முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுஜாதா...


பத்து வருசம் ஆய்டிச்சா வாத்யாரே !
-------------------------------------------------------+---------

சாலு மால் பாஸ் !

அந்த இரானியன் சிவந்த கண்களில் ரேப் தெரிந்தது.

மலமூத்ரதாரி!

நீயும் குவார்க்கு நானும் குவார்க்கு.

அப்ப எங்கிட்ட பணம் இல்லடா.

சறுக்கென விழுந்து பழுப்பாய் எழுந்தான்.

ஒரு விரலைத்தருகிறேன்!

ரோமனின் மகன் ரோமன்!

மெக்சிகோ தேச சலவைக்காரி ஜோக்குக்கே இப்படின்னா அரிஸ்டோக்ராட்ஸ் ஜோக்... வேண்டாம்! அடிக்க வருவீர்கள்.

நாகு தெலுகு தெளியேது!

தோத்தாங்குளி தோல்புடுங்கி!

அதே ற, பெரிய ற!

எப்படி அந்த ட்ரிக் என்றேன். வேலை தந்தால் சொல்கிறேன் என்றான்!

க்ருஷ்ணா!...

நெருடா புருடாக்கள்...

இந்த ஆண்டின் சிறந்த தமிழ் பாடல் டைலமோ டைலமோ!

மரத்தை சுற்றி டூயட் பாடுவதிலிருந்து வெளியே வந்துவிட்டார். நாம் சப்போர்ட் செய்யவேண்டிய படம் இது.

இதெல்லாம் எங்கேந்து உருவி இருக்கேன்னு கண்டுபுடிங்க பாக்கலாம்!

வாத்யாருக்கு, சென்ற நூற்றாண்டின் டாப் டென் அறிவியல் மனிதர்கள் பட்டியலில் அவர் பெயர் இல்லை என்ற வருத்தம் இருந்தது.

கரையெல்லாம் செண்பகப்பூ, காயத்ரி, ப்ரியா போன்ற திரையாக்கங்கள் மீது வருத்தம் இருந்தது.

அவர் கதைகளுக்கு பேமெண்ட் ஒழுங்காய் வராத பல பொழுதுகளில்  வருத்தம / கவலை / ஏமாற்றம் வத்ததில்லை.

பாய்ஸ் பட வசனங்களுக்கு. திரைக்கதைக்கு வசவுகளும் காறி உமிழ்தலும் கிட்டியபோதும் வருந்தவில்லை. என்போன்ற தீவிர ரசிகரான என் நண்பர் அனந்து அவருக்கு மின்னஞ்சலில் 'I feel sorry for your dialogues' என்ற ரீதியில் எழுதிய மெயிலுக்கு, 'No, You don't'! என்று பதில் வந்தது.

எழுத்து முழுவதும் உறுத்தாது நிறைந்திருக்கும் ஆளுமை, மேதைத்தன்மை, நகைச்சுவை! 

Subtle Humour க்காகவே வாத்யாருக்கு ஒரு சிலை வைக்கலாம். Spoonerism பற்றி விளக்க அவர் ஆனந்த விகடனில் தந்த இரு உதாரணங்கள்!!!!!

(1. தமிழகத்தில் மக்கள்...
2. ஓட்டை...).

தலைவா யூ ஆர் க்ரேட் என்று நண்பன் பட பாணியில் ரசிகர்கள் நாங்கள் இன்று சல்யூட் செய்து selfie பதிந்தால், 'Oh My! World is filled with Crazy Bums!' என அனைத்து நாடுகளின் செய்திகளிலும் வைரல் தலைப்பாக இருக்குமளவிற்கு உலகெங்கும் he has left so many crazy bums!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...