முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்யாணம்ம்ம்....ஆகா கல்யாணம்!

  1500 பேருக்கு மேலே கலந்துகொண்ட ஒரு திருமண விழாவில் எனக்கு ஏனோ இந்த படம் மட்டுமே எடுக்கத்தோன்றியது. ஏராளமான விருந்தினர்கள் விதம் விதமான அலங்காரத்தில். தலைக்கு மேலே மெல்ல whirஇட்டு செல்லும் Drone கேமராக்கள், நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டு நிகழ்ந்த நடனங்கள், flash mob dances, மெல்லிசை, வான வேடிக்கைகள் இவை எதுவுமே என்னை ஈர்க்கவில்லை. நாற்பது கடந்த event management பெண்கள், கேரள பெண்கள் போல உடை உடுத்து உடலை வளைத்து கஷ்டப்பட்டு ஆடிய மாப்பிள்ளை வரவேற்பு நடனங்களும், மாப்பிள்ளையை எதிர்கொண்டு 'நகரும் பூப்பந்தல்' கீழே வரவேற்ற மணப்பெண்ணும், வரவேற்பு மேடையில் அத்தனை பேருக்கு முன் மாப்பிள்ளை, பெண் + நட்புகள் ஆடிய நடனமும், அங்கங்கே முறுக்கேறிய தசைகளுடன் இறுகிய முகத்துடன் நின்றிருந்த சீருடை Bouncerகளும் கவனம் ஈர்க்கவில்லை. இந்த மனிதர் மட்டுமே. தன் கடமையை (உணவு சமைப்பது) முடித்துவிட்ட நிம்மதியில் தன்னை சுற்றி நடக்கும் ஆரவாரங்களுக்கு மத்தியில் தனக்கு பிடித்த ஏதோவொரு காட்சியை தன் கைபேசியில் ஒன்றிப்போய் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த மனிதர் எனக்கு ஏகாந்தமான ஒரு உணர்வை தருவது தெரியாமலே தந்துபோனார். ...

சம்பவ விவரணம் நாலர சங்கம்!

  இந்த நாலரை கேங் தொட்டதெல்லாம் ஏழரை! ஆறு எபிசோட். மொத்தமாய் 3.5 மணி நேரம். திருவனந்தபுரத்தில் ஐந்து விடலைப்பசங்கள் மெல்ல மெல்ல குற்ற உலகத்தில் நுழைவதையும் அவர்களது வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் இவ்வளவு சிரிக்க சிரிக்க காண்பிக்க முடியுமா?!!! முடியும் என காண்பித்திருக்கிறார் க்ரிஷாந் R. K! சேரிவாழ் இளைஞர்கள் ஐந்துபேர் (well, actually, 4 1/2 பேர்!) தங்கள் காலனி ஹீரோ ப்ரிட்டோ போல தங்களுக்கும் மக்கள் சிலை வைக்கவேண்டும். அதற்கு அவர்களது கோவில் திருவிழாவை ஜாம் ஜாமென நடத்தி பிள்ளையார் சுழி இடவேண்டும் என தொடங்க, இவர்கள் தொட்டதெல்லாம் ஏழரை சனி போல தொந்தரவு செய்ய, இவர்களது லட்சியம் என்ன ஆகிறது என்பதை ஏராளமான எதிர்பாரா நிகழ்வுகளுடன், ஒரு அட்டகாசமான நகைச்சுவை உணர்வுடன் எடுத்திருக்கிறார். ரவுடிகள், நேர்மையற்ற காவல்காரர், சந்தர்ப்பங்கள், சந்தர்ப்பவாதிகள் என அடிப்பொலி சம்பவம் இந்த சீரீஸ். Visual humour ஐ அக்கடபூமி சேட்டன்கள் போல இந்தியாவில் வேறு எவரும் கையாளவில்லை இன்றுவரை! Their humour is of the type that has to be seen to be enjoyed but cannot be explained to anybody... சேட்டன்ஸ், சேச்சிஸ்! திர...

மூன்று காதல்களும் நானும்!

