முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குயிலப்புடிச்சி கூண்டில் அடைச்சி...


கோண்ட்வானா (Gondwana) என்ற பெருநிலப்பரப்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இத்தியா, இலங்கை, மொரிஷியஸ், மடகாஸ்கர் அனைத்தையும் தாங்கி ஆப்ரிக்கா வரை நீண்ட, நீரில் மூழ்கிப்போன நிலப்பரப்பு...மேற்சொன்ன நாடுகள் மட்டுமே தப்பி மிதந்தவை.

இந்த பரப்பின் மிச்சமாய் இன்றும் இந்தியாவில் வாழும் கோண்டு பழங்குடியினர், சித்திரங்கள் மூலம் வாழ்வை வெளிப்படுத்துபவர்கள். அபூர்வமான சித்திரங்கள், மனதை மயக்கும் வண்ணங்களில். பறவைகள், மிருகங்கள், மரங்கள், மீன்கள் என பிண்ணிப்பிணைந்த இவர்களது ஓவியங்களில் மனிதர்களுக்கு மட்டும் இடமில்லை!

இயற்கையோடு ஒன்றி, கொண்டாடி வாழும் இவர்களது மகிழ்வின் வெளிப்பாடான இவ்வோவியங்களில் (அழிவின் கருவியாக ஆகிப போன) மனிதர் இல்லாதிருப்பது பொருத்தம்தானே?

ஆதி மனிதன் எந்த நிலப்பரப்பில் இருந்து தோன்றினான்? ஆரியமா? திராவிடமா? என்றெல்லாம் மரபியல் ஆய்வு செய்யும் நிபுணர்கள் இந்த மக்களின் கதையை, வேர்களை, மரபணுக்களை சீந்துவதே இல்லை (அவர்களுக்கு உண்மை தெரிந்ததனால்கூட இருக்கலாம்!)

ஐன்கார் சிங் ஸ்யாம்; கோண்டு தொல்குடி இளைஞன். மத்தியப்பிரதேசத்தில் நர்மதை நதி தீரத்தின் காடுகளில் ஒரு கிராமத்தில் வளர்ந்தவன். பூர்வகுடிப்பாடகன், ஓவியன்.

1980களில் டெல்லியில் ஒரு விற்பனை கண்காட்சியில் தான் வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்த, விரைவில் கலைக்கண்கள் பல மொய்த்தன. அவனது ஓவியங்கள் பிரபலமாகி, வாய்ப்புகள் பெருகின, ஆதரிப்பவர்களும் பெருகினர்.





புலம் பெயர்ந்து, பெரு நகர ம்யூசியங்களுக்காகவும், ஆர்ட் காலரிகளுக்காகவும் வரையத்தொடங்கினான், சின்னூண்டு பேப்பர் முதல் மிகப்பெரிய சுவர்கள் வரை அவனது ஓவியங்கள் மிளிர்ந்தன.


அகில இந்திய வெளிச்சம், உலக வெளிச்சமாக மாற, 2000 ஆம் வருடம் ஜப்பானில் ஒரு ம்யூசியத்தில் resident artist என்கிற கௌரவத்துடன் (ஊதியம் சொற்பமாய்தான் என்றாலும்) Well Wishers மூலம் இடம் பெயர்ந்தான், ஓவியங்கள் வரைந்தான், வேற்று கலாசார, நில, தனிமையில் வாடினான், ஊர் திரும்ப விரும்பியும் 'இன்னும் ஒரு வருசம்தான், போய்டலாம்' என்ற சமாதானங்களால் துன்புற்று... தற்கொலை செய்துகொண்டான், அவனது ஓவியங்களில் தன் ஆன்மாவை பதித்துவிட்டு...


புலம் பெயர்தலின் வலி, இந்த தொல்குடி இளைஞனின் கலையை, வாழ்வை தின்றுவிட்டது. 

இவனது திறமைகள் இல்லாவிட்டாலும்கூட பொருளாதார, சமூக மதிப்பீட்டு சிக்கல்களினால் புலம் பெயர்ந்த ஒவ்வொருவரும் உணர்வர் இந்த வலியை.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்