முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அக்கினிக்கு கற்பு வந்த கதை


என் செயல்களுக்கு காரணம் கேட்காதே, மறைந்துபோவேன் என்றாள் ஒருத்தி.

ஐவரல்ல... அறுவர். ஆனால் இதை ஊருக்கு உரக்கச்சொல்ல முடியாதே என்றாள் ஒருத்தி.

மூன்று வரம் கேட்டாள் ஒருத்தி.

பீஷ்மனின் தலை கேட்டாள் ஒருத்தி.

மாயமான் கேட்டாள் ஒருத்தி.

மணமானவன் மேல் (மூக்கு அறுபட) மையல் கொண்டு சினந்தாள் ஒருத்தி.

உன் கரம் பட்டாலே தீக்குளிப்பேன் என்றாள் ஒருத்தி.

ஒருவனின் தொடை ரத்தம் கேட்டாள் ஒருத்தி.

கொண்டு வந்ததை வழக்கம்போல் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றாள் ஒருத்தி.
அதனால் ஐவரின் மனைவியானாள் ஒருத்தி.

ஒருத்தியின் அம்பு பீஷ்மனை துளைத்தது.

ஒருத்தியின் ஆற்றாமை வாலியை வதைத்தது.

ஒருத்தியின் சிரிப்பு அரக்கு மாளிகையை எரித்தது, அவள் சேலையை உரித்தது. நூற்றுவரை அழித்தது.

ஒருத்தியின் கற்பு இலங்கையை எரித்தது, அவள்மீதான பேராசை இலங்கேசனை அழித்தது.

காவியங்கள் இந்த 'ஒருத்தி'களின்மீதே கட்டி எழுப்பப்பட்டன. களப்பலியானவனின் மனதைக்கவர்ந்தவளும், சக்ரவியூகத்தில் சிக்கியவன் மனையாளும் இந்த ஒருத்திகளில் அடக்கம்.

ஐவரின் தாய் பத்தினியா என எவரும் கேட்கவில்லை.

ஐவரின் மனைவி பத்தினியா என எவரும் கேட்கவில்லை. 

(அக்காவியத்தின் மையம் வேறு.)

இன்னொரு காவியத்தின் மையம் கருதி, கற்புடை மனைவி பத்தினியா என ஊர் கேட்க, கட்டியவன் கேட்காமல் கேட்டது ஒற்றைக்கேள்வி, அக்கினிக்கேள்வி. 

விடையாய் அக்கினிக்குள் அவள் புக, அக்கினியும் கற்பு பெற்றது அன்றுதான்.

அதன் பின்னான நாட்களிலெல்லாம் நின்றாடும் சுடரிலெல்லாம் சீதையின் உயிர். 

ஊதி அணைப்பது வேண்டாமே... 

(அணைந்தபின் சுழலும் புகையில் இன்னும் பறக்கிறது கிழக்கழுகு...)

'எங்கெலாம் தலைவனின் நாமம் ஒலிக்கிறதோ அங்கெலாம் நானிருப்பேன்' என 'விடையறியும்' ஆவலில் காத்திருக்கும் வானரத்துக்கு இன்னமும் அந்தக்கேள்வி கன்னத்துள் அடைபட்டே இருக்கிறது...பயத்தாலோ பக்தியாலோ...

யுகங்களின் ஊடாக இரு காவியங்களையும் இணைக்க முடிந்த அக்குரங்குக்கு காவியங்களின் மையங்களோ, அக்கினியை ஏவிய மனித மனமோ புரிபடுமா என்ன?! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்