  நிஜத்தின் மிக அருகில் இரண்டு  'பிரிவு'கள். நிஜமான பிரிவின் மிக அருகில், நான்! ஒரு பதின்பருவ காதலை வாழ்வு கலைத்துப்போட, இருபதாண்டு கழித்து இருவரும் பள்ளித்தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த 'ஒன்றுகூடல்' நிகழ்வில் மறுபடி சந்தித்து, எவ்விதம் வாழ்வு கலைந்து போனது என்பதை பேசி உணர்த்தி, உணர்ந்து... பிரியப்போகிறோம் என்கிற பரிதவிப்பில் கடந்த காலம் முழுவதும் தொடாமலே பிரிந்த இருவரின் கரங்களும் ஒரு கார் கியர் குமிழில் இணைகின்றன. இணைந்த கரங்கள் இணைந்தபடி கியர் மாற்றி எதிர்காலத்திற்கு காரை நகர்த்தி முன்னேறுகின்றன. இது எவ்வகையான காதல் என்கிற தர்கங்களுக்குள் அடங்காத இவர்களின் காதல் இந்த வாழ்வின் எஞ்சிய துளிகளை இணைந்தே கடப்போம் என உறுதிகொண்டு மறுபடியும் பிரிந்துபோகிறது அவரவர் வாழ்வை தொடர. அந்த கியர் நிகழ்வு வரை அவளை கண்கொண்டு நோக்கவே தயங்குபவன், அதன் பின் அவள் பிரியப்போகிற நிமிடங்களில் வைத்த கண் இமைக்காமல் அவளையே பார்க்க, பார்வையின் வலியை தாங்க இயலாது அவனது கண்களை கரங்களால் மூடி, அவள் அழுதுகொண்டே விடைபெறுகிறாள். இவர்களுக்கு நாற்பதாண்டுகள் முன்பு இன்னொரு ஜோடி, இதோ இந்த நொடியில் பிரியப்போகிற...

ஒரு பிடி சோறு

தஞ்சையில் மேகியை சந்தித்த அதே நாளில் இன்னும் இரு மனிதர்களையும் சந்தித்தேன். செல்லம்மாள் என்கிற பாரம்பரிய உணவகத்தில் முன்பதிவு செய்து ஒரு குழுவாக உணவருந்த சென்றிருந்தோம். அருமையான சுவையில் வீட்டு சமையலாக உணவு ருசித்தது. எங்கள் அனைவருக்கும் உணவு பரிமாறிய ஜோதி எனும் பெண்ணுக்கு பின்னிருபதுகளில் வயது இருக்கும். தஞ்சையை சுற்றி உள்ள சிற்றூர் மக்களுள் ஒருவர். பாந்தமாய் தலை வாரி, நறுவிசாக சேலை உடுத்தியிருந்தார். மிகுந்த கவனத்துடன் நேர்த்தியாக அனைவருக்கும் உணவு பரிமாறினார். "அவங்க கண்ணை பாத்தியா?" என்றான் என் தோழன். கடல் நீலமும் சற்றே பச்சையும் மின்னும் ஐரோப்பிய கண்கள்! சேலை தவிர்த்து மேற்கத்திய உடை அணிந்து தலை அலங்காரத்தையும் மேற்கத்திய முறையில் மாற்றிக்கட்டினாரென்றால் ஒரு நிசமான ஐரோப்பிய பெண்ணாகவே இருப்பார் இந்த ஜோதி என உணர்ந்தோம்.  'நம்ம ஊரு பொண்ணுக்கு எப்படி இந்த நிறத்தில் கண்கள்?' என மீண்டும் வினவிய நண்பனுக்கு இது பற்றி என் மானசீக ஆசான்களுள் ஓருவரான எழுத்தாளர் திரு. சுஜாதா தனது ஸ்ரீரங்கத்து தேவதைகளில் எழுதியிருந்ததை விவரித்தேன். (கோவில் காண வரும் மேலை நாட்டு ஆண்களுக்கு இங்...

மேரி மாதா மேகியிடமும் வருவாரா?

