்கி! அதே ற, பெரிய ற! எப்படி அந்த ட்ரிக் என்றேன். வேலை தந்தால் சொல்கிறேன் என்றான்! க்ருஷ்ணா!... நெருடா புருடாக்கள்... இந்த ஆண்டின் சிறந்த தமிழ் பாடல் டைலமோ டைலமோ! மரத்தை சுற்றி டூயட் பாடுவதிலிருந்து வெளியே வந்துவிட்டார். நாம் சப்போர்ட் செய்யவேண்டிய படம் இது. இதெல்லாம் எங்கேந்து உருவி இருக்கேன்னு கண்டுபுடிங்க பாக்கலாம்! வாத்யாருக்கு, சென்ற நூற்றாண்டின் டாப் டென் அறிவியல் மனிதர்கள் பட்டியலில் அவர் பெயர் இல்லை என்ற வருத்தம் இருந்தது. கரையெல்லாம் செ

உயிரே, உயிரின் உயிரே!

மலக்குழி சுத்தம் செய்யும்போது மூச்சு திணறி 4 பேர் பலி. பழுதடைந்த மின்கம்பத்தில் ஊழியர் வேலை செய்யும்போது மின்சாரம் தாக்கி கரியானார். எட்டு அடி உயர சாமி சிலைக்கு அபிஷேகம் செய்கையில் வழுக்கி இறந்தார் அர்ச்சகர். இது மூன்றும் இன்றைய நிகழ்வாக இருந்தால் உங்களை அதிகம் பாதிப்பது எது? அர்ச்சகர் குடும்பத்திற்கு 16 லட்ச ரூபாய் ஊடக வெளிச்சம் காரணமாக சில நாட்களுக்குள் திரட்டப்பட்டுள்ளது... மின்சார ஊழியர், நிரந்தரப்பணியாளராக இருந்தால் மட்டுமே, அரசு இழப்பீடு கிட்டும். கரியானவர் அநேகர் கான்ட்ராக்ட் ஊழியர்கள்! (கஜா புயல் முடிந்து மின் சீரமைப்பு பணிகள் நடந்த இடங்களிலும் இந்த அவலம் நடந்தது...). மலக்குழிக்குள் மரணித்தவர்கள் - அவர்கள் குடும்பம் பற்றி யாருக்கும் கவலையில்லை. இது தினம் தினம் நடப்பதுதானே... ஏன்? நாம் இப்படி சிந்திப்பது எதனால்?? காரணம், மழுங்கிப்போன நம் உணர்வுகளே. பெருஞ்சோகத்திலும் நாவல்டி இருந்தால் மட்டுமே நாம் திகைப்போம். இதுவே வாரா வாரம் ஒருவர் இப்படி வழுக்கி விழுந்து இறந்தால் நாம் பதறமாட்டோம், பழகிப்போவதனால். நம் நாட்டில் புரையோடிப்போன பெ

சங்கமம்

உடற்சூடு தணிக்க ஆயிரம் உண்டிங்கு வழி. புவி சூடு தணிக்க மரங்களால் மட்டுமே இயலும்.  மழைத்துளி வெறும் உயிர்த்துளி மட்டுமே.  மரம் புணர்ந்து குளிர்ந்த புவி வயிற்றில் மட்டுமே அவை இறங்கும். சூல் தரிக்கும். புணர மரங்களின்றி பூமி தரிசாகி வெம்பி பாலையாவது நம் கண்முன்னே கண்டும் மேகங்களை (மழைக்)கருவூட்ட முயல்வது அறிவியலின் சாதனை. மரங்களைப்பிரிந்த பூமியின் பசலை (நோய்) கண்டும் துயரம் கொள்ளாது, வன்புணர்வாய் ஆழ்துளைகள் இட்டு நம் மோகம் தணிந்தபின் வசிப்பிடங்களின் கூரைகளில் தேக்கி அங்கிருந்து நீரிறைத்து வாழும் குலம் எங்கள் குலம். குலமானம் காக்க, இருக்கும் மரங்களையும் வேரோடு வெட்டுவது நம் சாதனை; குடிநீர் ஆலைகளும் இன்னபிறவும் அமைக்க நமக்கு நிலம் தேவையல்லவா! புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லரசுராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா அ நின்ற தாவர சங்கமத்துள் எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்த நம் குலத்திற்கு "தாவர சங்கமம்" மட்டும் புரியாமல் போனதேன்?

மண்ணு கண்ணு!

