தமிழ்நாடு விவசாய கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறுகையில் காற்றில் மிதந்து காதை வருடியது இளையராஜாவின் இசையில் அற்புதமான பாடலொன்று. ஒரு போட்டிக்கான ஒத்திகை என்பதை இசை தப்பி அதிர்ந்த கருவிகளும், முதல் ஹம்மிங்கை நிறுத்தி நிறுத்தி திரும்பப்பாடிய பாடகியின் தேன் குரலும். நாங்கள் செய்யப்போன திகிலான வேலையொன்று எங்களை நின்று ரசிக்க விடாமல் வெளியே தள்ளிச்சென்றது. யாரந்த நாங்கள்? என்னதான் அந்த திகிலான வேலை? கோவை. 1990களில் ஒரு பழம்பெருமை வாய்ந்த பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவர்கள் நாங்கள். வகுப்புகள் தொடங்கிய சில நாட்களில் இருந்தே எங்கள் கல்லூரி விடுதி அறைகளில் எங்களுக்கு சொந்தமான பொருட்கள் காணாமல் போனவண்ணம் இருந்தன. எனது பாக்கெட் ரேடியோ, அறை நண்பனின் கைக்கடிகாரம், இன்னொரு அறைத்தோழனின் இஸ்திரிப்பெட்டி என வகை வகையான பொருட்கள். விடுதி காவலரிடமும், விடுதி கண்காணிப்பாளரிடமும் முறையிட்டும் களவு தொடர்ந்தது. இரவின் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு நண்பர்கள் கண் விழித்து பல நாட்கள் கண்காணித்து கண்டுபிடித்தது ஒரு திடுக்கிடும் உண்மை; விடுதி மாணவர்களில் இருவர்தான் 'நாயகர்கள்'. அவர்களுக்கு இறுதி...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!