இந்த முறை தஞ்சை பயணத்தில் சரபோஜி கல்லூரி அருகிலுள்ள சுப்பையா மெஸ் க்கு திரும்பும் சாலை முனையில் Magi யை சந்தித்தேன். அங்கு சாலை ஓரமாக நிறுத்தியிருந்த ஒரு பழைய அம்பாசடர் காரில் அமர்ந்திருந்தார். ஒல்லியான உருவம், மிக பழுப்பான சுடிதார் அணிந்திருந்தார். சில வருடங்களாகவே அந்த கார் அங்கே இருந்திருக்கிறது என்பது இதன் தோற்றமே அறிவித்தது. காரின் உட்புறம் எங்கும் பழைய ஞெகிழி பாட்டில்கள், ஞெகிழி சாக்குகள் என ஒரு பெரிய குப்பைத்தொட்டி போல அந்த கார். உணவுப்பொட்டலம் ஒன்றை அவரிடம் தந்தேன். Thank you! May I know your Name? என்றார், தெளிவான ஆங்கிலத்தில் கனிந்த குரலில் Magi. இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அறிமுகம் செய்துகொண்டு, Who are You? Why do you live in this condition? Aren't there any help available? என்றேன். தங்குதடையற்ற ஆங்கிலத்தில் Magi தன் இருப்பை இப்படி சுருக்கமாக சொன்னார்; 'சென்னை கிரிஸ்டியன் கல்லூரியில் ஆங்கிலப்பேராசிரியை. திருமணம் வேண்டாமென தனித்து வாழ்வு. தஞ்சையில் பழைய பேருந்து நிலைய பகுதியில் சொந்த வீடு என நன்றாகத்தான் வாழ்ந்தேன். ஒரு குடித்தனக்காரர் வீட்டை காலி செய்ய முடியா...

ராம்கி - இறுதி பகுதி: புத்தி கொள்முதல்!

தேவைகளே கண்டுபிடிப்புகளின் அடிப்படை என்பதற்கேற்ப நாங்கள் ஆடுகளையும் நாய்களையும் காப்பாற்ற தோட்டத்திற்கு அருகிலுள்ள வீட்டு மனிதர்களை 'கண்டுபிடித்து (மரங்கள் சூழ்ந்த தோட்டங்களுக்குள் மறைந்திருக்கும் கேரள கிராம வீடுகள்!) உதவி கேட்டோம். ஒரு சேச்சி நாய்களுக்கு உணவு தர சம்மதித்தார். ஒரு சேட்டன் ஆடுகளுக்கு இலை தழை ஒடித்து உணவாய் தர சம்மதித்தார். இன்னொரு சேட்டன் சில நாட்களில் நாய்களை தாமே வளர்க்க முன்வந்து அழைத்துச்சென்றார். இன்னொரு சேட்டன் ஆடுகள் அனைத்தையும் விலை கொடுத்து வாங்கிக்கொள்ள முன்வந்தார். இப்படி அடுத்த சில வாரங்களில் ஒவ்வொரு சிக்கலாக தீர்வு கண்டபோதும், தோட்டத்தை பார்த்துக்கொள்ள மனிதர்கள் கிடைக்கவில்லை. ராம்கியும் அவனது அம்மாவும் எங்களது தொடர்பு எல்லைக்கு வெளியே வெகு வெளியே சுற்றிக்கொண்டிருந்தார்கள். பல நாட்கள் தேடலின் பின்பு ஒரு நல்ல குடும்பம் தோட்டப்பணிக்கு வர, நாங்கள் நிம்மதி பெருமூச்சுடன் வீடை சுத்தம் செய்து கொடுத்தோம்: ராம்கி வாங்கிய புதிய டி.வி யை பாதி விலைக்கு விற்று கடையின் தவணையை முடித்தோம். அவன் தவணை முறையில் வாங்கின மரக்கட்டிலுக்கு மீதமிருந்த தொகையை கடையில் செலுத்தி அந...

போகுதே போகுதே, என் பைங்கிளி காரிலே!