மண்ணுல உடம்பு உருண்டு பொறண்ட வரைக்கும் நல்லாதான் இருந்தோம். கால் வெரலு நிலத்தில பதிய பதிய நடந்தவரைக்கும் நல்லாதேன் போய்கிட்டு இருந்தது. உடம்பு மேல உடுப்பு ஏறிகிச்சி. காலுக்கு செருப்பு வந்தது.  காலுக்கு செருப்பு மாதிரியே நிலத்துமேல கல்லு தரை வந்தது. கல்லு தரை மேல டைல் வந்தது. டைல் மேல கார்பெட் வந்திச்சி. கார்பெட் மேல சோபா / சேர் / கட்டில் வந்திச்சி. அது மேல மெத்தை வந்திச்சி. இப்புடி ஒண்ணொன்னா மனுசன மண்ணுலந்து பிரிச்சிகிட்டே போவ, கொள்ளுத்தாத்தாவ அந்நியமா பாக்குற கொளந்த மாதிரி மண்ணையும் அந்நியமா பாத்து...ஸ்பூன்லயும் ஃபோர்க்லயும் பிட்சா தின்னு பழகிட்டு கோக்கு குடிச்சிகிட்டு போங்கு ஆட்டம் ஆடிகிட்டு கோக்குமாக்கா ஆக்கிப்புட்டோம் வாழ்க்கைய. ஆடி அலுக்குறதுக்கு முன்னயே அம்புட்டும் ஒத்துக்காது போவச்சொல்லோ அடிச்சி பிடிச்சி டாக்குட்டராண்ட ஓடுனா... அந்தாளு அந்த டெஸ்ட்டு இந்த டெஸ்ட்டுல்லாம் பண்ணி... பலான பலான மாத்திர மருந்தெல்லாம் முளுங்கியும் சொஸ்தமாவத போயி நாட்டு வைத்தியர தேடி புடிச்சா அந்தாளு நாடி புடிச்சி பாத்துகிணு... 'அரிசிக்கஞ்சி குடி. அதும் ஒத்துக்கலண்ணா கம்மங்கூழு குடி' ன்னு தொட

தாய்மொழி தின வாழ்த்துக்கள்

#உலக_தாய்மொழி_தினம் அழகே தமிழே அழகிய தமிழே என் தாய்மொழியே... இன்று உலக தாய்மொழி தினம். இந்த தினத்தை சிறப்பிக்க நான் எடுத்திருக்கும் இப்பெருவிழாவில் கலந்துகொள்ள மகிழ்வோடு வந்திருக்கும் ஏனைய உலகப்புதுமொழிகள் அனைத்துக்கும் என் முதுவணக்கம். மொழி என்பது ஒரு நிலப்பரப்பை, வாழ்வியலை பிண்ணிப்பிணைப்பது, தொப்புள்கொடி போல. இங்கு வந்திருக்கும் மற்ற மொழிகளுக்கெல்லாம் இல்லாத தனிச்சிறப்பு என் தாய்த்தமிழுக்கு உண்டு. அதன் பெயர் சேய்தமிழ்!  ஆம், வேறெங்கும் இல்லாத சிறப்பாக எம் மொழியில் மட்டுமே எம் மழலையர், சிறார்கள் எளிதாய் எம்மோடு உரையாடும் வகையில் சொற்கோவைகள் உண்டு. தச்சு மம்மம், உம்மா போன்ற சொற்கள், கேட்பவருக்குள் கடத்தும் ஆனந்தப்பரவச உணர்வுகள்... உவ்வா, ஊ என்ற சொற்கள் கடத்தும் வேதனை வலி, வேறு எந்த மொழியிலும் இல்லை, இல்லை, இல்லவே இல்லை என அறுதியிட்டுச்சொல்கிறேன்! வாழிய செந்தமிழ், வாழிய சுற்றம், வாழிய தச்சு மம்மம்! வர்ட்டா!!!!

குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சி...

