முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூணாம் ஸ்டாப்பு: கும்மோணம் டு ராம்நாட், ரைட் ரைட்!



கோவிந்தசாமி என் முதல் பேபி க்ளாஸ் தோழன். என்னைப்போலவே அரைக்கால் டவுடசரில் என்னைப்போலவே மூக்கு ஒழுகிக்கொண்டு.


ஸ்டெல்லா டீச்சர் எங்கள் வகுப்புக்குள் நுழையும்போதே வானிலை சட்டென்று மாறிப்போகும். பிழையின்றி அனா ஆவன்னா, ஏ பீ சீ டீ, ஒண்ணு ரெண்டு மூணு எழுத கற்றுத்தந்தவரின் முகத்தில் சதா ஒரு மென்சோகம் குடியிருக்கும். எப்போதும் எளிமையான புடவை உடையில் வருவார். உணவுப்பற்றாக்குறை தேகம். கண்கள் கடல் அளவு பெரிது, இன்றும் மாறாது நினைவில் நிற்கிறது.


ஆர். சி. மார்னிங் ஸ்டார் பள்ளியில் கல்ச்சுரல்ஸ் என்பது ஒரு S. S. ராஜமௌலி ப்ரொடக்சன் போல, so rich in settings and costumes. ஏதோ ஒரு பாடலுக்கு ஒரு பெரிய தாமரை மலர் ஸ்டேஜில் ஓப்பன் ஆகி உள்ளிருந்து நட்சத்திரக்கோல் ஏந்திய தேவதைக்குட்டிப்பெண் ஒருத்தி வெளியே வருவாள். அந்த precise மொமெண்டில் ஸ்டேஜில் மேகம் போல புகை சூழும்! இதெல்லாம் நடந்தது  கும்மோணம் என்கிற சிறிய டவுனில், பின்-1970 களில்  ஒரு சிறிய பள்ளியில்!


இப்படிப்பட்ட ஒரு சரித்திர ஸ்டேஜில் ஒரு நாள் ஸ்டெல்லா டீச்சர் எங்களை ஏற்றிவிட்டார்! அவர் கேட்கும்போது யாராவது மறுக்கமுடியுமா?


கோவிந்தசாமி, நான், வீரமணி அப்புறம் சில பெண்டு பிள்ளைகள் இதுதான் எங்கள் குழு.

"

டிக் டாக் டிக் டாக் 

சேய்ஸ் த்ரீ ஓ க்ளாக் 

"

என ஒரு முனையில் தொடங்கி வரிசையின் மறு முனையில் 

"

டிக் டாக் டிக் டாக்

சேய்ஸ் நைன் ஓ க்ளாக் 

"

என ஒரே ரைமிங்கில் கைகளை கடிகார முட்களின் பொசிஷன் போல காண்பிக்கவேண்டும்.


ஏராளமான ஒத்திகைகள் முடிந்து அந்த சம்பவ நாள் வந்த்து. 


கருப்பு உடையில் வெள்ளை ரோஜாக்கள் தங்க நிற நூலால் எம்ப்ராய்ட்ரி செய்த சட்டை ஒன்று பல காலமாய் என் நினைவில் வாசனை குறையாமல் மொடமொடப்பு கூட இன்றும் புதிது போல உலவிக்கொண்டிருக்கிறது. அதுதான் என் முதல் ஸ்டேஜ் ட்ரஸ்!


கூட்டமாய் மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள் தரையில் சமுக்காளமிட்டு கூடியிருக்க நாங்கள் ஸ்டேஜில் ஏறினோம்.


"ஸ்பாட் லைட்ஸ் ஆன்!" என ஒரு குரல். சட்டென வெளிச்ச மழையில் நனைந்து நாங்கள் ஏழு பேர்.  பேனிக் அட்டாக் என்றால் அப்படி ஒரு அட்டாக்! பாடல் மறந்து போனது!!


சில நிமிடங்கள் நிசப்தம். ஆர்வத்தோடு பார்வையாளர்கள் எங்களை நோக்க... ஆடியன்சை கண்களால் பூதக்கண்ணாடி கொண்டு தேடிய என் கண்களில் பட்டது அந்த முகம்! எனது பள்ளியில் படிக்கும் என் அக்காவின் முகம். என்னை விட நாலு வயது பெரியவர். அம்மா அப்பா புடை சூழ தரையில் அமர்ந்திருந்தார்.


அந்த நொடியில் இருப்பு மறந்துபோய், மேடை மறந்துபோய், பள்ளிக்கூடம்... கூட்டம் எல்லாம் மறந்துபோய்... அடிவயிற்றிலிருந்து ஆனந்தமாய் குரலெடுத்து கத்தினேன் மைக்கில்; "ஏய் மாலாஆஆஆஆஆ! நான் இங்கே இருக்கேண்டீஈஈஈஈஈ!" 


அவ்ளோ பெரிய ஸ்டேஜில தக்குணூண்டாய் நின்றிருப்பதின் நெர்வஸ்னெஸ்ஸில் + தன் இருப்பை அவருக்கு அடையாளப்படுத்தும் ஆவலில் அந்த அரை டவுசரின் ஔட்சைஸ் கத்தலில் அடுத்த சில நிமிடங்கள் ஆடியன்சு சைடில் அமளி துமளி! 


சற்றும் எதிர்பாராத இந்த கூக்குரல் தாக்குதல் எல்லோரது கவனத்தையும் அக்கா மீது திருப்ப, வெட்கம் கோபம் பயம் போன்ற கலவையான உணர்வுகளுடன் அக்கா அங்கிருந்து எழுந்து ஒளிய இடம் தேடி மின்னலாய் ஓட... ஆரவாரம் அடங்க பல நிமிடங்களாயிற்று.


அதென்ன மாயமோ தெர்ல பயமெல்லாம் அந்த நொடில சட்டுனு போய்டுச்சி!


நாலு மணி டு ஒன்பது மணி பாடலை நாங்கள் பாடி முடிக்க, சில நாட்கள் கழித்து பள்ளியில் ஒரு மதிய உணவு இடைவேளைக்கு பின்னான உறக்க வகுப்புக்கு முன் எங்கள் குழுவுக்கு ஸ்டெல்லா டீச்சர் தன் சொந்த காசில் லாலிபாப் வாங்கித்தந்தார். எனது லாலிபாப்பின் நிறம்  சிவப்பு! Memories are crazy you know. And they have the power to surprise! A wonderful time machine that can transport us to anywhere anytime in a blink. What we do with those memories is an entirely different thing though!


பயணம் - தொடரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...