  ராசாத்தீ என்னுசுரு என்னுதில்ல... ஒரு கார் நிறைய தினுசு தினுசாய் ஆட்களுடன் வந்து இறங்கிய பெண்ணின் பெற்றோர் (ஊர்ல மாட்டிகிட்ட ராம்கியோட கூட்டாளி மேப்பு போட்டு அனுப்பிருக்காப்ல!) வீட்டின் வெளியே நின்றுகொண்டே பஞ்சாயத்து பேசியிருக்கிறார்கள், இரவெல்லாம் கண் விழித்து நெடுந்தூரம் பயணம் செய்து வந்து சேர்ந்த களைப்பு + நிகழ்வின் மீதான ஆத்திரம் என கலவையான உணர்வுகளுடன். சாம, பேத, தண்டம் என்கிற மூன்று வழிகளில் பேச்சுவார்த்தை: 'அம்மா, எங்களோட வந்திடும்மா. கல்யாண வயசு வந்ததும் நாங்களே கட்டி வைக்கிறோம்...'. என சாம வழியில் தொடங்கி, 'இப்ப மட்டும் அவசரமா கல்யாணம் ஊர்ல அரேஞ்சு பண்ணியிருந்தீங்களே? அப்ப நாங்களே பண்ணீட்டா மட்டும் ஏன் வெயிட் பண்ணனும்' என பெண் எகிறவும் வேறு பல சமாதானங்கள் பேசப்பட்டு பெண்ணின் பிடிவாதத்தை அசைக்க முடியாததால் அடுத்து பேத வழி: 'ஒனக்கு என்ன தகுதி இருக்குன்னு எங்க பொண்ண கட்ன?' என ராம்கியிடம் எகிறி, ராம்கியின் மௌனம் + பெண்ணின் பிடிவாதம் ஆத்திரத்தை அதிகமாக்க, அடுத்த வழி, தண்டம்: பேசிக்கொண்டே சூடான பெண்ணின் சிற்றப்பா பளாரென அவளை அறைந்துஅவளது கைகளைப்பிடித்து தரதர...

ராம்கி என்ன செய்யப்போகிறான்?

  (ராம்கியின் கதை மேலும்  தொடர்கிறது). அடுத்த இரண்டு மாதங்கள் ராம்கி தோட்ட வேலைகளில் மும்முரமாய் இருந்தான். எங்களை சந்திக்கும்போதெல்லாம் நன்றியுணர்வு மின்னும் கண்களுடன் மெல்லிய குரலில் பேசுவான். அவனுக்காக ஆறு ஆடுகளும் வாங்கித்தந்திருந்தோம். டி.வி, மொபைல் தவணை கடன்களை அந்த இரு மாதங்களில் பாதி அடைத்துவிட்டான். அவ்வப்போது அருகில் உள்ள பேரூரின் மருத்துவமனையில் அம்மாவுக்கு வேண்டிய மருந்துகள் வாங்கி வருவான். ரிஸ்க் எடுத்து இவனை தொடரச்சொன்ன எங்கள் முடிவு சரிதான் என்கிற உணர்வுடன் அவனை 'திறந்த வெளி பல்கலைக்கழகத்தில்' சேர்ந்து படிக்கிறாயா என கேட்டிருந்தோம். சரி என்று சொல்லியிருந்தான். தென் மேற்கு பருவமழை பெய்துகொண்டிருந்த இன்னொரு மழை நாள் இரவில் வினு மறுபடி மொபைலில் அழைத்தார்... 'சாரே, ஆயாளு வீட்டில் ஒரு பெண்குட்டி வந்நு!' என்றார். அவனது சகோதரியாக இருக்கலாம் என்றோம். "இல்ல சாரே, இது வேற!' என்றார். இதென்ன சோதனை என உடனே அவனை மொபைலில் அழைத்தோம். எடுக்கவில்லை. பல முறை முயன்றபின் அவனது அம்மா எடுத்து பேசினார்... ராம்கி உயிர்க்கொல்லி அருந்திய இரவில் அவசரமாய் ஊரை விட்டு ஓடிப்போன...

விடிஞ்சா கல்யாணம்டா ராம்கி!