கோண்ட்வானா (Gondwana) என்ற பெருநிலப்பரப்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இத்தியா, இலங்கை, மொரிஷியஸ், மடகாஸ்கர் அனைத்தையும் தாங்கி ஆப்ரிக்கா வரை நீண்ட, நீரில் மூழ்கிப்போன நிலப்பரப்பு...மேற்சொன்ன நாடுகள் மட்டுமே தப்பி மிதந்தவை. இந்த பரப்பின் மிச்சமாய் இன்றும் இந்தியாவில் வாழும் கோண்டு பழங்குடியினர், சித்திரங்கள் மூலம் வாழ்வை வெளிப்படுத்துபவர்கள். அபூர்வமான சித்திரங்கள், மனதை மயக்கும் வண்ணங்களில். பறவைகள், மிருகங்கள், மரங்கள், மீன்கள் என பிண்ணிப்பிணைந்த இவர்களது ஓவியங்களில் மனிதர்களுக்கு மட்டும் இடமில்லை! இயற்கையோடு ஒன்றி, கொண்டாடி வாழும் இவர்களது மகிழ்வின் வெளிப்பாடான இவ்வோவியங்களில் (அழிவின் கருவியாக ஆகிப போன) மனிதர் இல்லாதிருப்பது பொருத்தம்தானே? ஆதி மனிதன் எந்த நிலப்பரப்பில் இருந்து தோன்றினான்? ஆரியமா? திராவிடமா? என்றெல்லாம் மரபியல் ஆய்வு செய்யும் நிபுணர்கள் இந்த மக்களின் கதையை, வேர்களை, மரபணுக்களை சீந்துவதே இல்லை (அவர்களுக்கு உண்மை தெரிந்ததனால்கூட இருக்கலாம்!) ஐன்கார் சிங் ஸ்யாம்; கோண்டு தொல்குடி இளைஞன். மத்தியப்பிரதேசத்தில் நர்மதை நதி தீரத்தின் காடுகளில் ஒரு

மகாபாரத சங்கிலி்...

மகாபாரதம் தொட்டே ஒன்றின் விளைவாய் இன்னொன்று அதன் விளைவாய் இன்னொன்று என்றே வாழ்வின் சிக்கல்கள்... Plebiscite எனப்படுகிற, காஷ்மீர் மக்களின் விருப்பம் கேட்டு இந்தியாவுடனா? பாகிஸ்தானுடனா? தனியாகவா? என்ற முடிவை அடைய ஒரு வாய்ப்பு இருந்தது. இப்போது இல்லை... மண்ணின் மக்களான காஷ்மீரி பண்டிட்டுகள் வன்முறைக்கு பயந்து புலம் பெயர்ந்து வெகு காலம் ஆச்சு. இப்போது உள்ளவர்கள் true representatives எனகொள்ள இலாது. அங்கு வாழ்வாதாரம் பெருக்கி, அமைதியை உறுதி செய்தால் மட்டுமே சூழல் மாறும். செவ்வாய் / சந்திரனுக்கு நம் அரசுகள் செய்யும் செலவில் ஒரு பங்கிலேயே தொழில் நுட்ப உதவி கொண்டு நம் எல்லையை காக்கும் அரண் அமைக்க முடியும்...உறுதியாய் முயன்றால். காஷ்மீர் என்ற ஒற்றைப்புள்ளியில் பிளவுபட்ட பாகிஸ்தான் இணைவதும், அரசியல் பகடை காஷ்மீர் மீது உருட்டப்படுவதும், ஆதாயம் தேடும் சைனாவின் கரங்கள் பகடைகளை உருட்டுவதும், அப்பாவி இந்தியர்கள் அறியாது பழிக்குப்பழி என குரலெழுப்புகிறார்கள். மிக விரைவில், அரசியல் பொருளாதார ரீதியில் பிளவுபட்ட இந்தியாவை இணைக்கும் புள்ளியாகவும் காஷ்மீர் மாறக்கூடிய அபாயம் உள்ளது. சி

வாக்குருதி...

42 உயிர்கள், என் சகோதரர்கள், போர் முனையில் இறக்கவில்லை; பணிக்கு திரும்பும் வழியில், கோழைத்தனமான, மிருகத்தனமான தாக்குதலினால்... கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற ஹமுராபி கால சட்டங்களால்/தண்டனைகளால் இவற்றை அணுக இயலாது. அவ்வாறு குரல் எழுப்புபவர்கள் எழுப்பட்டும், பயனிருக்காது. குறைந்தது 50 வாகனங்கள், குற்றத்தடுப்பு வீரர்கள் பயணம் செய்யும் பாதையில் இது சாத்தியப்பட்டிருக்கிறது, இரு நாட்களுக்கு முன்பு துப்பு கிடைத்தும்... ஆள்வது எவராக இருந்தாலும் அணுகுமுறையில் பெரிய மாற்றங்கள், இயலாது, முயன்றாலும்... நிலப்பரப்பும் அரசியல் பொருளாதார இழைகளும் பிண்ணிப்பிணைந்த சிக்கல் இது. Standard Operating Procedure இதற்கும் உண்டு. இத்தகைய நிகழ்வுகள் இந்திய நிலப்பரப்பில் எங்கு நிகழ்ந்தாலும் சரிசெய்யப்படவேண்டியவை, அது சுக்மாவில் என்றாலும், தூத்துக்குடியில் என்றாலும், மும்பையில் என்றாலும், காஷ்மீர எல்லையில் என்றாலும். நாம் எதி்ப்புக்குரல் எழுப்ப வேண்டியது இவை அனைத்திற்கும் எதிராகவே. நம் இறையாண்மை என்பது எல்லையில் மட்டும்தானா என்ன? அமைதியாய், வேண்டுவோம், இறந்தோர் ஆன்மா இறையடி அடையவும்

