முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிரே, உயிரின் உயிரே!


மலக்குழி சுத்தம் செய்யும்போது மூச்சு திணறி 4 பேர் பலி.

பழுதடைந்த மின்கம்பத்தில் ஊழியர் வேலை செய்யும்போது மின்சாரம் தாக்கி கரியானார்.

எட்டு அடி உயர சாமி சிலைக்கு அபிஷேகம் செய்கையில் வழுக்கி இறந்தார் அர்ச்சகர்.

இது மூன்றும் இன்றைய நிகழ்வாக இருந்தால் உங்களை அதிகம் பாதிப்பது எது?

அர்ச்சகர் குடும்பத்திற்கு 16 லட்ச ரூபாய் ஊடக வெளிச்சம் காரணமாக சில நாட்களுக்குள் திரட்டப்பட்டுள்ளது...

மின்சார ஊழியர், நிரந்தரப்பணியாளராக இருந்தால் மட்டுமே, அரசு இழப்பீடு கிட்டும். கரியானவர் அநேகர் கான்ட்ராக்ட் ஊழியர்கள்! (கஜா புயல் முடிந்து மின் சீரமைப்பு பணிகள் நடந்த இடங்களிலும் இந்த அவலம் நடந்தது...).

மலக்குழிக்குள் மரணித்தவர்கள் - அவர்கள் குடும்பம் பற்றி யாருக்கும் கவலையில்லை.
இது தினம் தினம் நடப்பதுதானே...

ஏன்? நாம் இப்படி சிந்திப்பது எதனால்??

காரணம், மழுங்கிப்போன நம் உணர்வுகளே.

பெருஞ்சோகத்திலும் நாவல்டி இருந்தால் மட்டுமே நாம் திகைப்போம்.

இதுவே வாரா வாரம் ஒருவர் இப்படி வழுக்கி விழுந்து இறந்தால் நாம் பதறமாட்டோம், பழகிப்போவதனால்.

நம் நாட்டில் புரையோடிப்போன பெரு வியாதி, Survivor Bias; 'அப்பாடா, நாம இன்னும் இருக்கோம், நமக்கு வேண்டியதை பெறுகிற வசதி இருக்கிறது!' என்ற மனப்பான்மை. இதற்கு வர்ணபேதம் கிடையாது.

மின் வாரியத்திலும் இன்றுவரை கான்ட்ராக்ட் ஊழியர்கள் பழுதடைந்த மின் கம்பங்களில் செப்பனிடும் பணியில் இருக்கையில் மின்சாரம் தாக்கி இறந்துபோவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது...  

அடிப்படை பாதுகாப்பு வசதிகள்கூட இல்லாத, உயிரைப்பணயம் வைக்கும் தொழிலாய் இவை மாறிப்போனால் நமக்கென்ன? நம் வீட்டு மலக்குழி காலியாகணும், கழிப்பறையில் விளக்கு எரியணும்...

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அதை சந்திரனில் ஆட்களை இறக்குவதற்கு பயன்படுத்துவதா அல்லது மலக்குழிகளில் / மின்கம்பங்களில் நம் குடிமக்கள் இறப்பதை தடுக்க பயன்படுத்துவதா என்பதை நாம்தான் முடிவு செய்கிறோம், அரசுகள் வழியே, நம் வாக்குகள் வழியே...

ஸ்வச் பாரத்தில் கட்டப்பட்ட லட்சக்கணக்கான மலக்குழிகள்... அட போங்கப்பா, அவற்றை மக்கள் பயன்படுத்தினால்தானே அவை நிறையும் என்கிறீர்களா?!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்