  (ராம்கியின் கதை தொடர்கிறது) மறு நாள் அதிகாலையில் மருத்துவமனையை அழைத்தோம். தூங்கிக்கொண்டிருக்கிறான், விரைவில் நலமடைவான் என அறிந்து கொண்டோம். அன்று முழுவதும் அவனது தூரத்து உறவுகளுடன் பேசியபோது மெல்ல மெல்ல காரணங்கள் புரியத்தொடங்கியது. கோவையின் மலைக்கிராம பள்ளி ஒன்றில் ராம்கி ஒன்பது-பத்து வகுப்புகள் படித்துக்கொண்டிருந்த காலம். அவனது வகுப்பு ஆசிரியை, பள்ளிக்கூட அலுவல்களுக்கு இடையில் ராம்கியை அவ்வப்போது கடைக்கு அனுப்பி  (ஊர்க்கார பையன், இருவரது சொந்த ஊரும் ஒன்றே என்பதால்) மளிகைப்பொருட்கள், காய்கறிகள் என வாங்கச்சொல்லி, வாங்கியதை அவரது வீட்டில் சேர்க்கச்சொல்லி வேலை வாங்குவார். அவரது கணவரும் ஏதோ அலுவலகத்தில் வேலை. ராம்கி வயதை ஒத்த ஒரு மகள் அவருக்கு. பல நேரங்களில் ராம்கி அவரது வீட்டு கதவை தட்டும்போது அவள்தான் திறப்பாள். நட்பு மலர்ந்து, "அறியாத வயசு, புரியாத மனசு...ரெண்டும் சேர்ந்து காதல் செய்யுதே" என பழகத்தொடங்க, தாமதமாக தெரிந்துகொண்ட ஆசிரியை ராம்கியை கடுமையாக மிரட்டி பள்ளியிலிருந்து நீக்குகிறார். ஏனென்று கேட்க அப்பா என ஒருவரும் அவனது வீட்டில் இல்லை. ஆனாலும் சிறுசுகளின் தொடர்பு தொடர்...

சாரே, ஆயாளு பாய்சன் அடிச்சிருக்கு சாரே!

  சாரே, ஆயாளு பாய்சன் அடிச்சிருக்கு சாரே! வினு, அட்டப்பாடியில் எங்கள் தோட்டம் இருக்கும் சிற்றூரில் இருந்து ஒரு மழைபெய்துகொண்டிருந்த முன்னிரவில் அழைத்து சொன்னார். ஆயாளு - ராம்கி என்கிற மகேந்திரன். அந்த இளைஞனை எங்கள் தோட்டப்பொறுப்பாளராக அமர்த்திக்கொடுத்தவர், 'ரொம்ப கஷ்டப்படுகிற குடும்பம் சார். அப்பா அம்மா தகராறு. பையன் அம்மா, தங்கைனு தனியா மலைல வாழ்க்கை. அக்காவை கட்டி கொடுத்து, தங்கையை படிக்க வைத்து என நித்ய போராட்டம் சார். நல்லா தோட்ட வேலை செய்வான். நம்பி சேத்துக்கலாம், என் மனைவியோட தூரத்து உறவு' என சில மாதங்கள் முன்புதான் பரிந்துரைத்திருந்தார்.  "வரச்சொல்லுங்க. நேர்ல பாத்து பேசிடலாம்.என்ன வயசிருக்கும்?" என்றோம். இருவது இருக்கும் என்றார். மறு வாரமே ராம்கி, அம்மாவை அழைத்துக்கொண்டு வந்தான். தங்கை கோவையில் ஒரு அரசுக்கல்லூரியில் விடுதியில் தங்கி படிப்பதாக அறிந்தோம். நேரில் பார்க்க பதின்ம வயது தாண்டாத தோற்றம். ஆனால் வயது கேட்டபோது இருபது என்றான். களையான முகம், உடல் உழைப்பை அடிப்படையாக கொண்டோரின் உடலமைப்பு. அவனது அம்மா மிக பயந்நு பயந்து பேசினார். அறிமுகம் செய்த மனிதரிடம், ...