Before Sunset

வியன்னா ரயில் நிலையத்தில் ஜெஸ்ஸியும் செலினும் விடைபெற்று பத்து ஆண்டுகள் ஓடிவிட்டது. 2004. ஜெஸ்ஸி இப்போது ஒரு எழுத்தாளன். முப்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறான். தான் எழுதிய நாவல் பாப்புலராகி France இல் உள்ள ஒரு நூல் விற்பனையகத்தில் ஒரு வாசகர் கலந்துரையாடலுக்காக அழைப்பின் பெயரில் 'ஒரு நாள் பயணத்தில்' அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான்.  வியன்னா ரயில் நிலையத்தில் 'ஆறு மாதங்களில் சந்திப்போம்' என்ற திட்டத்தோடு நாயகன் நாயகி விடைபெறுவதாக அவனது நாவல் முடிகிறது. கலந்துரையாடல் நீள்கிறது. மூன்று வாசகர்கள். அதில் ஒருவர் 'கண்டிப்பாக ஜெஸ்ஸியும் செலினும் மீண்டும் சந்தித்து இணைந்திருப்பார்கள்' என்கிறார்.  இரண்டாமவர், 'இல்லை, சந்தித்திருக்க மாட்டார்கள்' என காரணங்களை விளக்க,  மூன்றாமவர் ஜெஸ்ஸியிடமே கேட்கிறார், 'அவர்கள் சந்தித்தார்களா?' என்று. 'தெரியவில்லையே!' என்கிறான் ஜெஸ்ஸி. கடை உரிமையாளர், அவனுக்கு விமான நிலையம் செல்ல நேரமாகிவிட்டதென்று உணர்த்துகிறார். அவனும் வாசகர்களிடம் விடைபெறும் தருணத்தில் கடையின் கண்ணாடி கதவுக

அக்கினிக்கு கற்பு வந்த கதை

என் செயல்களுக்கு காரணம் கேட்காதே, மறைந்துபோவேன் என்றாள் ஒருத்தி. ஐவரல்ல... அறுவர். ஆனால் இதை ஊருக்கு உரக்கச்சொல்ல முடியாதே என்றாள் ஒருத்தி. மூன்று வரம் கேட்டாள் ஒருத்தி. பீஷ்மனின் தலை கேட்டாள் ஒருத்தி. மாயமான் கேட்டாள் ஒருத்தி. மணமானவன் மேல் (மூக்கு அறுபட) மையல் கொண்டு சினந்தாள் ஒருத்தி. உன் கரம் பட்டாலே தீக்குளிப்பேன் என்றாள் ஒருத்தி. ஒருவனின் தொடை ரத்தம் கேட்டாள் ஒருத்தி. கொண்டு வந்ததை வழக்கம்போல் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றாள் ஒருத்தி. அதனால் ஐவரின் மனைவியானாள் ஒருத்தி. ஒருத்தியின் அம்பு பீஷ்மனை துளைத்தது. ஒருத்தியின் ஆற்றாமை வாலியை வதைத்தது. ஒருத்தியின் சிரிப்பு அரக்கு மாளிகையை எரித்தது, அவள் சேலையை உரித்தது. நூற்றுவரை அழித்தது. ஒருத்தியின் கற்பு இலங்கையை எரித்தது, அவள்மீதான பேராசை இலங்கேசனை அழித்தது. காவியங்கள் இந்த 'ஒருத்தி'களின்மீதே கட்டி எழுப்பப்பட்டன. களப்பலியானவனின் மனதைக்கவர்ந்தவளும், சக்ரவியூகத்தில் சிக்கியவன் மனையாளும் இந்த ஒருத்திகளில் அடக்கம். ஐவரின் தாய் பத்தினியா என எவரும் கேட்கவில்லை. ஐவரின் மனை