முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாக்குருதி...


42 உயிர்கள், என் சகோதரர்கள், போர் முனையில் இறக்கவில்லை; பணிக்கு திரும்பும் வழியில், கோழைத்தனமான, மிருகத்தனமான தாக்குதலினால்...

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற ஹமுராபி கால சட்டங்களால்/தண்டனைகளால் இவற்றை அணுக இயலாது. அவ்வாறு குரல் எழுப்புபவர்கள் எழுப்பட்டும், பயனிருக்காது.

குறைந்தது 50 வாகனங்கள், குற்றத்தடுப்பு வீரர்கள் பயணம் செய்யும் பாதையில் இது சாத்தியப்பட்டிருக்கிறது, இரு நாட்களுக்கு முன்பு துப்பு கிடைத்தும்...

ஆள்வது எவராக இருந்தாலும் அணுகுமுறையில் பெரிய மாற்றங்கள், இயலாது, முயன்றாலும்... நிலப்பரப்பும் அரசியல் பொருளாதார இழைகளும் பிண்ணிப்பிணைந்த சிக்கல் இது. Standard Operating Procedure இதற்கும் உண்டு.

இத்தகைய நிகழ்வுகள் இந்திய நிலப்பரப்பில் எங்கு நிகழ்ந்தாலும் சரிசெய்யப்படவேண்டியவை, அது சுக்மாவில் என்றாலும், தூத்துக்குடியில் என்றாலும், மும்பையில் என்றாலும், காஷ்மீர எல்லையில் என்றாலும்.

நாம் எதி்ப்புக்குரல் எழுப்ப வேண்டியது இவை அனைத்திற்கும் எதிராகவே. நம் இறையாண்மை என்பது எல்லையில் மட்டும்தானா என்ன?

அமைதியாய், வேண்டுவோம், இறந்தோர் ஆன்மா இறையடி அடையவும், அவர்களது இறப்பு வீணாகக்கூடாது என்றும். 

இதையும் தாண்டி தீவிரமாய் ஏதாவது நாட்டிற்காக செய்ய விரும்பினால் வீட்டுக்கு ஒருவரை தேசம் காக்க அனுப்புவோம்.

பின் குறிப்பு: என் தமையன் எல்லைப்பதுகாப்புப்படையில் காஷ்மீரில் பணிசெய்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் ஒருவராய் சூடான் நாட்டின் Darfur நகரில் ஆறு மாதங்கள் ராணுவ குடியிருப்பு ஒன்றில் 'யார், எங்கிருந்து, எதற்காக, எப்போது சுடுவார்கள்' என்ற சூழலில் இருந்து திரும்பியவர்; தேசங்களை தாண்டியும் நீளும் நம் வீரர்களின் பணி. அவர்களது உயிர், நாடுகளின் ஆடு புலி ஆட்டத்தில் பலியாவது உலகம் முழுவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

பலியானது ஒற்றை உயிராக இருந்தாலும்கூட, தியாகத்துக்கு மதிப்பு சேர்ப்பது ஆள்பவர் கைகளில். யாரை ஆள்பவர் ஆக்குவது என்பது நம் கைகளில்...

எல்லையில் நம் கேளிர் சிந்திய இரத்தத்தி்ன் பிசுபிசுப்பு நம் ஆள்காட்டி விரல் மையாகட்டும் என வேண்டுகிறேன்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

96. மூன்றாவது, இறுதி ரிவ்யூ!

96 மூன்றாவது ரிவ்யூ! சன் டிவி, தீபாவளி மாலையில் இந்த நல்ல படத்தை விளம்பரங்களின் இடைவெளியில் துண்டு துண்டாய் ஒளிபரப்பியதாலும், ஆனந்த விகடன் மிக நல்ல விமரிசனம் எழுதிவிட்டு 46 மதிப்பெண் மட்டுமே சம்பந்தமில்லாது கொடுத்ததாலும், நல்ல படங்களின் ரசிகர்கள் இதனை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை தவறவிட்டனர் என்றே எண்ணுகிறேன். So, blame it on Sun TV and Anandha Vikatan for this third review :-) வசந்தா லக்‌ஷ்மியின் லில்டிங் ம்யூசிக் - அற்புதம். ஆனால் இந்த படத்திற்கு இசை தேவையில்லை. டிவிடியில் இந்த படம் வெளியிடும்போது பிஜிஎம் இல்லாது கேட்க ஒரு ஆப்ஷன் இருந்தால் நான் சொல்வதன் காரணம் விளங்கும். பாடல்கள் எழுதப்பட்ட விதம், இடம்பெற்ற சொற்கள், பயன்படுத்தப்பட்ட, படமாக்கப்பட்ட விதம், தமிழுக்கு புதுசு. ரசித்து ருசித்த வரிகளை இங்கே கோர்த்துள்ளேன். உமா தேவி, தமிழில் PhD, பேராசிரியை, செதுக்கினாற்போல தமிழ் சொற்களை பயன்படுத்தி சினிமாவிலும் நற்கவிதைகள் நெய்கிறார். கார்த்திக் நேதா - நா. முத்துக்குமாரின் அடியொற்றி.  இவர்களது நற்கவிதைகள் நமது கேளனுபவத்தை பலமடங்கு உயர்த்தும், வ...